ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்

0 comments
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை இரவு சுவாமி வீதிபுறப்பாடு நடந்தது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், நத்தம் விஜயாசனர், திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. பின்னர் வீதி உலாவும் இரவு கருட வாகனத்தில் சுவாமி கள்ளர் பிரான், விஜயாசனர், காய்சினவேந்தபெருமாள், பொலிந்த நின்ற பிரான் ஆகியோர் அன்ன வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் குடவரை பெருவாயில் எதிர்சேவை நடந்தது. விழாவில் அறங்காவலர் குழுதலைவர் பெருமாள், நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன், ஆய்வாளர் பாலு உறுப்பினர்கள் இசக்கியப்பனர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

THANKS TO http://www.dinamalar.com/News_Detail.asp?Id=233117
read more...
ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்SocialTwist Tell-a-Friend

சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே

0 comments
அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.

"வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமஅதிகம் உள்ளது." என்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

"ஆம், பட்டியலில் இந்தியர்கள் பெயர்கள் உள்ளன. இந்திய அரசு அயல்நாட்டு வங்கிகளில் பெருகி வரும் இந்திய கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதில் விரைவில் ஆக்ரோஷம் காட்டுவது அவசியம், இத்தகையக் கறுப்புப் பணத்தினால் ரூபாயின் மதிப்பு சீரழிந்து வருகிறது." என்றார் அசாஞ்ஜே.

அதே போல், 'தங்கள் இணையதளம் வெளியிட்டு வரும் செய்திகளுக்கு இந்திய அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கு ஏமாற்றம் அளிக்கிறது'. "உலகிலேயே நாங்கள் வெளியிட்டுஅள்ள தகவல்களுக்கு வினையாற்றுவதில் இந்திய அரசுதான் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்திய மக்களுக்கு தவறான கருத்துக்களைக் கூறிவருகிறது. என்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்று கூறினார்கள். ஆனால் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க அவரது நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக உள்ளது." என்றார் அசாஞ்ஜே.

மேலும் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்திற்கு சுவிஸ்.வங்கியுடன் புரிந்துணர்வு கொண்டு இரட்டை வரி விதிப்பு முறை செய்யலாம் என்ற திட்டத்தை அசாஞ்ஜே நேரடியாக நிராகரித்தார். இதனால் இந்தியாவுக்கு அந்தப் பணங்களை திருப்பி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்றார் அவர்.

"இரட்டை வரிவிதிப்பு முறையால் பயனில்லை. சொத்துக்கள் மறைந்திருக்கும் நிலையில் வரி விதிப்பு முறை மட்டும் சரியாகாது. இதனால் இந்தியப் பொருளாதாரம் நசிவடைந்து வருகிறது." என்று கூறினார் அசாஞ்ஜே.

தங்களிடம் சில முக்கியஸ்தர்கள் சுவிஸ்.வங்கியின் பணப்பட்டியலைக் கொடுக்குமாறு பல்வேறு விதங்களில் பேரம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுவிஸ்.வங்கியின் வர்த்தகம் பாதிக்கும் என்பதால் அந்தப் பெயர்களை வெளியிடவேண்டாம் என்று மிரட்டல்கள் வருவதாகவும் அசாஞ்ஜே தெரிவித்தார்.
thanks to http://tamil.webdunia.com/newsworld/news/national/1104/26/1110426013_1.htm
read more...
சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜேSocialTwist Tell-a-Friend

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!

0 comments
Published on April 25, 2011-11:30 am   ·   No Comments
சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும் என  வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ம.நடராசன் உள்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.
TTHANKS TO http://www.thinakkathir.com/?p=6295
read more...
சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!SocialTwist Tell-a-Friend

பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

0 comments
First Published : 19 Apr 2011 12:00:00 AM IST


சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் திங்கள்கிழமை பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டிருக்க, வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி, அருள்பாலிக்கிறார
மதுரை, ஏப். 18: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு கள்ளழகர் பச்சைப் பட்டுடன் மதுரை வைகை ஆற்றில் புதிய தங்கக்குதிரை வாகனத்தில் திங்கள்கிழமை காலை இறங்கினார். ஆற்றில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதையடுத்து, கோயில் திருவிழா நிறைவுபெற்றது.இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் அழகர்மலையிலிருந்து மதுரை நோக்கி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை புதூர் அருகே உள்ள மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடைபெற்றது.இதையடுத்து, மதுரை நகருக்குள் வந்த கள்ளழகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் ஞாயிறுக்கிழமை மாலை எழுந்தருளினார். அங்கிருந்து மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் இரவு எழுந்தருளிய அவருக்கு, திருமஞ்சனமாகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மாலை சூட்டப்பட்டது. பின்னர், புதிய தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்த கள்ளழகருக்கு பச்சைப் பட்டு சாத்தப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை வேஷ்டியிலும், பசுமை வளத்தை நாட்டில் நிலவச் செய்யும் வகையில் பச்சைப் பட்டு சாத்தியும் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றை நோக்கி ஞாயிறு நள்ளிரவில் புறப்பட்டார்.காலை 6.15 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளும் ஆற்று திருக்கண் மண்டபத்தில் வெள்ளிக் குதிரையில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார். இந்நிலையில், காலை 6.40 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்த கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளினார். ôலை 6.45 மணிக்கு ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டபத்தை நோக்கி அவர் ஆற்றில் இறங்கினார்.ஆற்றில் இறங்கிய அழகரின் குதிரை மூன்று முறை குலுங்கியது. இதையடுத்து, பக்தர்கள் பட்டாசு வெடித்து அழகரை வரவேற்றனர்.ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபத்தைச் சுற்றி வந்தார். பின்னர், காலை 6.50 மணிக்கு திருக்கண் மண்டபத்தில் நுழைந்தார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் வகையில் வெள்ளிக் குதிரை குலுங்கியது. கள்ளழகர் வீரராகவப் பெருமாளைச் சுற்றிவந்து, மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், கள்ளழகர் காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ராமராயர் மண்டபம் நோக்கிச் சென்றார். பகல் 1.45 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் மீது பக்தர்கள் நீர் பீய்ச்சியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்பகலில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலை அடைந்தார்.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=406858&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
read more...
பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்SocialTwist Tell-a-Friend

* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !

0 comments
April 27, 2009

இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
thanks to http://www.alaikal.com/news/?p=15652
read more...
* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !SocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!

0 comments
சங்கரன் கோயில்: ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.
நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு

நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

thanks to http://sivasinnapodi1955.blogspot.com/2011/04/blog-post_5832.html
read more...
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!SocialTwist Tell-a-Friend

தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியது

0 comments
இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட நான்காவது மீனவரது பிணமும் தலை இல்லாமல் இன்று கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மீனவர்கள் நான்கு பேர் கடந்த 2 ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது.அவர்கள் கரை திரும்பவில்லை.

மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்து, படகில் வைத்தே வெட்டிக் கொன்று பிணத்தை கடலில் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 மீனவர்களின் சடலங்கள் கிடைத்த நிலையில்,மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது.

இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்
thanks to 
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1104/16/1110416051_1.htm
read more...
தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

0 comments
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும். மேலும் இது பெருத்த விபத்து மற்றும் அதனால் ஏற்படும் பரவலான மோச விளைவுகள் என்பதையும் குறிக்கிறது.

காற்று, காய்கறி, குழாய் நீர், கடல் நீர் என்று கதிர்வீச்சின் வீச்சு பரல்வலாகி வருவதால் இந்த அபாய கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு உலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் விண்வெளியில் காற்றோடு கலக்கும் அணுக்கதிர்வீச்சின் அளவு 7-வது அபாயக் கட்ட அளவை ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

செர்னோபில் அணு விபத்தினால் அதனைச் சுற்றியுள்ள 19 மைல் அல்லது 30 கிமீ சுற்றுப்பரப்பளவு பகுதிகள் மனிதர்கள் வாழ்வதற்கு முற்றிலும் லாயக்கறதாகி விட்டது.

