பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி

0 comments
:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.

கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.

பத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270024
read more...
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சிSocialTwist Tell-a-Friend

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்

0 comments
 
 சியம் ரீப், ஜூலை 3: கம்போடியா நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பழங்காலக் கோவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.  11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக 1960-ம் ஆண்டு மூடப்பட்டது. பிரமிடு வடிவத்தில் அங்கூர் கோவில் என்றழைக்கப்படும் அக்கோவில் பிரான்ஸ் நாட்டு தொல்லியலாளர்களின் உதவியுடன் சுமார் 14 மில்லியன் டாலர் செலவில் புனரமைக்கப்பட்டது.  இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி கம்போடியாவில் அந்நாட்டு மன்னர் நரஉத்தமசிகாமணி மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் பிரான்கோசிஸ் ஃபில்லோன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரான்ஸ் பிரதமர், அங்கூர் கோவிலின் புனரமைப்பு தனித்துவம் வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது என்றார். கம்போடிய மன்னர் தனது நாட்டு மக்கள் சார்பாக பிரான்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.  1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அங்கூர் கோவில் புனரமைப்புப் பணிகள் 1970-ம் ஆண்டு கம்போடிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக தடைபட்டன. அப்போது புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான ஆவணங்கள் அந்நாட்டு கம்யூனிஸ்ட்களால் அழிக்கப்பட்டன. பிறகு 1995-ம் ஆண்டு புனரமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
thanks to http://dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=441018&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=50%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
 
 
 
 
 
 
 
 
 
 
Solved puzzle reveals fabled Cambodian temple
SIEM REAP, Cambodia — It has taken half a century, but archaeologists in Cambodia have finally completed the renovation of an ancient Angkor temple described as the world's largest three dimensional puzzle.
The restoration of the 11th-century Baphuon ruin is the result of decades of painstaking work, hampered by tropical rains and civil war, to take apart hundreds of thousands of sandstone blocks and piece them back together again.
"When I first saw how devastated the monument was, I never thought we would be able to put it back together," said Cambodian restorer Ieng Te, who joined the project as a young student in 1960 and was tasked with numbering stones.
"I am so happy and excited that we were able to rebuild our historic temple," the now 66-year-old said as he oversaw the final construction activities at the site.
On a recent rainy morning workers were adding a final layer of paint to newly-installed wooden staircases at Baphuon, one of the country's biggest temples after Angkor Wat, the largest structure in the famed Angkor complex.
It is one of the last jobs to be done before the temple reopens to the public next week, finally revealing itself in full glory after spending decades in pieces.
Cambodian King Sihamoni and French Prime Minister Francois Fillon will be among the first to tour the impressive three-tier temple during an inauguration ceremony on July 3.
The story of the 10-million-euro ($14m) renovation began in the 1960s when a French-led team of archaeologists dismantled the pyramidal building because it was falling apart, largely due to its heavy, sand-filled core that was putting pressure on the thin walls.
The workers numbered some 300,000 of the sandstone blocks and laid them out in the surrounding jungle.
But efforts to rebuild the crumbling towers and lavishly ornamented facades abruptly came to a halt when Cambodia was convulsed by civil war in 1970.
The records to reassemble Baphuon, including the numbering system, were then destroyed by the hardline communist Khmer Rouge which took power in 1975.
In 1995, when the area in northwestern Cambodia was again safe to work in, the French government-funded project was restarted under the leadership of architect Pascal Royere from the Ecole francaise d'Extreme-Orient (EFEO).
"It has been said, probably rightly so, that it is the largest-ever 3D puzzle," Royere told AFP.
The team carefully measured and weighed each block and then relied on archive photos stored in Paris, drawings and the recollections of Cambodian workers to figure out where each part fits.
"We were facing a three-dimensional puzzle, a 300,000-piece puzzle to which we had lost the picture. And that was the main difficulty of this project," Royere said.
"There is no mortar that fills the cracks which means that each stone has its own place. You will not find two blocks that have the same dimensions."
The restoration of Baphuon, one of Angkor's oldest ruins, was completed in April and Royere said it was a moment of joy for the 250-strong, mainly Cambodian, team.
Finishing the "unique" undertaking was "a collective satisfaction because it was a complicated project," he said.
Built around 1060 by King Udayadityavarman II in honour of the Hindu god Shiva, Baphuon was the country's largest religious building at the time, 35 metres high (114 feet) and measuring 130 by 104 metres (426 x 340 feet).
In the 16th century, a 70-metre long reclining Buddha statue was built into a wall on the second level using stones from the top of the temple.
These two phases of construction, hundreds of years apart, further complicated the restoration, said Royere, and working during the rainy season proved another major challenge.
But those struggles are behind him now and as the Frenchman watched camera-toting tourists amble along the long elevated walkway that leads to the temple, he said he was confident the site would become a top attraction.
Located at the heart of the Angkor park, it "certainly promises to be a great success," he said.
Gazing up at Baphuon, first-time visitor to Cambodia Gayle Sienicki from Washington DC marvelled at the temple's long journey to recovery.
"It's just amazing, I mean truly amazing, that they could take these bits of stones and figure out how to put them all back together," she said. "I'm in awe. I think this is just the coolest thing."
thanks to http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jrbPvOVvNyeV0xjohqzBmQhNSYrA?docId=CNG.4c50d4e5f6d29eb93f5d23744d330c7f.3c1
read more...
50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்SocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!

