Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)

0 comments
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும். விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள் என நடிகை ஹேமமாலினி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
ஸ்பெயினின் பம்ப்லோனா எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வருடாந்திர San Fermin வீர விளையாட்டு திருவிழா இது. உடனடியாக இதை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்பெயினின் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரிக்கும் கடிதம் ஒன்று எழுதலாமே!

ஐரோப்பாவின் கோடை திருவிழாக்களில் மிக பிரபலம் வாய்ந்ததாம் இந்த புல்ஸ் ரன்னிங் திருவிழா.



http://www.4tamilmedia.com/index.php/lifestyle/youtube-corner/5475-bull-run-at-san-fermin-festival-in-pamploma
read more...
ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)SocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!

0 comments
டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டிய காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாடுகள் முட்டி கடந்த 20 ஆண்டுகளில் 200 பேருக்கும் மேல் உயிர் இழந்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டின் போது இருவர் இறந்தனர். மேலும் 215 பேர் காயம் அடைந்தனர்.

மிருகவதை சட்டத்துக்கு எதிரானது...

இந்த விளையாட்டு, மிருகவதை சட்டத்துக்கு எதிரானது. மாடுகள் பாய்ந்து வரும் போது அதை பிடிக்கும் ஆர்வத்தில், வாலை பிடித்து இழுத்தல், கொம்பை பிடித்து அமுக்குதல் போன்றவை தவிர காளையை பல்வேறு முறைகளில் சித்ரவதைப்படுத்துகிறார்கள்.

இதனால் காளைகளுக்கு வலி மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, மனித உயிர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

சட்டப்படி குற்றம்

இந்த விளையாட்டில் பங்கு பெற காளைகளை, வாகனங்களில் அடைத்து, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது காளைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பது இல்லை. வாகன பயணத்தின்போது காளைகள் நெருக்கமாக அடைக்கப்படுவதால், அவற்றால் நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது மிருக வதை சட்டப்படி குற்றம்," என்று கூறியுள்ளார்
thansks to http://thatstamil.oneindia.in/news/2011/07/02/hema-malini-urges-ban-on-sport-jallikattu-aid0136.html
read more...
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!SocialTwist Tell-a-Friend

சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலி

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/03/one-killed-jallikattu-near-trichy-aid0091.html
திருச்சி: திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர் ஒருவரை காளை முட்டியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
read more...
சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலிSocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 comments
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
First Published : 14 Aug 2010 01:16:34 AM IST


புது தில்லி, ஆக. 13: ஜல்லிக்கட்டு தொடர்பாக இந்திய பிராணிகள் நல வாரியம் தெரிவித்துள்ள ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.÷இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய பிராணிகள் நல வாரியம் கூறிய ஆலோசனைகள்: 

ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் 3 ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

குறைந்தபட்சம் ரூ.20 லட்சத்தை வைப்புநிதியாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.÷

குந்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 5 பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.÷

ஏற்கெனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் 7-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் 

என பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி குறிப்பிட்டார்.÷நலவாரியத்தின் ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வீ.ரவீந்திரன்,எச்.எல்.கோகலே ஆகியோரடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்றும், அது ஒரு மதச் சடங்கு மற்றும் கிராமத்தின் கலாசாரம் என்றும் முந்தைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

thanks to
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=287270&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
read more...
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுSocialTwist Tell-a-Friend