இப்போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலைகளின் கதிர்வீச்சு அந்த நிலமைகளை எட்டியுள்ளது பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த நாட்டு அணுசக்திப் பாதுகாப்பு அமிப்பு தெரிவித்துள்ளது.
thanks to  http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/12/1110412016_1.htm
read more...
அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டதுSocialTwist Tell-a-Friend

இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியது

0 comments

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]
தொழிலுக்குச் சென்ற சமயம் காணாமற் போனதாகக் கூறப்பட்ட நான்கு இந்திய மீனவர்களில் மற்றொருவரின் சடலம் தமிழகக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02
read more...
இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணு

0 comments

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பேச்சைக் கேட்டு நடக்காததால் அதன் செயல்பாடுகளை நெருக்கடிகால நிலை என்கின்றனர். இது முதல்வர் கருணாநிதியின் இயலாமையை காட்டுகிறது.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எங்களின் நிலை குறித்து அறிவிப்போம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

THANKS TO http://thatstamil.oneindia.in/news/2011/04/06/no-cance-coalition-government-says-r-nallakannu-aid0128.html
read more...
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்

0 comments
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது.

இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர் தான் வசிக்கிறார்கள். அவர்கள் உருக்கு, ஜவுளி, சுற்றுலா ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த கிராமம் விமானம் ஓட்டும் பயிற்சி பள்ளிக்கூடம் ஒன்றை அந்த கிராமத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக அது 20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அது திட்டமிட்டு உள்ளது.
THANKS TO
http://www.marikumar.co.cc/2010/11/20.html

read more...
20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்SocialTwist Tell-a-Friend

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

0 comments
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 01:47.05 AM GMT ]
தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும் இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

thanks to http://www.tamilwin.com/view.php?202IBJ30ebjQM4ebiGpVcbdF92Yddc8292bc41pG3e43oQj2023PLc32
read more...
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்SocialTwist Tell-a-Friend

சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!

0 comments
[ பிரசுரித்த திகதி : 2011-04-01 11:40:21 AM GMT    ]

லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது. கார்த்திக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னையில் தங்கியுள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் வீரண்ணராஜு கூறியதாவது:-

கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர்.   நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர். போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

நான் போட்டியிடும் தொகுதியில் (உசிலம்பட்டி) பார்வர்டுபிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் (கம்பம் தொகுதி) போட்டியிடும் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத் திருக்கலாம். இதனாலேயே எங்களை இடையில் இறக்கி விட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடத்தல் புகார் தொடர்பாக வேட்பாளர்கள் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தினர்.
thanks to http://www.tamilulakam.com/news/view.php?id=24841
read more...
சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!SocialTwist Tell-a-Friend

குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!

0 comments

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள், ‘குற்றப் பரம்பரை’க்காக. பாரதியும் ராஜாவும் பெயரைப் போலவே, நகமும் சதையுமாய், கதையும் இசையுமாய் தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். எழுபதுகளின் மத்தியில் தங்கள் திரைப் பயணத்தைத் துவங்கிய இந்த ராஜாக்கள், 24 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு தனி ராஜாங்கமே நடத்தினர். 16 வயதினிலே படம் முதல் பல படங்களில் இருவரும் இணைந்து மயக்கினர். ‘வேதம் புதிது’ படம் இந்த இமயங்களின் பாதை புதிது என்று காட்டியது. இருவரும் பிரிய ஒரு காரணமாயும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மூன்று படங்களில் வெளி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாரதியால், ராஜாவின் இடத்தை நிரப்பவே முடியவில்லை. இதையடுத்து ‘என் உயிர்த் தோழ’னில், தன்னுயிர் தோழனோடு மீண்டும் இணைந்தார் பாரதி.

