அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

0 comments
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும். மேலும் இது பெருத்த விபத்து மற்றும் அதனால் ஏற்படும் பரவலான மோச விளைவுகள் என்பதையும் குறிக்கிறது.

காற்று, காய்கறி, குழாய் நீர், கடல் நீர் என்று கதிர்வீச்சின் வீச்சு பரல்வலாகி வருவதால் இந்த அபாய கட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு உலையில் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் விண்வெளியில் காற்றோடு கலக்கும் அணுக்கதிர்வீச்சின் அளவு 7-வது அபாயக் கட்ட அளவை ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

செர்னோபில் அணு விபத்தினால் அதனைச் சுற்றியுள்ள 19 மைல் அல்லது 30 கிமீ சுற்றுப்பரப்பளவு பகுதிகள் மனிதர்கள் வாழ்வதற்கு முற்றிலும் லாயக்கறதாகி விட்டது.

இப்போது ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலைகளின் கதிர்வீச்சு அந்த நிலமைகளை எட்டியுள்ளது பெரும் கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த நாட்டு அணுசக்திப் பாதுகாப்பு அமிப்பு தெரிவித்துள்ளது.
thanks to  http://tamil.webdunia.com/newsworld/news/international/1104/12/1110412016_1.htm
read more...
அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டதுSocialTwist Tell-a-Friend

இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியது

0 comments

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]
தொழிலுக்குச் சென்ற சமயம் காணாமற் போனதாகக் கூறப்பட்ட நான்கு இந்திய மீனவர்களில் மற்றொருவரின் சடலம் தமிழகக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02
read more...
இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணு

0 comments

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.

நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி உயர்வும், மின்வெட்டும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும். விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நாங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் பேச்சைக் கேட்டு நடக்காததால் அதன் செயல்பாடுகளை நெருக்கடிகால நிலை என்கின்றனர். இது முதல்வர் கருணாநிதியின் இயலாமையை காட்டுகிறது.

160 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்.

கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எங்களின் நிலை குறித்து அறிவிப்போம். தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

THANKS TO http://thatstamil.oneindia.in/news/2011/04/06/no-cance-coalition-government-says-r-nallakannu-aid0128.html
read more...
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்

0 comments
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது.

இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர் தான் வசிக்கிறார்கள். அவர்கள் உருக்கு, ஜவுளி, சுற்றுலா ஆகிய தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த கிராமம் விமானம் ஓட்டும் பயிற்சி பள்ளிக்கூடம் ஒன்றை அந்த கிராமத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக அது 20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமானிகளுக்கு பயிற்சி அளிக்க அது திட்டமிட்டு உள்ளது.
THANKS TO
http://www.marikumar.co.cc/2010/11/20.html

read more...
20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்SocialTwist Tell-a-Friend

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

0 comments
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 01:47.05 AM GMT ]
தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும் இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

thanks to http://www.tamilwin.com/view.php?202IBJ30ebjQM4ebiGpVcbdF92Yddc8292bc41pG3e43oQj2023PLc32
read more...
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்SocialTwist Tell-a-Friend

சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!

0 comments
[ பிரசுரித்த திகதி : 2011-04-01 11:40:21 AM GMT    ]

லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் 21 இடங்களில் போட்டியிடுகிறது. கார்த்திக் கட்சி சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணராஜு, கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை சத்தியமூர்த்தி பவன் எதிரில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தபோது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னையில் தங்கியுள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் வீரண்ணராஜு கூறியதாவது:-

கடந்த 29-ந்தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிர்வாகிகளுடன் சென்னை வந்தேன். ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜில் அன்று இரவு தங்கியிருந்தபோது, போடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிவழகன், 2 பேருடன் வந்து ஊருக்கு செல்வோம் என்று கூறினார். இதையடுத்து கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனும், நானும் அவருடன் சென்றோம். லாட்ஜில் இருந்து ஆட்டோவில் ஏறி, எல்.ஐ.சி. கட்டிடம் அருகே வந்து இறங்கினோம். அங்கு தயார் நிலையில் இருந்த ஸ்கார்பியோ காரில் எங்களை ஏற்றிக் கொண்டனர். நடுவில் உள்ள இருக்கையில் என்னை உட்கார சொன்னார்கள். அறிவழகனும், ரவிச்சந்திரனும் பின்னால் ஏறிக் கொண்டனர்.