0 comments
டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டிய காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாடுகள் முட்டி கடந்த 20 ஆண்டுகளில் 200 பேருக்கும் மேல் உயிர் இழந்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டின் போது இருவர் இறந்தனர். மேலும் 215 பேர் காயம் அடைந்தனர்.

மிருகவதை சட்டத்துக்கு எதிரானது...

இந்த விளையாட்டு, மிருகவதை சட்டத்துக்கு எதிரானது. மாடுகள் பாய்ந்து வரும் போது அதை பிடிக்கும் ஆர்வத்தில், வாலை பிடித்து இழுத்தல், கொம்பை பிடித்து அமுக்குதல் போன்றவை தவிர காளையை பல்வேறு முறைகளில் சித்ரவதைப்படுத்துகிறார்கள்.

இதனால் காளைகளுக்கு வலி மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, மனித உயிர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

சட்டப்படி குற்றம்

இந்த விளையாட்டில் பங்கு பெற காளைகளை, வாகனங்களில் அடைத்து, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது காளைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பது இல்லை. வாகன பயணத்தின்போது காளைகள் நெருக்கமாக அடைக்கப்படுவதால், அவற்றால் நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது மிருக வதை சட்டப்படி குற்றம்," என்று கூறியுள்ளார்
thansks to http://thatstamil.oneindia.in/news/2011/07/02/hema-malini-urges-ban-on-sport-jallikattu-aid0136.html
read more...
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!SocialTwist Tell-a-Friend

மின்னஞ்சலின் அடுத்த புரட்சி

0 comments


[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 04:33.29 மு.ப GMT ]
மின்னஞ்சலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது. அத‌ன் பெயர் ஷார்ட்மெயில்.டிவிட்டரும், பேஸ்புக்கும் மின்னஞ்சலுக்கான இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் மின்னஞ்சல் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து.
அதாவது பெயருக்கேற்ப இது மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது. ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது. அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விடயத்தை சொல்லி விட வேண்டும்.
டிவிட்டரில் எப்படி அதிகப‌ட்சம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிற‌தோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத மின்னஞ்சல்களால் திணறிப்போகிறவர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதோடு மின்னஞ்சல் சுமை என்ப‌தும் இல்லாமல் போய்விடும்.
அது மட்டும் அல்ல மின்னஞ்சலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்ப‌டங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை. இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.
ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மின்னஞ்சல்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும். அதாவ‌து அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டு விடும். 500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.
மின்னஞ்சலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வ‌கிக்கவும் இது பேருதவியாக இருக்கும். எந்த மின்னஞ்சல் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம். தள்ளிப்போடுவதோ மின்னஞ்சல்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.
டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது. ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது ரகசியமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.
ரகசியமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும். பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பதில் அனுப்பலாம். இப்படி மின்னஞ்சல் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.
பேஸ்புக் பயன்ப‌டுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் மின்னஞ்சலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிற‌து. ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்ப‌தால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.
ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது. டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்க‌ள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம். ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது. மின்னஞ்சலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.
இணையதள முகவரி
THANKS T O http://www.lankasritechnology.com/view.php?203dBnZndbc4cQCAA424ea0609F0e033TlOmOcddcdmOlTl220e9F906eae424yMQ64cbdbZnBdB02
read more...
மின்னஞ்சலின் அடுத்த புரட்சிSocialTwist Tell-a-Friend

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்

0 comments
 திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.  நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.  நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார். விவேக்
http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/actor-vivek-donates-10-lacks-tree-saplings-aid0091.html
read more...
தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்SocialTwist Tell-a-Friend

சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!

0 comments
சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.

இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், "நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்," என்றார்.

தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
thanks to http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/22-case-filed-ban-avan-ivan-movie-aid0136.html
read more...
சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!SocialTwist Tell-a-Friend

மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டி

0 comments
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:29
எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார்.

