சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!

1 comments
உங்கள் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் மானேஜர் ரவீந்திரனை முதன் முதலில் சந்தித்த தினம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ""ஐயம் ரவீந்திரா. பளாக் பெல்ட்'' என்று பூரிப்புடன் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்தேன். அந்தக் கெச்சலான உடம்பையும், சதா நாய் துரத்துவது போன்ற முழியையும் பார்த்தால் சற்றும் கராத்தே சண்டையன் போலவே இல்லை. மேற்கொண்டு விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவன் கறுப்பு பெல்ட் வாங்கியிருப்பது சிக்ஸ் சிக்மாவில்!






read more...
சாப்பாட்டுக் கூடைக்கு ஆறு சிக்மா!SocialTwist Tell-a-Friend

தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்

0 comments
சென்னை & மதுரை: தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க 200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படவுள்ளது
read more...
தொழிற்சாலைகளுக்காக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கும் தமிழகம்SocialTwist Tell-a-Friend

எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்

0 comments

வீரகேசரி இணையம் 12/4/2009 6:11:01 PM - புவி வெப்பமாதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் எதிர்காலத்தில் தம்மை தயார்படுத்திக் கொள்வதற்காக நேபாள நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தில் நடைபெற்றது.உலகத்தில் மிக உயரமான இடத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் என்ற பெருமையை இந்தக் கூட்டம் பெறுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் ஒக்சிஜன் நிரப்பப்பட்ட வாயுதாங்கிகளுடன் அங்கு சென்றிருந்தனர். மிகவும் குளிரான காலநிலையில் (17192 அடி உயரத்தில்) பனிநிறைந்த சிகரத்தில் இடம்பெற்ற இக்கூட்டம் சுவாரஸ்ய நிகழ்வாக உலகத்தவர்களால் பார்க்கப்படுகிறது.அந்நாட்டின் பிரதமர், அவருக்கு அடுத்த அந்தஸ்துப் பதவி வகிப்பவர் ஆகிய இருவருடன் 20 அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை, மாலைதீவுகளின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
(படங்கள் ஏ.எப்.பி)
thanks to http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=19391
read more...
எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவைக் கூட்டம்SocialTwist Tell-a-Friend