Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

0 comments
நம்மாழ்வார்
துரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். கலையை ரசித்து பார்க்க கூடிய அளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்நிலை மோசமாக இருக்கிறது. கிராமப்புறங்கள் தரிசாகி வருகின்றன. நிலத்தை உழுத மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. நம்நாட்டின் வளம் முழுவதும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்படுகிறது. தமிழகத்தில் 10 ல் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. புரட்சி என்பது சிவப்பாகத் தான் இருக்கும். பசுமையாக இருக்காது. தமிழத்தில் பசுைப்புரட்சி ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அது எப்போது? தமிழத்தின் தேவை வெளி மாநிலங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பதுக்கல் வர்த்தகம் நடைபெறுகிறது.
விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணைப்பற்றியோ மக்களை பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மான்சான்டே போன்ற வெளிநாட்டு விதை கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கூடங்களாக மாறி விட்டன. அரிசியிலிருந்து 12 பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு வருங்காலத்தில அரிசி இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அரிசிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல் உள்ளது. இப்போது திராட்சை பழம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் நிரம்பி இருக்கிறது. திராட்சை பழங்களை உண்ணாதீர்கள்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார். என்ன நடக்குமோ இனி எதிர்காலத்தில்!
நமது கருத்து
நமது விவசாயிகள் விதைத்து வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டன. நாட்டு ரக நெல் விதைகளை இப்போது யாரும் விதைப்பதில்லை. இப்போது இருப்பவை பெரும்பாலும் வீரிய ரகங்கள் தான். இப்படி அனைத்திலும் புதிய கண்டுபிடிப்புகளும், வீரிய ரகங்களும் வந்துள்ளன. இவற்றை தாக்கும் பூச்சிகளை ,நோய்களை விரட்ட புதிய புதிய மருந்துகளை விவசாயிகள் வாங்கி குவிக்க வேண்டியதிருக்கிறது.

எல்லாவற்றையும் முடித்து விட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு போனால் விவசாயிக்கு கிடைப்பது நாமம் தான் என்றே பொதுவான பேச்சு இருக்கிறது. இப்படி இருந்தால் யார் விவசாயம் செய்ய முன்வருவார்கள்? ஆக..அரிசிக்கு ஆபத்து தான் இனி!
thanks to  http://greenindiafoundation.blogspot.com/2011/01/blog-post_1106.html
read more...
அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.SocialTwist Tell-a-Friend

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்,

0 comments
தமிழக அரசு சமீபத்தில், தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டம் என்கின்ற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டம் குறித்து விரிவான பொது விவாதம் தேவை.

மக்கள் மத்தியில் சமீபகாலமாக இயற்கை வேளாண்மை பிரபலமாகி வருகிறது. அதன் காரணமாக விவசாயிகளும் கூட அனுபவ ரீதியில் பயன்பெற்று வருகிறார்கள். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், விவசாயிகள் மத்தியில் இதன் காரணமாகவே வரவேற்பை பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தின் 4-வது அத்தியாயத்தில் 29 வது பிரிவில் ஒரு ஆபத்தான ஷரத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.

வேளாண்மை துறையில் ஆலோசனைகள் சொல்வதோ அல்லது வேளாண்மை பணிகளை ஆற்றுவதோ அரசாங்கத்தின் விதிகளின்படி பதிவு செய்யப்பட்டவர்களே, இதனை செய்ய வேண்டும். பதிவேட்டில் இடம் பெறாத எவரும் தமிழகத்தில் வேளாண்மை ஆலோசகராகவோ வேளாண்மை பணி ஆற்றுபவராகவோ செயல்படக்கூடாது என்று அந்த ஷரத்து தெரிவித்துள்ளது.
இந்த ஷரத்து குறித்து பொது விவாதம் தேவை. செயற்கை உரங்களை தயாரிக்கிற நிறுவனங்கள், இயற்கை வேளாண்மை பரவுவதை தடுப்பதற்காக தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அரசாங்கத்தின் மூலம் செய்கின்ற முயற்சியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.
இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் விவசாயிகளும் விழிப்புணர்வுடன் இருந்து, இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி :http://tamil.webdunia.com/newsworld/finance/news/0908/08/1090808047_1.htm
read more...
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்,SocialTwist Tell-a-Friend