indillaiyaraja-bharathiraja-z1.jpg

தொடர்ந்து ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’ என தொடர்ந்தவர்கள், ஒரு கட்டத்தில் மீண்டும் பிரிந்தார்கள். தமிழ் சினிமாவில் அப்போதுதான் வீசத் தொடங்கியிருந்த புதிய புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாரதி கை குலுக்க, ராஜா மட்டும் தன் வழக்கமான ராஜபாட்டையில் இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் இருவராலுமே மீண்டும் அந்த பழைய ‘மாஜிக்’கை நிகழ்த்த முடியாமல் போனது தமிழ் ரசிகர்களின் துரதிருஷ்டம்!
‘இந்த இரு சிகரங்களும் இனி இணையவே மாட்டாகளோ…’ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாரதி தானாகவே முன்வந்து, ‘ராஜாவின் இசையின்றி தன் படங்கள் முழுமை பெறாது’ என்பதை பகிரங்கமாய் அறிவித்தார். அதுவும் இன்னொருவர் (ஹிமேஷ் ரேஷம்மையா ) இசையமைத்த தனது ‘பொம்மலாட்டம்’ பட பாடல் வெளியீட்டு விழாவில்.
இந்த விழாவில் இளையராஜாவும், தனது நட்பு குறித்து உருகினார். இப்படி இவர் பேசியதே இல்லை என்று கூட கலந்து கொண்ட கலைஞானி கமல்ஹாசனே வியப்பாக கூறும் அளவுக்கு இளையராஜாவின் பேச்சு இருந்தது.
இந் நிலையில் இரு ராஜாக்களும் மீண்டும் இணைகின்றனர். தமிழ் சினிமாவுக்கு புதிய ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. பாரதிராஜாவின் கனவுப் படமான ‘குற்றப் பரம்பரை’க்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வாழ்ந்த பிரமலைக் கள்ளர் இன மக்கள் பிறப்பாலேயே குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இம்மக்களின் கைரேகைகளைப் பதிந்து கொண்ட போலீசார், தினசரி மாலையானதும் ஆண்களை மட்டும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவார்களாம். காரணம் இரவுகளில் திருடுவது இவர்களில் சிலருக்கு தொழிலாக இருந்ததால்.
இந்த நிலையிலிருந்து பிரமலைக் கள்ளர் இனம் எப்படி மீண்டது என்பதை மதுரை மண்ணின் ஈரமும் வீரமும் மணக்க மணக்கச் சொல்லும் படம்தான் ‘குற்றப் பரம்பரை’.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பாரதிராஜா,
“இந்தப் படத்தை எனது 30 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணமாகப் பார்க்கிறேன். தமிழக வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக இந்தப் படம் அமையும். இளையராஜா மட்டுமல்ல, இன்னும் சில இனிய ஆச்சர்யங்களும் படத்தில் உண்டு” என்றார்.
அது என்ன ஆச்சரியம் என்று வியந்து போய் நாம் புலனாய்ந்து பார்த்தபோது, பாரதிராஜாவையும் இளையராஜாவையும் பெரிதும் நேசிக்கும் இயக்குநர்கள் சேரன், அமீர் இருவருமே இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தெரிய வந்தது. இதில் கமல்ஹாசனும் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். மன மாச்சரியங்கள் மாய்ந்து போகும்போது ஆச்சரியங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்தான்.
இரு ராஜாக்களும் இணைந்து படைக்கப் போகும் இந்த குற்றப் பரம்பரை, இன்னும் பல பரம்பரைகளுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமாக இருக்கப் போவது நிச்சயம்.
thanks to http://www.nitharsanam.net/?p=6955&sess=fea975c01dc2eb50a6a56ccf8135ebce



read more...
குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!SocialTwist Tell-a-Friend

பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்

0 comments


தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் , இன்று காலை 11.30 மணியளவில் பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் - -தி.மு.கழக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த பின்னர் உரையாற்றிய ஸ்ரீதர் வாண்டையார், தான் இத்தொகுதிக்கு புதியவன் அல்ல, 7 தலைமுறைகளாக சிதம்பரம் பகுதியிலேயே வசிக்கிறதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இத்தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களை அவரவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டிய ஸ்ரீதர் வாண்டையார், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளி வாயிலில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், மாவட்ட தி.மு.க பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தி.மு.க.பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜாகமால், M.E.அஷ்ரப் அலி, நகர இளைஞரணி துணை அமைப்பாளார் வேலவன், தவ்ஹீத், ஜாபர், K.H.ஆரிபுல்லாஹ் S.O.S.ஆரிப்,அஜிஜுத்தீன்,அஜீஸ், G.M.கவுஸ், அப்துல் அஹத், அலி முஹம்மது -நாச்சியார்,பொற்செல்வி,முஸ்லிம்லீக் நகர தலைவர் பஷீர் அஹமது, கவுஸ் ஹமீது ராஜா, கியாசுதீன், கலிக்குஜ்ஜமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் முடிவண்ணன், நகர தலைவர் முருகன், சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீது கவுஸ், சேக் அப்துல் காதர், வாப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

THANKS TO http://mypno.blogspot.com/2011/03/blog-post_25.html
read more...
பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்SocialTwist Tell-a-Friend

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைது

0 comments
ராமநாதபுரம் திமுக எம்.பி ஜே.கே.ரித்திஷ் கைது

Last Updated : 29 Mar 2011 11:39:18 AM IST

ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=397471&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
read more...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைதுSocialTwist Tell-a-Friend

வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்

0 comments
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எங்களது நாடாளும் மக்கள் கட்சி க்கு வைகோ ஆதரவு தெரிவித்திருந்தால், தெரிவித்தால் பெருமையாக இருந்திருக்கும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் .


தற்போதைக்கு அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்திக். 30 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே அவர்களில் 3 பேர் அதிமுகவில் போய் சேர்ந்து கொண்டனர். இதனால் விரக்தியாகியுள்ளார் கார்த்திக்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.

என்னை மாதிரியே எங்கண்ணன் வைகோ...!

எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.

சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.

சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

சிடி போட்டு அனுப்பப் போறேன்!

29-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரச்சார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்,

இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/27/vaiko-support-is-honour-karthik-aid0091.html
read more...
வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்SocialTwist Tell-a-Friend

விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்

0 comments


thanks to http://www.narumugai.com/2011/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/
read more...
விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்SocialTwist Tell-a-Friend

புதிய மூவேந்தர் முன்னணி கழகம்

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/23/dr-sethuraman-mmk-breaks-into-two-aid0090.html

மதுரை: அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் இரண்டாக உடைந்தது. புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தனிக்கட்சி உருவாகியுள்ளது.

மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சுழி தொகுதியை ஒதுக்கியுள்ளார். அங்கு இசக்கி முத்து என்பவர் போட்டியிடுவார் என்று சேதுராமன் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் அக் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ஒச்சாத் தேவர் கட்சியை உடைத்து புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த ஒச்சாத் தேவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும். திமுகவை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்றார்.

கட்சியை உடைத்ததே அழகிரி தான் என்று சேதுராமன் தரப்பு புகார் கூறுகிறது.

read more...
புதிய மூவேந்தர் முன்னணி கழகம்SocialTwist Tell-a-Friend

பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்

0 comments
சென்னை: நாங்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்ட் பிளாக் உசிலம்பட்டியில் போட்டியிடுவதால் அங்கு வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் சார்பாக போட்டியிட, ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து, பதினைந்து வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நேர்காணலும் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதியில் நாங்கள் வணங்கும் தெய்வமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடுவதால், அவர் மீது உண்மையான பக்தி கொண்ட நான், கிட்டத்தட்ட பதினைந்து வேட்பாளர்கள் போட்டியிட வந்தும் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் எங்களது கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

இந்த தீர்மானத்தை எங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கூறியுள்ளார் கார்த்திக்.

அதிமுக கூட்டணியின் அவமானத்தால் சிறுத்துப் போன கார்த்திக், முதல் ஆளாக கூட்டணியை விட்டுவெளியேறினார் என்பது நினைவிருக்கலாம். மேலும், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/21/we-will-stay-away-from-usilampatti-karthik-aid0091.html
read more...
பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்SocialTwist Tell-a-Friend