கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்

0 comments
கடலில் அதிக வளங்கள் இருந்தும், நமக்கு தெரிந்த மீன்வளத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதால் மீன்வளம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன பணியாளர் நியமன மற்றும் மதிப்பீட்டு மைய தலைவர் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார்.

இவ்வாறு சென்னயில் தேசிய கடல்சார் மையம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் 8 வது ஆழ்கடல் கனிம சுரங்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசுகையில் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார். 

அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில், நாம் மனிதவளம் சிறப்பாக இருப்பதற்காக பூமியின் மேல் பரப்பில் உள்ள அனைத்து வளங்களயும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் சந்திரனில் இருந்தும் ஹீலியம் 3 மற்றும் இதர கனிம வளங்கள எடுத்து வரவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

இவையெல்லாம் அறிவியல் அளவில் நல்ல சிந்தனகளே. ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல.

கடலில் அதிக அளவில் வளங்கள் இருந்தும் பெரும்பாலனாவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. நமக்கு தெரிந்த மீன்வளங்கள மட்டும் நாம் அதிக அளவில் பயன்படுத்கிறோம். எதிர்காலத்தில் மீன் வளங்களே இல்லாத நிலை ஏற்படும். மீன்வளங்கள் தொடர்ந்து பாதுகாக்க ஒழுங்குமுறே நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும்.  

இது மட்டுமல்ல கடலில் மங்கனீஸ், சல்பட் மற்றும் வாயு படிமங்கள் அதிக அளவில் உள்ளன. நமக்கு தேவையான மாற்று எரிசக்தி கடலில் ஏராளமாக உள்ளது.

கடல் சூரியனிடமிருந் சக்தியை பெற்று தன்னகத்தே எரிசக்தி வளங்கள கொண்டுள்ளது. கடல்வள ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வாயு படிமங்கள், கடலில் உள்ள எரிசக்தி ஆகியவற்றை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் சில தொழில்நுட்பங்கள இந்தியாவில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி தொழில்நுட்பம் மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். இதில் கடல் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பமும் ஒன்று.

இபோன்ற ஒரிரு சாதனைகள் செய்யப்பட்டாலும் இன்னும் நாம் கடல்சார் துறையில் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டியுள்ளன

உலக அளவில் கடல்சார் ஆராய்ச்சியில் தற்போது போதிய அளவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்பம் வல்லுனர்களும் இல்லாததது பெரும் குறையாகவே உள்ளது.

அத்துடன் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் எரிசக்தி முக்கிய பங்காற்றுகிறது. அதாவது நாட்டில் உள்ள 40 கோடி மக்கள் நாளென்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயும் 30 கோடி மக்கள் இரண்டு டாலருக்கு குறைவாக வருவாயை பெறுகிறார்கள்.

இதே போன்று நாம் 10 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைய வேண்டும் என்றால், நம்முடைய எரிசக்தி ஆண்டுக்கு தற்போது உள்ளதைவிட 5 விழுக்காடு அதிகமாக தேவைப்படுகிறது. 

இன்று எரிசக்தி தேவையில் 90 விழுக்காடு பெட்ரோலிய பொருட்களிலிருந்தும், மீதமுள்ள 10 விழுக்காடு காற்று, பிறசக்திகளிலிருந்து பெறுகிறோம். எதிர்காலத்தில் இந்த எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடலில் ஏராளமான எரிசக்தி வளங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கடல்வளம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த பரிந்துரைகளை, ஆழ்கடல் கனிம சுரங்கம், கடல் தொழில்நுட்பம் மற்றும் கடல் வளங்கள் சார்ந்த துறைகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு பெற்று தர அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுடனும் இணந்து செயல்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோயல் தெரிவித்தார்.

சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜின் சூ ஜுங், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய பல்வேறு நாடுகள சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அறிவியல்,பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.    
read more...
கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்SocialTwist Tell-a-Friend

பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

0 comments

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.
நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)
நன்றி: http://mastanoli.blogspot.com/2010/03/blog-post_6094.html
read more...
பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?SocialTwist Tell-a-Friend

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]

0 comments
அளவில் சிறிய இலங்கைத் தீவு ஏதோவதொரு அம்சத்திற்கு இதுநாள் வரைக்கும் முன்மாதிரியாக விளங்கியதா என்றால் இல்லையென்றே கூறவேண்டும்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இல்லாதொழித்ததன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் முன் பழக்கப்படாத ஒரு கெளரவ நிலையில் தற்போது உள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற 'The Economist' என்னும் இதழ் எழுதியுள்ளது.
அது தொடர்ந்து எழுதியுள்ளதாதவது,

நெகிழ்வுப் போக்குடன் செயற்படாத உலகின் ஒருசில நாடுகள் தத்தமது நாடுகளில் நிலவும் கிளர்ச்சிசார் பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 'சிறிலங்காவில் கைக்கொள்ளப்பட்ட முறை' எதுவோ அது தொடர்பாக ஆராய்ந்து அறிவதற்கு விரும்புகின்றன.

அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் மியன்மாரது இராணுவச் சர்வாதிகாரியான தன் ஸ்வே [Than Shwe], கடந்த நவம்பரில் இலங்கைத் தீவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

'கிளர்ச்சிசார் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சிறிலங்காவினது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், பர்மாவிலுள்ள இனக்குழுமங்களின் செயற்பாடுகளுக்கு எதிரான முனைப்புக்களை ஜெனரல் தன் ஸ்வே மேற்கொள்ளக்கூடும்' என இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய சரிதையாளரான பெனெடிக்ட் றோகேஸ் கூறுகிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சிறிலங்காவில் பெறப்பட்டிருப்பதை உலகம் கண்டிருக்கும் அதேநேரம் தனது நாட்டில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிசார் போராட்டங்களை அது மறந்துவிட்டது என கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் மியன்மாரின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் தாய்லாந்தினது பிரதமர் அபிகிஸ்ட் விஜயவ [Abhisit Vejjajiva] சிறிலங்காவினது பிரதமருடன் கடந்த ஒக்ரோபரில் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் [தென் தாய்லாந்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிளர்ச்சிகளுக்கு பாங்கொக் முகம்கொடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது].

சிறிலங்காவினது 'அமைதிக்கான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பு' என அது வர்ணிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தொடர் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புக்களைப் பெறுவதற்காக கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பயணம் செய்த பங்களாதேசின் இராணுவத் தூதுக்குழு சிறிலங்காவினது இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
தத்தமது நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோசமான விளைவுகளைத் தரவல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கொலம்பியா தொடக்கம் இஸ்ரேல் வரையிலான பலதரப்பட்ட நாடுகளையும் சேர்ந்த இராணுவ ஜெனரல்களும் அரசியல் வாதிகளும் சிறிலங்காவினது அனுபவத்தினைத் திரைமறைவில் பயன்படுத்துகிறார்கள் போலத் தெரிகிறது.

கிளர்ச்சிசார் முனைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு; சிறிலங்கா கற்றுக்கொடுத்திருக்கும் பாடமானது மூன்று முக்கிய அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் தலைவர் லுயிஸ் ஆர்பர் கூறுகிறார்.

முதலாவது, 'நெகிழ்வுப்போக்கற்ற போர் மூலோபாயம் [படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இராணுவத்திற்குப் பூரண சுதந்திரத்தினையும் அதிகாரத்தினையும் வழங்குவது, பயங்கரவாதிகளுடன் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்ற நிலை மற்றும் குறித்த அமைப்புத் தங்களை மீள ஒழுங்கமைக்க இடமளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்குச் செல்ல மறுத்தல்].

இரண்டாவது, ஆயுதம் தரித்த போர் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டினைப் புறம்தள்ளி அனைவர் மீதும் இலக்கு வைத்தல் [அண்மையில் வெளிவந்த அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினது அறிக்கை இதற்கான போதிய உதாரணங்களைக் கொண்டிருக்கிறது].