இனி அவரிடம் பேசியதிலிருந்து...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...?

‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின் கடன்களை அடைக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இலவசமாகவே ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

67 தேர்தலுக்குப் பிறகு தனது எம்.பி. பதவியை விட்டு அண்ணா விலகியதும், அந்த இடத்திற்கு மாறனை நியமிக்கும்படி கருணாநிதி நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அண்ணா மாறனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.1990-ம் ஆண்டுவரைக்கும் மாறன் வெறும் எம்.பி.தான்.வி.பி.சிங் பதவியேற்ற போதுதான் மத்திய அமைச்சரானார்.அதன் பின்னர்தான் அவருடைய சொத்துக்கள் உயர ஆரம்பித்தது.ஸ்பெக்ட்ரம் ஊழலை தயாநிதிதான் வெளியே கொண்டு வந்தார். அவரே அதில் சிக்கிக் கொண்டார்.’’

அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதானே டி.வி.யை ஆரம்பித்தார்கள்?

‘‘உண்மைதான். வி.பி.சிங் உதவியாலும், சில தொழிலதிபர்களின் உதவியாலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் சன் டி.வி.  ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் டி.வி. தொடங்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.ஆனால்,அவர் அதைச் செய்யவில்லை.’’

தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிவசங்கரன் ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு நெருக்கமாகத் தானே இருந்தார்?

‘‘90-களில் இருந்தே எனக்கு சிவசங்கரனைத் தெரியும். 91-ம் ஆண்டு அவர், ‘தான் ஒரு தொலைக்காட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு உதவ வேண்டும்’என்றும் கேட்டு என்னைச் சந்தித்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரில் நூறு ஏக்கரில் தனக்கு இடம் இருப்பதாகவும், அங்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் போவதாகவும் கூட தெரிவித்தார். இதற்கு அனுமதி கிடைக்க உதவி கேட்டார்.நான் அவரை அமைச்சர் செல்வகணபதியிடம் போகச் சொன்னேன்.

மறுநாளே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையார் என்னைச் சந்தித்து, குறிப்பிட்ட நூறு ஏக்கர் இடம் தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன், முரசொலி மாறன் ஆகியோர் மிரட்டி பறித்து விட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிலத்திற்குப் பக்கத்தில் மாறனுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. எனவே, நூறு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வளைக்க வேண்டும் என்று மாறன் திட்டம் தீட்டினார். தன் பெயரில் வாங்கினால் பிரச்னை வரும் என்பதால் பினாமி பெயரில் நிலத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்.இந்த இடத்திற்குதான் அனுமதி வாங்க சிவசங்கரன் என்னை அணுகியிருந்தார்.

அடுத்ததாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிவசங்கரன் வாங்கினார். இதற்கும் முழு உதவி செய்தது முரசொலி மாறன்தான்.இதனால் கோபமடைந்த நாடார் சமுதாய மக்கள், தி.மு.க.விற்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். காமராஜர் பிறந்தநாளில் நடந்த பேரணியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஸ்டாலின் மீது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் செருப்புகளை வீசினர். கோபமடைந்த கருணாநிதி, ரவுடிகளை வைத்து பேரணிக்குள் புகுந்து அடித்தார். அந்தப் பேரணி நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.’’

ஆனால், அந்த மக்களின் கோரிக்கைப்படி, மெர்க்கண்டைல் வங்கி மீண்டும் நாடார் சமுதாய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதே?

‘‘ஆமாம். வேறுவழியில்லாததால் மாறன் அறிவுறுத்தல்படி, சிவசங்கரன் 150 கோடி ரூபாய்க்கு வங்கியை விற்றுவிட்டார். நாடார் மக்களை திருப்திப்படுத்த சரத்குமாரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. அதன்பின்தான் சிவசங்கரன் ஆர்.பி.ஜி., ஏர்செல் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார்.’’

முரசொலி மாறனோடு நெருக்கமாக இருந்த சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

‘‘தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் என அடுத்தடுத்த பிரதமர்கள் காலத்தில் மாறன் தொடந்து மத்திய அமைச்சராகவே இருந்தார்.இந்த காலகட்டங்களில் தன் குடும்பத்தை மட்டுமே அவர் பெருமளவு விரிவுபடுத்தினார். அவர் குடும்பத்தில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் புதிதாக முளைத்தன.