எனது அருகில் அடையாளம் தெரியாத 2 பேர் உட்கார்ந்து கொண்டனர்.   நீங்கள் யார்? எங்கே போகிறோம் என நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு அவர்கள் பேசாமல் வா... எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் திகைத்துப்போய் இருந்தேன். இந்த நேரத்தில் எனது மனைவியிடமிருந்து எனக்கு போன் வந்தது. என்னை அவருடன் பேசுவதற்கு அனுமதிக்காமல் செல்போனை பிடுங்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காக காரை நிறுத்தினார்கள். அப்போதுதான் காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி கட்டியிருப்பதை நான் பார்த்தேன். பின்னர் கார் புறப்பட்டதும் என்னை கீழே இறக்கி விடுகிறீர்களா என சத்தம் போட்டு காரில் இருந்து குதிக்கவா என்று நான் கோபமாக கேட்டேன். உடனே அருகில் இருந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார். இதனால் என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

பின்னர் மறுநாள் காலையில் கார் திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்தவர்களுக்கு ஒரு போன் வந்தது. உடனே என்னையும், கம்பம் தொகுதி வேட்பாளர் ரவிச்சந்திரனையும் கீழே இறக்கி விட்டுவிட்டு அறிவழகனை (போடி தொகுதி வேட்பாளர்) மட்டும் அழைத்துச் சென்று விட்டனர். போடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது வெற்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்கள் கட்சி வேட்பாளரை அவர்கள் இழுத்துக் கொண்டனர்.

நான் போட்டியிடும் தொகுதியில் (உசிலம்பட்டி) பார்வர்டுபிளாக் நிற்கிறது. ரவிச்சந்திரன் (கம்பம் தொகுதி) போட்டியிடும் தொகுதியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இவர்கள் தோற்றால் பரவாயில்லை என்று அ.தி.மு.க. நினைத் திருக்கலாம். இதனாலேயே எங்களை இடையில் இறக்கி விட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடத்தல் புகார் தொடர்பாக வேட்பாளர்கள் தங்கியிருந்த லாட்ஜில் போலீசார் விசாரணை நடத்தினர்.
thanks to http://www.tamilulakam.com/news/view.php?id=24841
read more...
சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!SocialTwist Tell-a-Friend

குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!

0 comments

இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள், ‘குற்றப் பரம்பரை’க்காக. பாரதியும் ராஜாவும் பெயரைப் போலவே, நகமும் சதையுமாய், கதையும் இசையுமாய் தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். எழுபதுகளின் மத்தியில் தங்கள் திரைப் பயணத்தைத் துவங்கிய இந்த ராஜாக்கள், 24 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு தனி ராஜாங்கமே நடத்தினர். 16 வயதினிலே படம் முதல் பல படங்களில் இருவரும் இணைந்து மயக்கினர். ‘வேதம் புதிது’ படம் இந்த இமயங்களின் பாதை புதிது என்று காட்டியது. இருவரும் பிரிய ஒரு காரணமாயும் அமைந்தது. அதைத் தொடர்ந்து மூன்று படங்களில் வெளி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய பாரதியால், ராஜாவின் இடத்தை நிரப்பவே முடியவில்லை. இதையடுத்து ‘என் உயிர்த் தோழ’னில், தன்னுயிர் தோழனோடு மீண்டும் இணைந்தார் பாரதி.