இறுதியாக, சர்வதேச மற்றும் ஊடகங்களின் கரிசனைகளுக்கு மதிப்பளிக்காது செயற்படுதல். 'ஊடகங்கள் அனைத்தும் எங்களின் கைகளில் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அமைதி முயற்சிக்கும் செல்லுமாறும் பேச்சுக்களில் ஈடுபடுமாறும் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை' என அதிபர் ராஜபக்சவினது செயலகத்தினைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்தியாவின் பாதுகாப்பு மீள்பார்வை Indian Defence Review என்ற சஞ்சிகையில் வெளிவந்த பத்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'கிளர்ச்சிசார் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜபக்சவினது முறை இராணுவச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது....பயங்கரவாதம் என்பது இராணுவ ரீதியிலேயே இல்லாது ஒழிக்கப்படலாமேயன்றி அரசியல் ரீதியில் அல்ல' எனக்கூறி பத்தியாளரான வி.கே சசிக்குமார் தனது பத்தியை நிறைவு செய்கிறார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கைக்கொள்ளும் மூலோபாயத்திற்கு நேரெதில் மாறான தன்மையினை இது கொண்டிருக்கிறது. இருப்பினும், உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிளை முடிவுக்குக் கொண்டுவந்த சிறிலங்காவினது முறை தொடர்பில் சர்வதேச ரீதியில் அனைவரும் அறிய முற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100522101163
read more...
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]SocialTwist Tell-a-Friend

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?

0 comments
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!



நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?!

இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும் சில/பல செயல்கள்தான் காரணம்னு புரியும்!

மூளை/மன ஆரோக்கியம் (Mental Well being)!

அதுல மிக முக்கியமானவை உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை அப்படீங்கிற ரெண்டும்தான்னு இதுவரையிலான, ஆயுட்காலம் குறித்த ஆய்வுகளும், அறிவியல் வரலாறும் வலியுறுத்தி வந்தன. ஆனா, நீண்ட ஆயுளுக்கு காரணமாக மூனாவதா ஒரு விஷயமும் இருக்குன்னு சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கின்றன. அது என்னன்னா, உடல் ஆரோக்கியமல்லாத, ஒவ்வொருவருடைய மூளை/மன ஆரோக்கியமான “Mental Well being” அப்படீங்கிறதுதான்!

மூளை/மன ஆரோக்கியம் பத்தின ஆய்வையும், அதன் செய்திகளையும் வெகு விரைவில், நாம ஒரு தனிப்பதிவுல பார்ப்போம். அப்போ, இந்தப் பதிவுல என்னத்த பார்க்கப் போறோம்?

உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய , அதை நேரடியாக பாதிக்கக் கூடிய “உறக்கம்” பத்தியும், உறக்கமின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள்(விளைவுகள்), மூளைபாதிப்பு, இவையனைத்தும் ஒரு சேர எப்படி நம் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடுகின்றன அப்படீங்கிறதப் பத்தியும்தான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப்போறோம்!

நம் ஆயுட்காலமும் உயிரியல் கடிகாரமும்!

சமீபத்துல, Aging அப்படீங்கிற மருத்துவ மாத இதழ்ல வெளியான, அமெரிக்காவின் ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ட்ரோசோஃபிலா அப்படீங்கிற பழபூச்சியில மேற்கொள்ளப்பட்ட ஆய்வுல, (நம்) அன்றாட விழிப்பு-உறக்க (Circadian rhythms) நேர அளவுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மரபனு, ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்தையும் (விரைவில் இறந்து போகும் அளவுக்கு) வெகுவா பாதிக்கிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

உயிரியல் கடிகாரம்/ உடலியக்க சுழற்ச்சி!



ஒரு உயிரினத்தின் உடலில், ஒவ்வொரு 24 மணி நேரமும் நிகழும், பல்வேறு விதமான உடலியக்க செயல்பாடுகளின் சுழற்ச்சியை உடலியக்க சுழற்ச்சி (Circadian rhythm) அல்லது உயிரியல் கடிகாரம் (Biological clock) என்றும் சொல்வதுண்டு! (பார்க்க படம்)

"மனித உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி" (படம்: Wikipedia)

மேலே இருக்குற படத்துல குறிப்பிட்டிருக்கிற விஷயங்களை (ஆங்கிலம்) பார்த்தோமுன்னா, அடிப்படையில உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி அப்படீங்கிறது என்னன்னு புரியும். சுருக்கமா சொல்லனும்னா, ஒரு நாளில் சூரிய ஒளியின் பாதிப்பினால், மனித உடலின் பல்வேறு பகுதியின் செயல்கள்/இயக்கங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன (நல்லவிதமாகவும்/தீயவிதமாகவும்) என்பதை காட்டும் ஒரு கடிகாரம்தான் இந்த உயிரியல் கடிகாரம்!