2004-ம் ஆண்டு கிட்னி பாதிப்பால் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.மாறனின் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சிவசங்கரனை கலாநிதிக்கும், தயாநிதிக்கும் பிடிக்காமல் போனது. தயாநிதி அமைச்சரானதும்,தன் ஏர்செல் நிறுவனத்தை விரிவுபடுத்த சிவசங்கரன் முடிவு செய்தார்.முறைப்படி இதற்காக விண்ணப்பங்களை அவர் அனுப்பிக் கொண்டே இருந்தார்.ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்கிற முடிவோடு இருந்தார் தயாநிதி மாறன்.

இந்தப் போராட்டத்தில் சிவசங்கரனை தொழிலில் இருந்தே வெளியேற்ற நினைக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிம் என்கிற மலேஷிய நிறுவனத்துக்கு விற்கச் சொன்னார்கள். மிரட்டல் தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனத்தை விற்றார் சிவசங்கரன்.’’

மேக்ஸிம் நிறுவனத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் ஏர்செல்லை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?

‘‘ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய அனந்தகிருஷ்ணன் என் நண்பர்தான். இந்த வழக்கு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்த பிறகு, அனந்த கிருஷ்ணனையே அழைத்து வந்து உண்மையைப் பேச வைப்பேன். இதற்குப் பின்னணியில்ரி.ஞி. சகோதரர்களின் (கலாநிதி, தயாநிதி) பங்கு, எவ்வளவு பணம் பரிமாறப்பட்டது என எல்லா விவரங்களும் ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.’’



இந்த காலகட்டங்களில் சிவசங்கரனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

‘‘தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது, 2005-ல் நான் டெல்லி சென்றிருந்தேன்.அங்கு ஹோட்டலில் சிவசங்கரனை தற்செயலாக சந்தித்தேன்.என் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அது மாறனிடம் இருந்து வந்தது எனப் புரிந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தன் அப்பாவின் பணத்தை சிவசங்கரனிடம் இருந்து பறிக்கும் முயற்சியில்தான் அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சகோதரர்களின் நெருக்குதல் தாங்க முடியாமல் சிவசங்கரன் அமெரிக்கா போய்விட்டார்.அவர் மீதுள்ள கோபத்தை சிவசங்கரனின் ஸ்டெர்லிங் டவர்ஸ் நிறுவனத்தின் மீது காட்டியதில், ஊழியர்கள் ஆறுபேர் சிறைக்குப் போனார்கள்.’’

2ஜி வழக்கில் தயாநிதி மாறனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

‘‘இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடங்கி வைத்ததே தயாநிதிதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது,அவர் தலைகால் புரியாமல் ஆடினார். தமிழகத்தில் யாருக்கும் டி.வி.சேனல் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு டி.வி.யை ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்கிற நிலைதான் இருந்தது.

2004-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோதே அலைக்கற்றை ஊழலில் அவர் பெருமளவு கொள்ளையடித்து விட்டார்.அந்தப் பணம்தான் 2009 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா ராஜினாமா செய்ததும், கபில்சிபல் அந்தத் துறை பொறுப்பை ஏற்கிறார். சிவராஜ்பட்டீல் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மூலம்தான் தயாநிதி மாறனின் வேடம் கலைகிறது. அலைக்கற்றை உரிமங்களை தன் விருப்பப்படி விற்பனை செய்யவும்,அதற்கான அதிகாரத்தை தான் ஒருவனே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அவரது கனவைத் தகர்த்தது.

2 ஜி உரிமத்துக்காக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாநிதிக்கு பெருமளவு முன்பணம் கொடுத்திருந்தன. அதை அவர்கள் புதிய அமைச்சர் ராசாவிடம் தெரிவித்தபோது, ‘தயாவிடம் கொடுத்ததை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எனக்கு புதிதாக தரவேண்டும்’ என்று கூறுகிறார் ராசா. இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த தயாநிதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட வைத்து, ராசாவை சிறைக்கு அனுப்பினார். இப்போது அந்த ஆவணங்களே தயாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் தயாவுக்கும் இடையே ஏராளமான தொழில் தொடர்புகள் உண்டு. அதில் ஒரு அம்சமாக சன் டி.வி.யின் பங்குகளை அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் வாங்கியது. இதனால் மார்க்கெட்டில் சன் டி.வி.யின் பங்குகளுக்கு விலை கூடியது.இந்த லாபத்தை தாங்களே அனுபவிக்க நினைத்த மாறன் சகோதரர்கள், அதற்கு முன்னரே சன் டி.வி.யில் கருணாநிதிக்கு இருந்த பங்குகளை பிரித்துக் கொடுத்தனர்.’’

