Showing posts with label மீனவர். Show all posts
Showing posts with label மீனவர். Show all posts

இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியது

0 comments

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]
தொழிலுக்குச் சென்ற சமயம் காணாமற் போனதாகக் கூறப்பட்ட நான்கு இந்திய மீனவர்களில் மற்றொருவரின் சடலம் தமிழகக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02
read more...
இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

0 comments

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்வனேந்தலைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், மணிகண்டன், மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாண்டியன் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். படகில் மொத்தம் 10 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாண்டியனுக்கு மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பாண்டியனின் தந்தை சமீபத்தில்தான் மரணமடைந்தார். இதையடுத்து பாண்டியன்தான் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். தற்போது அவரும் உயிரிழந்து விட்டதால் அவரது குடும்பம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது.

தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் என்றாலும் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார் பாண்டியன்.

காலவரையற்ற ஸ்டிரைக்:

இதற்கிடையே, பாண்டியன் குடும்பத்திற்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், இதுபோன்று சுடப்படுவதைத் தடுக்க நிரந்தரமான உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

இதுதொடர்பாக இன்று மீனவர் சங்கங்கள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. இந்தப் போராட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களையும் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
read more...
இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்SocialTwist Tell-a-Friend