உதாரணத்துக்கு, ஒரு நாளில் நாம எப்போ தூங்குகிறோம்/எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து , நம் உடலின் பல்வேறு இயல்பான இயக்கங்களான, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், பல்வேறு என்சைம்/ஹார்மோன் சுரத்தல், கழிவுகளை வெளியேற்றும் தசைகளின் செயல்பாடு (சிறுநீரகம்), மூளை செயல்பாடு போன்றவை மாறுபடும். அதனால, நம்ம உயிரியல் கடிகாரத்தை நல்லபடியா வச்சிக்கலைன்னா, நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு!

உயிரியல் கடிகாரத்துக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய தெளிவான இந்த காணொளியையும் பாருங்க……

சரி இதுவரைக்கும் நாம, உயிரியல் கடிகாரம்னா என்ன, அது சரியாக பராமறிக்கப்படலைன்னா என்னவாகும் அப்படீங்கிறதையெல்லாம் பார்த்தோம். இனி (உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய) பதிவுச் செய்தியை விரிவா பார்ப்போம்.

அனுவிலிருந்து மரபனுவரை……

கடந்த 1950-ஆம் ஆண்டுவரை, உயிரியல் ஆய்வுகள் எல்லாம் “அனுக்கள்” அளவில் மட்டும்தான் சாத்தியப்பட்டது என்பது உயிரியல் துறை வரலாறு. அந்தத் தடையை தகர்த்தெறிந்து, “அனுவைப் பிளந்து” அதனுள்ளிருக்கும் “மரபனு” என்னும் மகத்துவத்தை டி.என்.ஏக்களாக அடையாளம் காட்டிய பெருமை, மூலக்கூறு அறிவியல் விஞ்ஞானிகள் திரு.ஜேம்ஸ் வாட்சன் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் க்ரிக் என்னும் இருவரையே சாரும்!

1950-களில் தொடங்கிய மரபனு ஆய்வுகள், படிப்படியாக வளர்ந்து பின் 1980-களிலிருந்து ஒரு அசுர வளர்ச்சியைக் கண்டு , இன்று மனிதன் தன் மரபனு அட்டையைப் பயன்படுத்தி, தன் மூலக்கூறுகளின் முழுமையான விவரங்களை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு அதிசயத்தக்க நிலையை அடைந்துள்ளது ஒரு உலக அதிசயமே என்றால் அது மிகையல்ல!

“கால” மரபனுவும் நம் ஆயுட்காலமும்!

இப்போ நமக்கு தெரியவேண்டியதெல்லாம், “கால” மரபனுன்னா என்ன, அதுக்கும் நம்ம ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? உயிரினங்கள் ஏன் மூப்படைகின்றன அப்படீங்கிற ஒரு அடிப்படைக் கேள்வியோட பழப்பூச்சியில தன் ஆய்வைத் தொடங்கின திரு. நட்ராஜ் கிருஷ்ணன், ஒரே வகையான உளைச்சல்/பாதிப்புகளை, இளமையானவர்கள் மிகுந்த சிரமமின்றி சமாளித்து விட, முதியவர்கள் சமாளிக்க முடியாமல் தங்கள் ஆயுட்காலத்தை குறைத்துக்கொள்கிறார்கள் அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார்!

பழப்பூச்சிகளில் (Drosophila) மேற்கொண்ட இந்த ஆய்வில், “கால மரபனு (Period gene)” என்ற, உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு மரபனுதான், ஒரு உயிரினத்தின், உளைச்சலை சமாளிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலத்துக்கு அடிப்படைக் காரணியாக உள்ளது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார் ஆய்வாளர் கிருஷ்ணன்!

