Showing posts with label கார்த்திக். Show all posts
Showing posts with label கார்த்திக். Show all posts

சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!

0 comments
[ பிரசுரித்த திகதி : 2011-04-01 11:40:21 AM GMT    ]

லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது. கார்த்திக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னையில் தங்கியுள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் வீரண்ணராஜு கூறியதாவது:-

கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர்.   நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர். போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

நான் போட்டியிடும் தொகுதியில் (உசிலம்பட்டி) பார்வர்டுபிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் (கம்பம் தொகுதி) போட்டியிடும் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத் திருக்கலாம். இதனாலேயே எங்களை இடையில் இறக்கி விட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடத்தல் புகார் தொடர்பாக வேட்பாளர்கள் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தினர்.
thanks to http://www.tamilulakam.com/news/view.php?id=24841
read more...
சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!SocialTwist Tell-a-Friend

நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

0 comments
thanks to  http://election.dinamalar.com/election_news_detail.php?id=1129


சென்னை : நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் கூலி தொழிலாளி சுப்புலட்சுமி போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக், அவரது கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் 41 தொகுதிகளை தேர்வு செய்து, இதில் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன். தற்போது முதல் கட்டமாக 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று இரண்டு நாளில் தெரிவிப்பேன்.

ஜெயலலிதாவுக்கு சரியான வழிகாட்டி இல்லை. அவரது தன்னிச்சையான நடவடிக்கை, அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கருணாநிதி நாகரிகமாகவும், அனைவரையும் அரவணைத்தும் கட்சியை பலப்படுத்தி ஓட்டுகளை பெற முயன்று வருகிறார். தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்று வர்ணித்து வந்த ஜெயலலிதா, தேர்தலில் மெஜாரிட்டியான இடத்தை தன் கட்சி மட்டுமே பெற வேண்டும் என நினைத்து 160 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவரது நினைப்பும், செயல்பாடும் சரியானது தானா என தேர்தல் முடிவு வந்தால் தெரியும். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

போலி வேட்பாளர் : ""அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இல்லாத ஒருவர், தன்னை கார்த்திக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று குறிப்பிட்டு கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வேறு ஏதோ ஆதாயம் கருதி, மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்,'' என்று கார்த்திக் தெரிவித்தார்.
read more...
நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்புSocialTwist Tell-a-Friend