indillaiyaraja-bharathiraja-z1.jpg

தொடர்ந்து ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’ என தொடர்ந்தவர்கள், ஒரு கட்டத்தில் மீண்டும் பிரிந்தார்கள். தமிழ் சினிமாவில் அப்போதுதான் வீசத் தொடங்கியிருந்த புதிய புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பாரதி கை குலுக்க, ராஜா மட்டும் தன் வழக்கமான ராஜபாட்டையில் இசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஆனால் இருவராலுமே மீண்டும் அந்த பழைய ‘மாஜிக்’கை நிகழ்த்த முடியாமல் போனது தமிழ் ரசிகர்களின் துரதிருஷ்டம்!
‘இந்த இரு சிகரங்களும் இனி இணையவே மாட்டாகளோ…’ என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், பாரதி தானாகவே முன்வந்து, ‘ராஜாவின் இசையின்றி தன் படங்கள் முழுமை பெறாது’ என்பதை பகிரங்கமாய் அறிவித்தார். அதுவும் இன்னொருவர் (ஹிமேஷ் ரேஷம்மையா ) இசையமைத்த தனது ‘பொம்மலாட்டம்’ பட பாடல் வெளியீட்டு விழாவில்.
இந்த விழாவில் இளையராஜாவும், தனது நட்பு குறித்து உருகினார். இப்படி இவர் பேசியதே இல்லை என்று கூட கலந்து கொண்ட கலைஞானி கமல்ஹாசனே வியப்பாக கூறும் அளவுக்கு இளையராஜாவின் பேச்சு இருந்தது.
இந் நிலையில் இரு ராஜாக்களும் மீண்டும் இணைகின்றனர். தமிழ் சினிமாவுக்கு புதிய ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. பாரதிராஜாவின் கனவுப் படமான ‘குற்றப் பரம்பரை’க்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் வாழ்ந்த பிரமலைக் கள்ளர் இன மக்கள் பிறப்பாலேயே குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இம்மக்களின் கைரேகைகளைப் பதிந்து கொண்ட போலீசார், தினசரி மாலையானதும் ஆண்களை மட்டும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவார்களாம். காரணம் இரவுகளில் திருடுவது இவர்களில் சிலருக்கு தொழிலாக இருந்ததால்.
இந்த நிலையிலிருந்து பிரமலைக் கள்ளர் இனம் எப்படி மீண்டது என்பதை மதுரை மண்ணின் ஈரமும் வீரமும் மணக்க மணக்கச் சொல்லும் படம்தான் ‘குற்றப் பரம்பரை’.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய பாரதிராஜா,
“இந்தப் படத்தை எனது 30 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணமாகப் பார்க்கிறேன். தமிழக வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக இந்தப் படம் அமையும். இளையராஜா மட்டுமல்ல, இன்னும் சில இனிய ஆச்சர்யங்களும் படத்தில் உண்டு” என்றார்.
அது என்ன ஆச்சரியம் என்று வியந்து போய் நாம் புலனாய்ந்து பார்த்தபோது, பாரதிராஜாவையும் இளையராஜாவையும் பெரிதும் நேசிக்கும் இயக்குநர்கள் சேரன், அமீர் இருவருமே இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தெரிய வந்தது. இதில் கமல்ஹாசனும் இருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். மன மாச்சரியங்கள் மாய்ந்து போகும்போது ஆச்சரியங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்தான்.
இரு ராஜாக்களும் இணைந்து படைக்கப் போகும் இந்த குற்றப் பரம்பரை, இன்னும் பல பரம்பரைகளுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமாக இருக்கப் போவது நிச்சயம்.
thanks to http://www.nitharsanam.net/?p=6955&sess=fea975c01dc2eb50a6a56ccf8135ebce



read more...
குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!SocialTwist Tell-a-Friend

பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்

0 comments


தி.மு.க அணியில் அங்கம் வகிக்கும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் , இன்று காலை 11.30 மணியளவில் பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக - ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய சேர்மன் - -தி.மு.கழக ஒன்றிய செயலாளர் முத்து.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்த பின்னர் உரையாற்றிய ஸ்ரீதர் வாண்டையார், தான் இத்தொகுதிக்கு புதியவன் அல்ல, 7 தலைமுறைகளாக சிதம்பரம் பகுதியிலேயே வசிக்கிறதாக குறிப்பிட்டார், மேலும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் இத்தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றப் பாடுபடுவேன் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டையின் முக்கிய பிரமுகர்களை அவரவர்களின் இல்லத்தில் சந்தித்து ஆதரவு திரட்டிய ஸ்ரீதர் வாண்டையார், ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளி வாயிலில் மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். இந்நிகழ்ச்சியின் போது பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும், நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், மாவட்ட தி.மு.க பிரதிநிதி காண்டீபன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய தி.மு.க.பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி, கோமு, கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜாகமால், M.E.அஷ்ரப் அலி, நகர இளைஞரணி துணை அமைப்பாளார் வேலவன், தவ்ஹீத், ஜாபர், K.H.ஆரிபுல்லாஹ் S.O.S.ஆரிப்,அஜிஜுத்தீன்,அஜீஸ், G.M.கவுஸ், அப்துல் அஹத், அலி முஹம்மது -நாச்சியார்,பொற்செல்வி,முஸ்லிம்லீக் நகர தலைவர் பஷீர் அஹமது, கவுஸ் ஹமீது ராஜா, கியாசுதீன், கலிக்குஜ்ஜமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் முடிவண்ணன், நகர தலைவர் முருகன், சட்டநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹமீது கவுஸ், சேக் அப்துல் காதர், வாப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் ரமேஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முன்னதாக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