இந்த கால மரபனுவானது, பரிணாமத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு உயிரினங்களிலும், மனிதனின் ஒவ்வொரு அனுவிலும் செயல்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மரபனுகளில் ஒன்றான கால மரபனுவின் செயல்பாடானது,

* போதிய உறக்கமின்மை
* வேறுபட்ட பணிக்காலம் (Day or night shift work)
* ஜெட் லாக் என சொல்லப்படும் உலக நேர மாற்றம்

போன்ற ஏதேனும் ஒரு செயலினால் பாதிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாம, திரிந்த/சேதமடைந்த கால மரபனுவினால், நடுவயது/வயதான உயிரினங்களின் ஆயுட்காலமானது 12 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துபோகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது! மொத்தத்தில், வயதாக வயதாக கால மரபனுவில் செயல்பாடு வெகுவாக குறைந்து, உயிரினங்களின் உளைச்சலை சமாளிக்கும் திறன் குறைந்து, நரம்புகள் சேதமடைந்து, அதன் விளைவாக ஆயுட்காலமும் வெகுவாக குறைந்துபோகிறது என்கிறது கிருஷ்ணன் அவர்களின் ஆய்வறிக்கை! என்ன கொடுமை சரவணன் இது?!

இந்தச் செய்தியின் ஆய்வறிக்கையை விரிவாகப் படிக்க இங்கு செல்லுங்கள்




Thanyou: http://padmahari.wordpress.com/2010/04/14/%
read more...
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?SocialTwist Tell-a-Friend
0 comments

Chronicling cultures

Not a professionally trained person and unperturbed by the struggles and travails in his life, documentary maker Dinakaran Jai has learnt and refined his skills on his own
PRODUCER'S TAKE
This dusky young man's sunny smile is quite infectious. Even after two hours of gruelling photo shoot in open fields with the sun beating down, he retains his cheerfulness.
There is absolutely no trace of fatigue much like his never-say-die attitude towards his work. In less than five years he has churned out 40 documentaries. And he is just 29, all set to tie the nuptial knot on April 18.
An opportunity to watch a series of documentaries on Indian freedom fighters, titled ‘Kaalam', brought me closer to docu-maker Dinakaran Jai.
“I wanted to document the chronicles of those who laid their lives for the country's freedom for the benefit of the future generation. I am also focussing on recording the richness of our culture and tradition in my next endeavour,” the no-nonsense filmmaker kickstarts his conversation with me. 
thanks to hindu 

read more at
http://beta.thehindu.com/life-and-style/metroplus/article398776.ece

 

read more...
SocialTwist Tell-a-Friend

கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!

0 comments
வாஷிங்டன்: கொசுக்களை லேசர் மூலம் ஒழிக்கும் சாதனத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

ஃபோடானிக் ஃபென்ஸ் என்றழைக்கப்படும் இந்த சாதனத்தை வாஷிங்டனில் உள்ள இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதைசுவற்றிலோ அல்லது வேலிகளிலோ பொருத்தி விட்டால் அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், கொசுக்களை கண்டுபிடித்து 'எரித்துவிடும்'.

இந்த லேசர் சாதனம் கொசுக்களை மட்டுமே அடையாளம் கண்டு அழிக்கும். மற்ற பட்டாம்பூச்சி உள்ளிட்ட மென்மையான பூச்சிகளை தொந்தரவு செய்யாது.

மேலும், இந்த சாதனத்தின் மூலம் கொசுக்களிலேயே ஆண், பெண் இனத்தையும் தனியாக பிரித்து அறியலாம். மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் என்பதால் அவற்றை மட்டும் குறிவைத்து ஒழிக்கவும் இயலும். (ஒவ்வொரு பூச்சியின் இறக்கை அசைவிலும் உள்ள வி்த்தியாசம் உண்டு. அதிலும் ஆண்-பெண் பூச்சிகளின் இறக்கை அசைவிலும் கூட வேறுபாடு உண்டு. அதை வைத்து பெண் கொசுவை மட்டும் தனியே பிரித்து இந்த லேசர் பாயும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்)

சர்வேதேச அளிவில் மலேரியா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பி்ல் கேட்சின் அறக்கட்டளை தான் நிதியுதவி அளித்துள்ளது.