2 ஜி ஊழலுக்கு முக்கிய காரணம் தயாநிதி மாறன் என்று கூறுகிறீர்கள். இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

‘‘தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் ஆ.ராசாவுக்கும் உதவியாளராக இருந்தார். தயாநிதி மாறனின் பணம் நெதர்லாந்து நாட்டுக்குப் போய், அங்கிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்த கதையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு முழுக் காரணமும் தயாநிதி மாறன்தான்.அவர் அமைச்சரான பிறகு கலாநிதியுடன் சேர்ந்து தன் தொழிலை பெருமளவு விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 32 தொழில்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் வெளிநாடுகளிலும் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள்.

சுமங்கலி கேபிள் விஷன் மூலம் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள். 2005-ல் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தபோது,தங்கள் தாத்தா மூலம் கவர்னரிடம் பேசவைத்து தீர்மானத்தையே முடக்கினார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பதால்,இந்த கேபிள் டி.வி. மசோதா தூசுதட்டப்படுகிறது. சன் டி.வி.யோ எம்.எஸ்.ஓ. என்ற தகுதிகளைக் கைப்பற்ற ரகசியமாக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து பெரும் சூழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது.

எம்.எஸ்.ஓ.க்களைக் கைப்பற்ற சாக்ஸ் என்ற சக்ஸேனாவை களமிறக்கியுள்ளார்கள். இவரின் மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய எந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கினாலும்,அதற்குள்ளிருந்து ஏராளமான மோசடிகள் வெளிவருகின்றன.கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் அவலங்களை எல்லாம், மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் நாள் நெருங்கிவிட்டது’’ என்று மர்மமாக முடித்தார் நடராஜன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
THANKS TO http://savukku.net/pidithadu/965-2011-06-21-09-02-33.html
read more...
மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டிSocialTwist Tell-a-Friend

மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

0 comments
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகளாக திருட்டு

குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.

என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

யார் யார் சிக்குவார்கள் ?

புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

புரோக்கர்கள் ஓட்டம்

போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/06/14/tout-nurse-assistant-arrested-aid0090.html
read more...
மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!SocialTwist Tell-a-Friend

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments
புதன்கிழமை, 08 ஜூன் 2011 17:47
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.


இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

 மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
 
இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.
 
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது
THANSK TO http://savukku.net/home1/922-2011-06-08-12-17-57.html
read more...
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.SocialTwist Tell-a-Friend

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

0 comments
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.


ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்.
thanks http://www.yarl.com/forum3/index.php?showtopic=86729
read more...
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்து

0 comments
மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்

தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவு போன்றது. அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராட்டி வாழ்த்துகின்றது.

கடந்த 13-05-2011 அன்று தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், அவர்களது அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உன்னிப்பாக அவதானித்துள்ளதுடன், அக்கருத்துக்களை யாம் வரவேற்கின்றோம்.

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில், அதனை மூடி மறைப்பதற்கு பல நாடுகளும், பல அரசியல் சக்திகளும் முயற்சி செய்து கொண்டிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் நாதியற்றவர்களாக நின்றிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழீழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுக் குரலாகவும், நீதியின் குரலாகவும் உங்கள் குரல் வெளிவந்திருந்தது.

"இலங்கையில் தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். நாம் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் எப்படி இந்திரா காந்தி பாகிஸ்தானிடமிருந்து வங்காள தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்தாரோ அதைப் போலவே இலங்கையில் தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்ரல்-மே 2009 இல் ஆரணி கோட்டை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

"இலங்கையில் இல்லாமல் ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் தனி ஈழம் அமைக்கட்டும்' என்று இலங்கை அரச உயரதிகாரி ஒருவர் கூறியது தொடர்பாக நீங்கள் பதிலளிக்கையில் "ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்களது அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன்'' அங்கே இப்பொழுது அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகின்றேன்.'' (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் திருப்பூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

"இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடிருக்கின்ற இலங்கைத் தமிழர்களை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது! எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களில் கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் அடைத்து வைத்து எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் நாளடைவில் அவர்களையும் அழித்து விடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஐனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்று பேசுவதெல்லாம் வீண்வேலை. அது வெறும் கண்துடைப்பு என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை வழங்கும் எண்ணமே இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரேயடியாக இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் ஒரே செயற்திட்டமாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஐ வாழ்வு வாழவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தனி ஈழம்தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார ஊர்வலத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

- என்று நீங்கள் வெளியிட்ட கொள்கைப் பிரகடனம் யுத்தத்தினால் அழிந்து கொண்டிருந்த தமிழீழ மக்களுக்கு தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற பெரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கு, தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிப்பதே ஒரே வழியாகும்.