THANKS TO http://mypno.blogspot.com/2011/03/blog-post_25.html
read more...
பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்SocialTwist Tell-a-Friend

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைது

0 comments
ராமநாதபுரம் திமுக எம்.பி ஜே.கே.ரித்திஷ் கைது

Last Updated : 29 Mar 2011 11:39:18 AM IST

ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=397471&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
read more...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைதுSocialTwist Tell-a-Friend

வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்

0 comments
சென்னை: சட்டசபைத் தேர்தலில் எங்களது நாடாளும் மக்கள் கட்சி க்கு வைகோ ஆதரவு தெரிவித்திருந்தால், தெரிவித்தால் பெருமையாக இருந்திருக்கும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் .


தற்போதைக்கு அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்திக். 30 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே அவர்களில் 3 பேர் அதிமுகவில் போய் சேர்ந்து கொண்டனர். இதனால் விரக்தியாகியுள்ளார் கார்த்திக்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் அறிவித்த 30 வேட்பாளர்களில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போதும் இது போல் தான் அவர்கள் செய்தார்கள். இப்போதும் அப்படி தான் செய்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது நான் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இருக்கும் சகாக்களுக்கு இது போன்று தான் சிந்திக்க தோன்றும்.

என்னை மாதிரியே எங்கண்ணன் வைகோ...!

எனக்கு வைகோவை ரொம்ப பிடிக்கும். அவரை என் மூத்த சகோதரனாக நினைக்கிறேன். அதனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்த தம்பி வெளியே வந்தது போல் அவரும் வந்திருக்கிறார். வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும்.

தேர்தல் அறிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிலர் காப்பி அடிக்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான். நாங்கள் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் டார்ச் லைட் சின்னம் கேட்டு இருக்கிறோம்.

சிவகாசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். நான் அங்கு போட்டியிட்டால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் ஓட்டுக்களையாவது பெறுவேன். ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றபோது அந்த கட்சியை ஆதரித்து சிவகாசியில் பேசி விட்டேன். இப்போது நான் அவர்களுடன் இல்லை. இப்போது அவர்களை எதிர்த்து அங்கே எப்படி பேச முடியும்.

சிவகாசி மட்டுமல்லாமல் நாங்கள் போட்டியிடாத இடங்களில் இருந்து சுயேச்சை வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களில் எங்கள் கட்சிக்கு ஏற்றவர்களை தேர்வு செய்து, அவர்களை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

சிடி போட்டு அனுப்பப் போறேன்!

29-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். குறைந்த நாட்களில் எல்லா தொகுதிக்கும் என்னால் செல்ல முடியாது. அதனால் பிரச்சார சி.டி.யை தயார் செய்து வைத்து இருக்கிறேன். அந்த சி.டி.க்களை நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்புவேன்,

இலவசமாக கொடுக்க முடியாத பொருட்களையெல்லாம், கொடுக்கப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை சுயசிந்தனை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொய்யான தேர்தல் அறிக்கையை யாரும் நம்பி ஏமாறாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துள்ளனர்

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/27/vaiko-support-is-honour-karthik-aid0091.html
read more...
வைகோ எங்களை ஆதரித்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும்-கார்த்திக் ஆதங்கம்SocialTwist Tell-a-Friend

விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்

0 comments


thanks to http://www.narumugai.com/2011/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/
read more...
விவேக்குக்கு பில்டப் கொடுத்த அப்துல் கலாம்SocialTwist Tell-a-Friend

புதிய மூவேந்தர் முன்னணி கழகம்

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/23/dr-sethuraman-mmk-breaks-into-two-aid0090.html

மதுரை: அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் இரண்டாக உடைந்தது. புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தனிக்கட்சி உருவாகியுள்ளது.

மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சுழி தொகுதியை ஒதுக்கியுள்ளார். அங்கு இசக்கி முத்து என்பவர் போட்டியிடுவார் என்று சேதுராமன் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் அக் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ஒச்சாத் தேவர் கட்சியை உடைத்து புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த ஒச்சாத் தேவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும். திமுகவை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்றார்.

கட்சியை உடைத்ததே அழகிரி தான் என்று சேதுராமன் தரப்பு புகார் கூறுகிறது.

read more...
புதிய மூவேந்தர் முன்னணி கழகம்SocialTwist Tell-a-Friend

பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்

0 comments
சென்னை: நாங்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்ட் பிளாக் உசிலம்பட்டியில் போட்டியிடுவதால் அங்கு வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் சார்பாக போட்டியிட, ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து, பதினைந்து வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நேர்காணலும் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதியில் நாங்கள் வணங்கும் தெய்வமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடுவதால், அவர் மீது உண்மையான பக்தி கொண்ட நான், கிட்டத்தட்ட பதினைந்து வேட்பாளர்கள் போட்டியிட வந்தும் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் எங்களது கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

இந்த தீர்மானத்தை எங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கூறியுள்ளார் கார்த்திக்.

அதிமுக கூட்டணியின் அவமானத்தால் சிறுத்துப் போன கார்த்திக், முதல் ஆளாக கூட்டணியை விட்டுவெளியேறினார் என்பது நினைவிருக்கலாம். மேலும், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/21/we-will-stay-away-from-usilampatti-karthik-aid0091.html
read more...
பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்SocialTwist Tell-a-Friend

நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

0 comments
thanks to  http://election.dinamalar.com/election_news_detail.php?id=1129


சென்னை : நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதியில் கூலி தொழிலாளி சுப்புலட்சுமி போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக், அவரது கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சி சார்பில் 41 தொகுதிகளை தேர்வு செய்து, இதில் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன். தற்போது முதல் கட்டமாக 14 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும். எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்று இரண்டு நாளில் தெரிவிப்பேன்.

ஜெயலலிதாவுக்கு சரியான வழிகாட்டி இல்லை. அவரது தன்னிச்சையான நடவடிக்கை, அவரது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கருணாநிதி நாகரிகமாகவும், அனைவரையும் அரவணைத்தும் கட்சியை பலப்படுத்தி ஓட்டுகளை பெற முயன்று வருகிறார். தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என்று வர்ணித்து வந்த ஜெயலலிதா, தேர்தலில் மெஜாரிட்டியான இடத்தை தன் கட்சி மட்டுமே பெற வேண்டும் என நினைத்து 160 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவரது நினைப்பும், செயல்பாடும் சரியானது தானா என தேர்தல் முடிவு வந்தால் தெரியும். இவ்வாறு கார்த்திக் கூறினார்.

போலி வேட்பாளர் : ""அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியில் இல்லாத ஒருவர், தன்னை கார்த்திக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று குறிப்பிட்டு கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி வேறு ஏதோ ஆதாயம் கருதி, மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளோம்,'' என்று கார்த்திக் தெரிவித்தார்.
read more...
நடிகர் கார்த்திக் கட்சி சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிப்புSocialTwist Tell-a-Friend

முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழா

0 comments

First Published : 16 Mar 2011 11:01:45 AM IST

பரமக்குடி, மார்ச் 15: பரமக்குடி அருள்மிகு ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா 4-ம் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வன்னியகுல ஷத்திரிய மகாசபையினரால் வண்டி மாகாளி உற்சவ விழா நடைபெற்றது.