கொசுவை ஒழிக்க லேசரா.. பயங்கர செலவு பிடிக்குமே என்று நினைக்காதீர்கள் என்கிறது இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம். விளையாட்டு பொம்மைகளில் உள்ள சாதாரண லேசர் தொழில்நுட்பத்தைத் தான் இதில் பயன்படுத்தியுள்ளோம் என்கின்றனர்
http://thatstamil.oneindia.in/news/2010/02/19/new-laser-zaps-mosquitoes.html
read more...
கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!SocialTwist Tell-a-Friend

புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறது

1 comments
மதுரைஅடுத்து உள்ள ஒத்தக்கடை யானைமலையை குடைந்து சிற்பக்கலைநகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மேலூர் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
read more...
புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறதுSocialTwist Tell-a-Friend

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்

0 comments
பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்
read more...
மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்SocialTwist Tell-a-Friend

குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி.!

0 comments
இனவெறி தாக்குதல் காரணமாக, வரும் ஆண்டில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களின் வருகை குறையும் என்பதால், ஆஸ்ட்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது இந்த ஆண்டில் பல முறை இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.



இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.



இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.



இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.



விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது. thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/30/1091230089_1.htm
read more...
குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி.!SocialTwist Tell-a-Friend

'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'

0 comments
மலேசியாவில் விரைவிலேயே இந்திய இனத்தவர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.


read more...
'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'SocialTwist Tell-a-Friend

வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!

0 comments
திபெத்தியர்களால் வாழும் புத்தர் என்று போற்றப்படும் பெளத்த மதத் துறவியான ்பிர்பு ரின்போச்சே மீது ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தி, எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது சீன நீதிமன்றம்.




புத்தரின் 5வது அவதாரமாக திபெத்தியர்களால் கருதப்படும் ரின்போச்சேயை ‘புரன்கமா’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திபெத்தை சீனா கைப்பற்றிய 50வது ஆண்டையும், தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறிய நாளையும் நினைவுறுத்தி திபெத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ரின்போச்சேயை கைது செய்தது சீன அரசு.

read more...
வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!SocialTwist Tell-a-Friend

சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!

1 comments
உங்கள் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் மானேஜர் ரவீந்திரனை முதன் முதலில் சந்தித்த தினம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ""ஐயம் ரவீந்திரா. பளாக் பெல்ட்'' என்று பூரிப்புடன் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். அந்தக் கெச்சலான உடம்பையும், சதா நாய் துரத்துவது போன்ற முழியையும் பார்த்தால் சற்றும் கராத்தே சண்டையன் போலவே இல்லை. மேற்கொண்டு விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் கறுப்பு பெல்ட் வாங்கியிருப்பது சிக்ஸ் சிக்மாவில்!






read more...
சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!SocialTwist Tell-a-Friend

தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்

0 comments
சென்னை & மதுரை: தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க 200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளது
read more...
தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்SocialTwist Tell-a-Friend

எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்

0 comments

வீரகேசரி இணையம் 12/4/2009 6:11:01 PM - புவி வெப்பமாதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் எதிர்காலத்தில் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்காக நேபாள நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற்றது.உலகத்தில் மிக உயரமான இடத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்தக் கூட்டம் பெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒக்சிஜன் நிரப்பப்பட்ட வாயுதாங்கிகளுடன் அங்கு சென்றிருந்தனர். மிகவும் குளிரான காலநிலையில் (17192 அடி உயரத்தில்) பனிநிறைந்த சிகரத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் சுவாரஸ்ய நிகழ்வாக உலகத்தவர்களால் பார்க்கப்படுகிறது.அந்நாட்டின் பிரதமர், அவருக்கு அடுத்த அந்தஸ்துப் பதவி வகிப்பவர் ஆகிய இருவருடன் 20 அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை, மாலைதீவுகளின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
(படங்கள் ஏ.எப்.பி)
thanks to http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=19391
read more...
எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்SocialTwist Tell-a-Friend