ஈழத் தமிழ் மக்களை இன அழிவில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காக

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை அங்கீகரிக்கும் தீர்மானத்தினை

தமிழக சட்டசபையில் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம்.

தாங்கள் சபதம் எடுத்தால் சாதித்துக் காட்டியே தீருவீர்கள் என்பது அனைத்துத் தமிழ் மக்களதும் உறுதியான நம்பிக்கையாகும். தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குத் தமிழக மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், தங்களுக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டும் வகையிலான தீர்மானத்தினை தமிழக சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கும் புனிதமான பணியை மேற்கொள்வீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலம் தமிழீழ மக்களது நலன்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டினதும், இந்தியாவினதும் நலன்கள் பாதுகாக்கப்படுவதனையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரணமான ஆதரவினை வழங்கவும், இணைந்து செயற்படவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்காக உரிய தரப்புக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள தங்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், தங்களது வாக்குறுதிகளைக் காக்கவும் தாங்கள் உழைப்பீர்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். மீண்டும் ஒருதடவை தங்களை வாழத்தி விடைபெறுகின்றோம்.

நன்றி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (16-5-2011)

thanks to http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=10&fileName=Jun1-11&newsCount=5
read more...
ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்துSocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]
இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில், இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநாவை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு,
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழர்களுக்கும் பல்வேறு பிணைப்புகள் உண்டு. இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இலங்கை தொடக்கத்தில் இருந்தே அங்குள்ள ஈழத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அவர்களுக்கான உரிமைகளை மறுத்ததோடு அவர்களை அழிக்கவும் செய்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி இருக்கின்ற இந்த சமயத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு நடத்திய சூதாட்டத்தில் தமிழர்கள் பலியாகி விட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இணைந்து நின்று குரல் கொடுத்து கொடுங்கோல் ஆட்சியை தனிமைப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

thanks to http://www.tamilwin.com/view.php?22a8299N320eDppGi04eecoQjj2ccbdZVLmucddd3cIBP4bbc4VjQQ6be44QGGp1d003eF922g02
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

0 comments
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும்
தீங்கிழைக்க மாட்டார்கள்!
பழ. நெடுமாறன் அறிக்கை
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
read more...
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கைSocialTwist Tell-a-Friend

ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்

0 comments


 சிதம்பரம்:

               மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது  மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-

            நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.

           நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

            உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.

            அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.

               கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

          சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

              அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

thanks to http://cuddalore-news.blogspot.com/2011/05/blog-post_25.html
read more...
ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்SocialTwist Tell-a-Friend

கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009

0 comments
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை வழங்கி உதவியது. இவை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டு ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை ரூ. 17 லட்சத்து 98 ஆயிரத்து 701. ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகள் ஒன்று கூட தரம் உயர்த்தப்படவில்லை. கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர், 52 முதுகலை ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 ஆண்டுகளாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.

இதற் காக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 300ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது. இது மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் கள்ளர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆண்டு துவக்கத்தில் அரசு இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ரூ.ஆயிரத்து 200 வழங்கப்படும். இதுவும் தராமல் கள்ளர் பள்ளிகள் வஞ்சிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரப்படி விளையாட்டு ஆசிரியர், அலுவலர் பணியிடம் எந்த கள்ளர் பள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.

நபார்டு வங்கி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டடம், தளவாடங்கள் வாங்குகின்றனர். கள்ளர் பள்ளிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. ரூ. 27 கோடி அளவுக்கு கருத்துரு அனுப்பியும் நீண்ட நாட்களாக பலனில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் எம்.சின்னப் பாண்டி கூறுகையில், கள்ளர் சீரமைப்புத் துறையில் பலகுறைபாடுகள் இருந் தாலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 83, பிளஸ் 2ல் 73 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பெண்களுக்கென உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கள்ளர் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
thanks to http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=5052
read more...
கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009SocialTwist Tell-a-Friend

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

0 comments
திருக்குறள் 


பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

Newton's third law

To every action there is always an equal and opposite reaction

சிலப்பதிகாரம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்;
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்



சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

அதிமுக- (160)- 150
தேமுதிக-(41)- 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09
இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08
மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02
புதிய தமிழகம்- (03)- 02
கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01
இந்திய குடியரசு கட்சி- (01)- 01
பார்வர்டு பிளாக்- (01)- 01
சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00

திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

திமுக- (119)- 23
காங்கிரஸ்- (63)- 05
பாமக- (30)- 03
விடுதலை சிறுத்தைகள்- (10)- 00
கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00
வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00
பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00

பாஜகவும் படுதோல்வி:

193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/14/admk-wins-147-seats-just-23-dmk-aid0091.html
read more...
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31SocialTwist Tell-a-Friend

முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்

0 comments
தேனி:கள்ளர் ஜாரி நிலம் வாங்கிய வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்கி உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ.,விடம் புகார் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கள்ளர்ஜாரி நிலங்கள் உள்ளன.
இந்த நிலத்தை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் விலைக்கு வாங்க கூடாது என சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான நிலங்கள் வேறு சமுதாயத்திற்கு விற்பனை செய்துவிட்டனர்.

