Showing posts with label தங்கம் தென்னரசு. Show all posts
Showing posts with label தங்கம் தென்னரசு. Show all posts

ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்; குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல்

0 comments

சென்னை, செப். 8-
ராஜ ராஜ சோழன் சிலையை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் என்று குஜராத் முதல்- மந்திரியிடம் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினான். பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 24, 25-ந்தேதியில் விழா எடுக்கப்படுகிறது.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். 1000-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ராஜ ராஜ சோழன் காலத்து 7 சிலைகளில் 5 சிலைகள் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ளது. 2 வெண்கல சிலைகள் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலாம் ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையும் ராணி சிலையும் இருப்பதாக செப்பேட்டு மூலம் தகவல் வெளியானது. தனியாருக்கு சொந்தமான “காளிகோ” அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சராபாய் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதையடுத்து சிலையை மீட்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். நல்லிணக்க அடிப்படையில் அந்த சிலையை குஜராத் அரசு அன்பளிப்பாக தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக குஜராத் முதல்-மந்திரியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார்.
தஞ்சை பெரிய கோவில் 1,000-ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் முதலாம் ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி ராணி சிலையை அங்கு இருந்தால் சிறப்பாக இருக்கும். அதனால் சிலையை வழங்கி உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். அமைச்சருடன் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர் ஆர்.நாகசுவாமி சென்றிருந்தனர்.
இந்த குழு சாராபாய் தன்னார்வ தொண்டு நிறுவன டிரஸ்டி கீதா சாராபாயை நேற்று சந்தித்து முதல்- அமைச்சர் கருணாநிதியின் கடிதத்தை கொடுத்தது.
ராஜ ராஜ சோழன் உயிரோடு இருந்த காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை தென்னவன் மூவேந்த வேலவன் என்பவர் நிர்வாகிக்க பொறுப்பு கொடுத்திருந்தார். அவர் நன்றிக்கடனாக ராஜராஜ சோழன், அவரது மனைவி சிலையை செய்துள்ளார். அந்த 2 சிலைகளையும் 1940-களில் தொண்டு நிறுவனர் சாராபாய் வாங்கியுள்ள தாக செப்பேடு தெரிவிக்கிறது.
இதுபற்றி அருங்காட்சியக இயக்குனர் டி.எஸ். மேத்தா கூறுகையில், தமிழக குழுவினர் என்னை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர். சிலைக்கான ஆதாரத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி கொடுத்தால் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பி னர்களுடன் பேசி முடிவு எடுப்போம் என்றார்
thanks to http://mytamilnews.com/index.php?more=15
read more...
ராஜ ராஜ சோழன் வெண்கல சிலையை மீட்டுத் தர வேண்டும்; குஜராத் முதல்-மந்திரி மோடியிடம் தங்கம் தென்னரசு நேரில் வற்புறுத்தல்SocialTwist Tell-a-Friend