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல்

0 comments


நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும்.
ஆனாலும் அபெக் எனப்படுகிற ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு காலநிலை மாற்றம் தொடர்பில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
20 நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றிய ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவுகளிலிருந்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் டென்மார்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தையொட்டியதாக இம்மாநாட்டில் காலநிலை மாற்ற உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2050 ஆம் ஆண்டுக்குள் பச்சை இல்ல வாயுக்களை குறைப்பது தொடர்பான இலக்கு சம்பந்தமாக உடன்படிக்கையொன்றை உருவாக்குதல் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவே அறியமுடிகிறது.
ஆனாலும் இது தொடர்பான முடிவினை 2010 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெறவுள்ள உலகளாவிய வாணிப பேச்சுவார்த்தைகளின் போது காணலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவில் பெரியளவில் முக்கியப்படுத்திச் சொல்லக் கூடிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையாயினும் உலக காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரியதாகவே கொள்ளப்படுகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் அபிவிருத்தியடை ந்த நாடுகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இப்போதைய நிலையில் கடுமையானதொரு பிரச்சினையாகவேயுள்ளது.
பச்சை இல்ல வாயுக்களை 50 சதவீதத்தால் குறைப்பது தொடர்பான இலக்கு உலகளாவிய சமூகங்களைப் பொறுத்தவரை மிகவும் தேவையான ஒன்றாக இருக்கையில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக அது இருப்பதானது உலகில் ஏற்படப்போகும் வீணான தொல்லைகளுக்கு ஏதுவானதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை மையப்படுத்தி வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதற்கு ஆசியா பசுபிக் மாநாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமõ மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.
ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவ் மற்றும் ஒபாமா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் அடுத்து ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்திருந்த நாங்கள் எதிர்வரும் டிசெம்பரில் ஆயுத உடன்படிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்ற கருத்து மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் உள்ள தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி காலாவதியாகிறது. இதற்குப் பதிலாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் முகமாக மேற்படி இரு உலகத் தலைவர்களும் ஏற்கனவே பேச்சு நடத்தியிருக்கின்றனர். இருந்த போதும் அபெக் உச்சிமாநாட்டையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற வேளை பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் உறுதிமொழி அசைக்க முடியாதது என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ஆசியாவில் பாரிய பொருளாதாரமாக வளர்ந்துவரும் சீனாவுடன் நடைமுறை சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்புக் கொள்கையை அமெரிக்கா தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
பசுபிக்கிலுள்ள தமது அயல் நாடுகளை விட கிழக்கு ஆசிய நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வருகின்ற போதும் அமெரிக்கச் சந்தையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இந்நாடுகள் ஒபாமாவிடமிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கான சமிக்ஞைகளை எதிர்பார்த்திருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு விடுத்த அழைப்பிற்கு சீனத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
இதில் காலநிலை மாற்றம் தொடர்பில் அடுத்த மாதம் கொபன்ஹேகனில் நடைபெறவுள்ள மாநாட்டில் விரிவான உலகளாவிய உடன்படிக்கையொன்று எட்டப்படவேண்டியமை, வடகொரியாவின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் வடகொரியாவை மீண்டும் பங்குபற்ற வைப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பது போன்றன முக்கியப்பட்டிருக்கின்றன.ஒபாமாவுக்கும் சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோவுக்கும் இடையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மண்டபத்தில் இருமணிநேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உலக அரங்கில் சீனா தற்போது முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றனது. ஆனாலும் ஜப்பானுக்கு எதிரியான நாடாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றம் தொடக்கம் அணுவாயுதப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி வரை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய சவால்களுக்கான தீர்வை ஒரு நாட்டினால் மட்டும் எட்டமுடியாது என்ற உண்மை மாத்திரம் உண்மை என்ற நிலையில் அமெரிக்கா முக்கியப்படுத்தப்படுகின்ற நாடான சீனாவையும் இதில் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறது என்பதே முக்கியமானது.
இதே வேளை விடாப்பிடியாக இருக்கும் சீனாவின் திபெத் விவகாரத்தினைப்பற்றியும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதும் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள ஹூ ஜிந்தாவோ சமத்துவம், பரஸ்பரம், மரியாதை மற்றும் மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமென தெரிவித்திருக்கிறார்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ரீதியற்ற உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதே நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற போதும் அரசியல் மயப்படாத எந்தச் செயற்பாடும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
ஆசியப் பசுபிக் பிராந்திய பொருளாதார மாநாட்டிற்கு வந்த ஒபாமõ சீனாவுக்குச் செல்லவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