முறைகேடாக கள்ளர்ஜாரி நிலங்களை வாங்கியவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்களே பட்டா மாறுதலும் வழங்கி உள்ளனர். வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்குவது தவறுக்கு துணை போவது போல் உள்ளது என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ., பிருந்தாதேவியிடம் புகார் செய்துள்ளனர்.இது குறித்து வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், "முறைகேடாக வாங்கப்படும் நிலங்களுக்கு நாங்கள் பட்டா மாறுதல் செய்வதில்லை. கள்ளர்ஜாரி நிலங்களை வாங்குபவர்களுக்கு போலீசார் கூறுவது போல் நாங்கள் பட்டா மாறுதல் செய்யவில்லை' என்றனர்
 thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=236898
read more...
முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்SocialTwist Tell-a-Friend

திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவு

0 comments
thanks to http://www.inneram.com/2011050216136/2011-05-02-15-33-28
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ளது வில்லூர் கிராமம். இந்த கிராமத்தின் மெயின் பஜார் வழியாக ஒரு பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.   இது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதும் சமரச பேச்சு நடத்தப்படுவதுமாக இருந்துள்ளது.  எனினும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வில்லூரை சேர்ந்த தங்கப் பாண்டியன் (வயது27)  என்பவர் மோட்டார் சைக்கிளில் மெயின் பஜார் வழியாக சென்றுள்ளார்.   தங்கப்பாண்டியன் ஒத்தப்பட்டி தெருவை அடைந்த போது, அந்த பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், , கரந்தமலை, சமயன், பிரதாப் சிங் மற்றும் பாலமுருகன் ஆகிய 5 பேரும் சேர்ந்து தங்கப்பாண்டியனை வழிமறித்து அத்தெரு வழியாக வரக்கூடாது என்று கூறி தகராறு செய்துள்ளனர்.


எனவே, தங்கப்பாண்டியன்அவர்கள் 5 பேரும் தன்னை ஜாதி பெயரை சொல்லி தகராறு செய்து திட்டியதாக காவல் துறையில் புகார் கொடுக்கவே, அவர்கள்  5 பேரையும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது.   இந்நிலையில் அவர்களை சேர்ந்தவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.   இதற்கிடையில் புகார் கொடுத்தவரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.  எனவே இரு தரப்பிலும் பதட்டநிலை ஏற்பட்டு கலவர சூழல் உருவானது.  நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பாதுகாப்புக்காக கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர்.


காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  அப்போது அங்கு  கும்பலாக கூடியிருந்தவர்கள் காவல்துறையின் வாகனங்கள் மீது   கல் வீசி தாக்கினர்.  கல்வீச்சில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் காயமடைந்தனர்.  தடியடி நடத்தியும், நிலைமை கட்டுக்குள் வராததால் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  ஆனாலும் கும்பல் கலையாததால் 2 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காளிமுத்து என்ற வாலிபருக்கு தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், படுகாயமடைந்தார். மேலும் நடத்தப்பட்ட தடியடியிலும் பலர் காயமடைந்தனர்.   காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இக்கலவரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 45 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.  மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடுமையான அளவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/03/police-warn-stern-action-against-untouchability-aid0090.html

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் ஜாதிக் கலவரத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர்.


டி.கல்லுப்பட்டி அருகே உள்ள இந்த கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு, இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். ஆனால், கலவரம் நீடித்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கர்க், பேரையூர் டி.எஸ்.பி. அன்வர் ஷா ஆகியோரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரக் கும்பல் கற்களை வீசித் தாக்கியதில் 15க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செந்தில் மற்றும் பழனி ஆகியோர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரம் குறித்து ஐ.ஜி. மஞ்சுநாதா நிருபர்களிடம் கூறுகையில், வில்லூர் கிழக்குத் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கபாண்டியன் என்பவரை சிலர் தடுத்து நிறுத்தி பைக்கை பறித்துள்ளனர். இதுதொடர்பாக, 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அவர்களுடன் எஸ்.பி. அஸ்ரா கர்க் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையில் அமைதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பிரிவினரது வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