பரமக்குடி ஆயிர வைசியர்களுக்கு பாத்தியமான ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் பங்குனித் திருவிழா, மார்ச் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொ டங்கியது.செவ்வாய்க்கிழமை காலையில் ரிஷப வாகனத்தில் வன்னியர்குல சேர்வைக்காரர்கள் மண்டகப்படியில் எழுந்தருளினார். இதையொட்டி மாலை 4.30 மணிக்கு வன்னியகுல ஷத்திரியர்கள் வண்டி மாகாளி வேஷமிட்டும், புலி வேஷமிட்டும் ஊர்வலம் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் சென்றடைந்தனர்.மார்ச்-20-ம் தேதி இரவு 7.45 மணிக்கு விசேஷ மின்சார தீப அலங்காரத்துடன் அம்பாள் தேரோட்டம் நடைபெறும். 

அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு அம்பாள் கள்ளர் திருக்கோலத்துடன் புஷ்பப் பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளும் காட்சியும், மார்ச் 22-ம் தேதி அம்பாளுக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Madurai&artid=391200&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=
read more...
முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி உற்சவ விழாSocialTwist Tell-a-Friend

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்

0 comments
சென்னை : ""மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வந்தார். அவரை தொடர்ந்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் வந்தனர். தொடர்ந்து இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், துணை செயலர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதி அடையாளம் காணும் பங்கீடு முடிக்காமல், அ.தி.மு.க., தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்தது குறித்து கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின், அனைவரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என, அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள் வரிசையாக தே.மு.தி.க., அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

வெளியே வந்த கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ""அ.தி.மு.க., அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது குறித்து, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்குள் உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்கள் தேசிய அளவில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்திருப்பதால், இரு கம்யூ., கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். எங்கள் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்,'' என்றார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன், ""தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கு இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.
thanks to http://election.dinamalar.com/election_news_detail.php?id=514
read more...
மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சேதுராமன்SocialTwist Tell-a-Friend

சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி

0 comments



சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்தி

First Published : 18 Mar 2011 05:38:36 AM IST

சிதம்பரம். மார்ச் 17: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமகவினர் அதிகம் பேர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் தொகுதியான சிதம்பரம் தொகுதியை கூட்டணிக்  கட்சியான மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் ஏமாற்றம் அடைந்து அதிருப்தியில் உள்ளனர்.  ÷சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தோல்வியுற்றார்.  ÷நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ துரை.கி.சரவணன் விருப்ப மனு கொடுத்திருந்தார். மேலும் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), முத்துபெருமாள் (பரங்கிப்பேட்டை) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைமையில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தொகுதி மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.  ÷சிதம்பரம் தொகுதி மூ.மு.க.வுக்கு ஒதுக்கியதால் பாமகவினர், வன்னியர் சமூக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருத்து வேறுபாடுகளை களைந்து வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளையும், திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அரவணைத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவுடன் அக்கட்சிகளின் வாக்கு வங்கியை முழுமையாக பெற்று மூவேந்தர் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது.  ÷போட்டியாளரை வீழ்த்த அமைச்சரின் சாதுர்யம்: கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் தனது அரசியல் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்கக்கூடாது என மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மூலம் சிதம்பரம் தொகுதி கேட்டு வலியுறுத்தி அக்கட்சிக்கு சிதம்பரம் தொகுதியை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது. ÷அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இந்த முறை துரை.கி.சரவணனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என உளவுத்துறை முதல் அனைத்து பகுதியிலிருந்து திமுகவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ÷ஆனால் திமுக வெற்றி பெறும் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு அமைச்சர் வாங்கிக் கொடுத்துள்ளார் என துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  ÷சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அதிமுகவினர் அதிருப்தி: கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயமும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.அருண்மொழிதேவனும் வெற்றி பெற்றனர். தற்போது சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, ஏ.அருண்மொழிதேவன், செல்வி ராமஜெயம், சிதம்பரம் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் சொ.ஜவகர் உள்ளிட்ட 50- அதிமுகவினர் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.  ÷வெற்றி பெற்ற இத்தொகுதிகளில் இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. இந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிலையுள்ளதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81:+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95,+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&artid=391912&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu
read more...
சிதம்பரம் மூ.மு.க.வுக்கு ஒதுக்கீடு: திமுக, பாமக அதிருப்திSocialTwist Tell-a-Friend

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம் சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

0 comments
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அவை குறித்த விவரம்:

- கோவில், மசூதி, ஆலயங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது.

- ஜாதி, மதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.

- பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசார சுற்றுப்பயணங்கள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் போலீஸ் முன் அனுமதி பெறவேண்டும்.

- தேர்தல் பிரசாரத்தின்போது கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் யாரேனும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினால், அதற்கான செலவுக் கணக்கை வேட்பாளர்களின் பெயரில்தான் ஏற்றப்படும்.

- ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நட்சத்திப் பிரசாரகர்கள் யார் என்பதை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரசாரகர்களின் பயணச் செலவுகள், வேட்பாளர் கணக்கில் வராது.

- பொது இடங்களில் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது. தனியார் இடங்களில் சுவர்களின் அனுமதி பெற்ற பிறகே தேர்தல் விளம்பரம் செய்யவேண்டும்.

- விளம்பர செலவுகள் அனைத்தும் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

- அரசியல் பொதுக் கூட்டங்கள், பிரசாரங்கள், சுவர் விளம்பரங்கள், ஊர்வலங்கள், பேனர்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்கான செலவுகள் கணக்கிடப்பட்டு வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் கார், வேன், பஸ் ஆகியவற்றின் வாடகை எவ்வளவு என்பதை கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்து அந்த தொகை தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

- தேர்தலில் முறைகேட்டை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்படும். இதில் ஒரு துணை தாசில்தார், ஒரு போலீஸ் அதிகாரி, 4 போலீசார், ஒரு வீடியோ கிராபர் இடம் பெறுவார். இவர்கள் தவிர ஒவ்வொரு தொகுதியிலும் 4 அல்லது 5 சோதனை மையம் அமைக்கப்படும். இந்த மையங்கள் அடிக்கடி இடமாற்றப்படும்.

- ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி உதவி இயக்குனர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வேட்பாளருக்கு வரும் பணம் ஆய்வு செய்யப்படும்.

- வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும்போது 3 வாகனங்கள் மட்டுமே வேட்பு மனுதாக்கல் அலுவலகம் அருகே 100 மீட்டர் வரை அனுமதிக்கப்படும். வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு செல்லலாம். அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சொத்து விவரம், வழக்கு விவரம் ஆகிய 2 வகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் விவரங்களை மொத்தமாக குறிப்பிடாமல் தனித்தனியாக குறிப்பிடவேண்டும். அந்த சொத்து யாரிடம் வாங்கியது? அது என்ன சொத்து? வாங்கிய போது மதிப்பு என்ன? இப்போது மதிப்பு என்ன? அதில் முதலீடு செய்த தொகை என்ன? போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதுதவிர அவரது குடும்பத்தில் உள்ள வாரிசு தாரர்கள் சொத்து கணக்கு காட்டவேண்டும்.

- கல்யாண மண்டபங்கள் கண்காணிக்கப்படும். அதில் என்ன விழா நடக்கிறது? எதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளது? என்பது பற்றி கண்காணிக்கப்படும்.

- மொத்தமாக எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும். இது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/04/ec-announces-tough-norms-political-parties-aid0091.html
read more...
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம் சட்டசபைத் தேர்தல்-அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுSocialTwist Tell-a-Friend

சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலி

0 comments
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/03/03/one-killed-jallikattu-near-trichy-aid0091.html
திருச்சி: திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் கிராமத்தில் மகா சிவராத்திரியையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டின்போது மாடு பிடி வீரர் ஒருவரை காளை முட்டியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
read more...
சிவராத்திரி ஜல்லிக்கட்டு-மாடு முட்டி ஒருவர் பலிSocialTwist Tell-a-Friend

இலங்கை தூதரகம் முன் சென்னையில் போராட்டம் வைகோ,நடராஜன், நெடுமாறன் கைது

0 comments
சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் கொடும் பாவியை எரித்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன் மற்றும் புதிய பார்வை நடராஜன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிர பாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை சிதைத்ததைக் கண்டித்தும் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார் பில் சென்னையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து தொடங் கிய அறப் போராட்டப் பேரணிக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வேளையில் இவர்கள் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
http://www.valampuri...ws.php?ID=16757
read more...
இலங்கை தூதரகம் முன் சென்னையில் போராட்டம் வைகோ,நடராஜன், நெடுமாறன் கைதுSocialTwist Tell-a-Friend