தேங்க்ஸ் TO http://tharakai.wordpress.com/2009/11/20/ஆசிய-பசுபிக்-பொருளாதார-à®®/

read more...
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல்SocialTwist Tell-a-Friend

கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் விஞ்ஞானிகள் சோதனை

0 comments

சென்னை, நடுக்கடலில் நிற்கும் கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள், கடலோர காவல் படையினர் கப்பலை ஆய்வு செய்து வருகின்றனர். விசாகப்பட்டினம் வைஷாக் துறைமுகத்தில் இருந்து கிரானைட் கற்களுடன் ஒரு சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. கப்பலை நிறுத்துவதற்கு பிளாட்பாரம் கிடைக்காததால் துறைமுகத்தில் இருந்து 1.6 நாட்டிகல் மைல் (3 கி.மீ) கடலில் கடந்த 2 நாட்களாக அந்த கப்பல் இருக்கிறது. இந்நிலையில் அந்த கப்பலில் கதிர் வீச்சு (ரேடியேஷன்) பொருட்கள் இருப்பதாக துறைமுக உயர் அதிகரிகளுக்கு தகவல் வந்தது. துறைமுக அதிகாரிகள் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விஞ்ஞானிகள் இன்று காலை சென்னை துறைமுகம் வந்தனர். அதிகாரிகளுடன் கலந்து பேசி கப்பலை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்பின் விஞ்ஞானிகள், கப்பல் படையினர், கடலோர காவல்படையினர் போன்ற அதிகாரிகளுடன் சேர்ந்து கப்பலை ஆய்வு செய்வதற்காக மற்றொரு கப்பல் மூலம் நடுகடலுக்கு சென்றனர். கப்பலை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
read more...
கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் விஞ்ஞானிகள் சோதனைSocialTwist Tell-a-Friend

சென்னையில் பலத்த மழை; 24 மணி நேரம் நீடிக்கும்

0 comments
வங்கக்கடலில் கன்னியாகுமரிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதன் காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

நேற்று பகலில் ஓரளவு வெயில் இருந்த நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டியது,மீண்டும் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகளில் போக்குவரத்து ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

thanks to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0911/15/1091115005_1.htm
read more...
சென்னையில் பலத்த மழை; 24 மணி நேரம் நீடிக்கும்SocialTwist Tell-a-Friend
0 comments
டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு



அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.
இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.
இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.
ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறியhttp://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.
ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது

thanks to http://today-world-news-update.blogspot.com/2009/11/blog-post_14.html
read more...
SocialTwist Tell-a-Friend

4 ஆஸ்திரேலிய கல்லூரிகள் திடீர் மூடல் - இந்திய மாணவர்கள் பாதிப்பு

0 comments
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும் கல்லூரிகள் இவை. இக்கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் உங்களுக்கு இனிமேல் வேலை இல்லை என்று கூறி கல்லூரிகளை மூடி விட்டனர். ஆனால் மாணவர்களிடமோ கல்லூரிகளை மூடி விட்ட தகவலைக் கூட கல்லூரி நிர்வாகம் அறிவிக்கவில்லை.கல்லூரிகளுக்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் , அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபடி கூடியிருந்தனர்.மெல்போர்னைச் சேர்ந்த மாணவி ஜாஸ் சந்து கூறுகையில், கல்லூரியை மூடியது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் எங்களில் பலர் இறுதியாண்டுத் தேர்வை முடித்து பட்டத்தை வாங்கவிருந்தனர்.நாங்கள் நன்றாகப் படித்து வந்தோம். கட்டணங்களையும் முறையாக கட்டி வந்தோம். யாரும் எந்த கட்டணப் பாக்கியும் வைத்திருக்கவில்லை. இப்போது கல்லூரிகளை ஏன் மூடினார்கள் என்று தெரியவில்லை. எங்களது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களில் இந்த கல்லூரிகளுக்கு 13 வளாகங்கள் உள்ளன.

thanks:http://thatstamil.oneindia.in/news/2009/11/07/world-4-australian-colleges-shut-shop.html
read more...
4 ஆஸ்திரேலிய கல்லூரிகள் திடீர் மூடல் - இந்திய மாணவர்கள் பாதிப்புSocialTwist Tell-a-Friend