மேலும், வில்லூர் காவல் நிலையத்துக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்த சிலர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். எஸ்.பி. மற்றும் பேரையூர் டி.எஸ்.பி. ஆகியோரது கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து கலவரக் கும்பலைக் கலைக்க தடியடி,கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கலவரக்காரர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டு 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி கோட்டாட்சியர் புகழேந்தி, திருமங்கலம் தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வில்லூரில் முகாமிட்டுள்ளனர். 5 மாவட்டங்களில் இருந்து ஆயுதப் படை போலீஸார் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரட்டை டம்ளர் முறை, வாகனங்களில் குறிப்பிட்ட தெருவுக்குள் செல்லக் கூடாது என யாராவது தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஐ.ஜி.
read more...
திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவுSocialTwist Tell-a-Friend

நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருது

0 comments
திருநெல்வேலி : இந்திய கம்யூ., கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை, மகாத்மா காந்தி உதவியாளர் கல்யாணம் வழங்கினார். நல்லக்கண்ணு, பொதுமக்கள் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்து, அவரே ஆஜராகி வாதாடினார்.
கோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆற்றிலுள்ள ஐந்து குவாரிகளில், நிபுணர் குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. அறிக்கையை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், ஐந்து ஆண்டுகளுக்கு, இக்குவாரிகளில் மணல் அள்ளத்தடை விதித்தது. தாமிரபரணியை காப்பாற்ற, நல்லக்கண்ணு எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
விருது வழங்கல்: இதையடுத்து நேற்றிரவு பாளையங்கோட்டையில், தாமிரபரணி அமைப்பு சார்பில், நல்லக்கண்ணுக்கு, பாராட்டு விழா நடந்தது. அந்த அமைப்பின் அகில பாரத தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் வரவேற்றார். முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், தஞ்சை பல்கலை., ஆட்சிக்குழு உறுப்பினர் பரமசிவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பேராசிரியர் அருணாச்சலம், அறக்கட்டளை நிர்வாகிகள் பேசினர். மகாத்மா காந்தி நேரடி உதவியாளர் கல்யாணம், நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை வழங்கினார். நல்லக்கண்ணு ஏற்புரை வழங்கினார்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=235932


என்னை அரசியலை விட்டே ஓடச் சொன்னார்கள்: ஆர். நல்லகண்ணு பேச்சு

தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளத் தடை உத்தரவு பெற்றுத் தந்ததற்காக ஆர். நல்லகண்ணுவுக்குதாமிரபரணி அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் மைதானத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடந்தது.

அப்போது நல்லகண்ணு பேசியதாவது,

மனிதன் இன்று தான் அனுபவிக்கும் இயற்கை வளங்களை எதிர்கால சமுதாயத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும். அதை தன் வாழ்நாளிலேயே அழித்துவிடக் கூடாது.

தமிழ் வளர்த்த பெருமை உடைய ஆறு தாமிரபரணி. ஆற்றங்கரையோரங்களில் தமிழ் மொழி செழித்து வளர்ந்துள்ளது. அத்தகைய நதியை நாம் பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்று காவிரி, வைகை, பாலாறு ஆகிய நதிகள் அழிந்து வருகின்றன. இந்த நதிகளில் எல்லாம் இப்போது தண்ணீர் வருவதில்லை. காவிரி நதியில் ஆடிப் பெருக்குக்குக் கூட தண்ணீர் வருவதில்லை.

பாலாறு பாழடைந்து விட்டது. வைகைக்கும் சிக்கல் வந்து விட்டது. தாமிரபரணி மட்டுமே தகராறு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்வம் செழிக்கும் ஜீவநதியான தாமிரபரணி தான் செல்லும் இடங்களில் எல்லாம் வளமையை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் தன்மை இன்று கெட்டு விட்டது. அதைப் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தாமிரபரணியை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இந்த ஆற்றில் மணல் அள்ள நான் தடையாணை வாங்கியதை கண்டித்து சிலர் 'அரசியலை விட்டு ஓடு' என்று சுவரொட்டிகள் ஒட்டினர். அதை யார் ஒட்டினார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் பிறப்பதற்கு முன்பே நான் பிறந்தவன், அரசியலுக்கு வந்தவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க நாம் உறுதி கொள்ள வேண்டும். நீதிமன்ற தடையாணையை அகற்ற முயற்சிகள் நடந்து வருகின்றது. அதை முறியடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் உறுதியாக இருந்தால்தான் தாமிரபரணியை பாதுகாக்க முடியும் என்றார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/05/04/people-asked-me-get-away-from-politics-nallakannu-aid0128.html

read more...
நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருதுSocialTwist Tell-a-Friend