Showing posts with label தா.பாண்டியன். Show all posts
Showing posts with label தா.பாண்டியன். Show all posts

ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்பு

0 comments
சென்னை: அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த சாதனையையும் அதிமுக அரசு செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி வந்த செய்தி தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு நடந்த பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார் தா.பாண்டியன்.அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. கூட்டணியில் விரிசலா என்ற பேச்சும் கிளம்பியது.

இந்த நிலையில் தா.பாண்டியன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜுலை 6-ம் தேதியன்று மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் நான் பேசும் போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு மந்திரிகளை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டிப் பேசியதாக, சில ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தனர்.

20 கிலோ அரிசியை குடும்ப அட்டை உள்ளோர்க்கு இலவசமாக வழங்கிய மாண்பு, தனியார் கேபிள் இணைப்புகளை அகற்றி, அரசு கேபிள் இணைப்புக்கு நடவடிக்கை எடுத்திருப்பது, சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள், சொத்துக்களை மீட்டுக் கொடுக்க தனிக் காவல்துறை பிரிவை ஏற்படுத்தியிருப்பது, டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டின் சீர்கேடு, நிதிநெருக்கடிகளை விளக்கிக் கூறி, உணர்த்தியதன் மூலம் ரூ.23,500 கோடி அளவிற்கான பணத்தை திட்டச் செலவிற்காக பெற்று வந்துள்ள சாதனை ஆகியவற்றை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டி வாழ்த்தியுள்ளது.

எனவே குற்றம் சாட்ட வேண்டிய குறை ஏதும் கூறப்படவில்லை. மாறாக, மாநில அரசு மீது கடந்த கால ஆட்சி சுமத்தி விட்டுப் போயுள்ள அநியாய ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்சுமை, நிர்வாகச் சீர்கேடு, ஆகியவற்றை சமாளிப்பதில் நாமும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. நமது கடமை தேர்தலோடு முடிந்து விடவில்லை என்றே விளக்கி பேசினேன். மக்களுக்கு தெளிவு படுத்த இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என்று பாண்டியன் கூறியுள்ளார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/12/i-never-criticized-admk-govt-says-tha-pandian-aid0091.html
read more...
ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்புSocialTwist Tell-a-Friend

ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்

0 comments
திகதி: 11.07.2010 // தமிழீழம்

ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது.

இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எடுத்து பொய்பிரசாரங்களை பேசி வருகிறார்.

கடந்த 5 ம் தேதி நடந்த பந்தில் தமிழக மக்கள் பங்கு பெற்று வெற்றி அடைய செய்துள்ளனர். பல கெடுபிடிகள் மிரட்டல்களையும் மீறி தமிழக மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி அடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் விரை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால்தான் பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் உயரவில்லை என்ற வாதத்தை தி.மு.க. பரப்பி வருகிறது என்றார்.


நன்றி - சங்கதி
read more...
ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments


சிங்கள அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், இலங்கை பத்திரிகையாளர் திஸநாயகத்தை விடுவிக்க கோரியும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் சி.மகேந்திரன், விஜய டி.இராஜேந்தர், ரவீந்திரதாஸ், சீ.ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
read more...
சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்SocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன் வீட்டில் மர்ம நபர்கள்

0 comments

இந்தியாவின் நலனுகாகவும், ஈழத் தமிழர்களுகாகவும் குரல் கொடுப்பவர் தா.பாண்டியன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்தியாவின் 15வது நாடாளுமன்றத்திற்காக கடந்த சில மாதங்களுகு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் டூவீலரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி போலிசார் குற்றவாளிகள் யாரையும் கண்டுபிடிகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தா.பாண்டியன் வீட்டை சுற்றிலும் அடையாளம் தெரியாத புதிய நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று பெண்களும், குழந்தைகளும் வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவற்றை தாண்டி வீட்டிற்குள் வந்துள்ளார். இப்படி வந்த மர்மநபர் வீட்டின் சன்னல் கதவைத் திறந்து எட்டிப்பார்த்துள்ளார். இதை கவனித்துவிட்ட பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட்டனர். அதனால் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இப்படியாக தா.பாண்டியன் வீட்டில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் நோட்டமிடுவது எதற்காக என தெரியவில்லை. வேறு அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவ்ர நல்லகண்ணு கூறியுள்ளார். நன்றி http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1250340187&archive=&start_from=&ucat=2&
read more...
தா.பாண்டியன் வீட்டில் மர்ம நபர்கள்SocialTwist Tell-a-Friend