பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

0 comments

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.
நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)
நன்றி: http://mastanoli.blogspot.com/2010/03/blog-post_6094.html
read more...
பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?SocialTwist Tell-a-Friend

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]

0 comments
அளவில் சிறிய இலங்கைத் தீவு ஏதோவதொரு அம்சத்திற்கு இதுநாள் வரைக்கும் முன்மாதிரியாக விளங்கியதா என்றால் இல்லையென்றே கூறவேண்டும்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இல்லாதொழித்ததன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் முன் பழக்கப்படாத ஒரு கெளரவ நிலையில் தற்போது உள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற 'The Economist' என்னும் இதழ் எழுதியுள்ளது.
அது தொடர்ந்து எழுதியுள்ளதாதவது,

நெகிழ்வுப் போக்குடன் செயற்படாத உலகின் ஒருசில நாடுகள் தத்தமது நாடுகளில் நிலவும் கிளர்ச்சிசார் பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 'சிறிலங்காவில் கைக்கொள்ளப்பட்ட முறை' எதுவோ அது தொடர்பாக ஆராய்ந்து அறிவதற்கு விரும்புகின்றன.

அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் மியன்மாரது இராணுவச் சர்வாதிகாரியான தன் ஸ்வே [Than Shwe], கடந்த நவம்பரில் இலங்கைத் தீவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

'கிளர்ச்சிசார் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சிறிலங்காவினது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், பர்மாவிலுள்ள இனக்குழுமங்களின் செயற்பாடுகளுக்கு எதிரான முனைப்புக்களை ஜெனரல் தன் ஸ்வே மேற்கொள்ளக்கூடும்' என இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய சரிதையாளரான பெனெடிக்ட் றோகேஸ் கூறுகிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சிறிலங்காவில் பெறப்பட்டிருப்பதை உலகம் கண்டிருக்கும் அதேநேரம் தனது நாட்டில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிசார் போராட்டங்களை அது மறந்துவிட்டது என கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் மியன்மாரின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் தாய்லாந்தினது பிரதமர் அபிகிஸ்ட் விஜயவ [Abhisit Vejjajiva] சிறிலங்காவினது பிரதமருடன் கடந்த ஒக்ரோபரில் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் [தென் தாய்லாந்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிளர்ச்சிகளுக்கு பாங்கொக் முகம்கொடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது].

சிறிலங்காவினது 'அமைதிக்கான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பு' என அது வர்ணிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தொடர் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புக்களைப் பெறுவதற்காக கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பயணம் செய்த பங்களாதேசின் இராணுவத் தூதுக்குழு சிறிலங்காவினது இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
தத்தமது நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோசமான விளைவுகளைத் தரவல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கொலம்பியா தொடக்கம் இஸ்ரேல் வரையிலான பலதரப்பட்ட நாடுகளையும் சேர்ந்த இராணுவ ஜெனரல்களும் அரசியல் வாதிகளும் சிறிலங்காவினது அனுபவத்தினைத் திரைமறைவில் பயன்படுத்துகிறார்கள் போலத் தெரிகிறது.

கிளர்ச்சிசார் முனைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு; சிறிலங்கா கற்றுக்கொடுத்திருக்கும் பாடமானது மூன்று முக்கிய அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் தலைவர் லுயிஸ் ஆர்பர் கூறுகிறார்.

முதலாவது, 'நெகிழ்வுப்போக்கற்ற போர் மூலோபாயம் [படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இராணுவத்திற்குப் பூரண சுதந்திரத்தினையும் அதிகாரத்தினையும் வழங்குவது, பயங்கரவாதிகளுடன் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்ற நிலை மற்றும் குறித்த அமைப்புத் தங்களை மீள ஒழுங்கமைக்க இடமளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்குச் செல்ல மறுத்தல்].

இரண்டாவது, ஆயுதம் தரித்த போர் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டினைப் புறம்தள்ளி அனைவர் மீதும் இலக்கு வைத்தல் [அண்மையில் வெளிவந்த அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினது அறிக்கை இதற்கான போதிய உதாரணங்களைக் கொண்டிருக்கிறது].

இறுதியாக, சர்வதேச மற்றும் ஊடகங்களின் கரிசனைகளுக்கு மதிப்பளிக்காது செயற்படுதல். 'ஊடகங்கள் அனைத்தும் எங்களின் கைகளில் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அமைதி முயற்சிக்கும் செல்லுமாறும் பேச்சுக்களில் ஈடுபடுமாறும் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை' என அதிபர் ராஜபக்சவினது செயலகத்தினைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்தியாவின் பாதுகாப்பு மீள்பார்வை Indian Defence Review என்ற சஞ்சிகையில் வெளிவந்த பத்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'கிளர்ச்சிசார் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜபக்சவினது முறை இராணுவச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது....பயங்கரவாதம் என்பது இராணுவ ரீதியிலேயே இல்லாது ஒழிக்கப்படலாமேயன்றி அரசியல் ரீதியில் அல்ல' எனக்கூறி பத்தியாளரான வி.கே சசிக்குமார் தனது பத்தியை நிறைவு செய்கிறார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கைக்கொள்ளும் மூலோபாயத்திற்கு நேரெதில் மாறான தன்மையினை இது கொண்டிருக்கிறது. இருப்பினும், உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிளை முடிவுக்குக் கொண்டுவந்த சிறிலங்காவினது முறை தொடர்பில் சர்வதேச ரீதியில் அனைவரும் அறிய முற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100522101163
read more...
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]SocialTwist Tell-a-Friend

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?

0 comments
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!



நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?!

இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும் சில/பல செயல்கள்தான் காரணம்னு புரியும்!

மூளை/மன ஆரோக்கியம் (Mental Well being)!

அதுல மிக முக்கியமானவை உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை அப்படீங்கிற ரெண்டும்தான்னு இதுவரையிலான, ஆயுட்காலம் குறித்த ஆய்வுகளும், அறிவியல் வரலாறும் வலியுறுத்தி வந்தன. ஆனா, நீண்ட ஆயுளுக்கு காரணமாக மூனாவதா ஒரு விஷயமும் இருக்குன்னு சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கின்றன. அது என்னன்னா, உடல் ஆரோக்கியமல்லாத, ஒவ்வொருவருடைய மூளை/மன ஆரோக்கியமான “Mental Well being” அப்படீங்கிறதுதான்!

மூளை/மன ஆரோக்கியம் பத்தின ஆய்வையும், அதன் செய்திகளையும் வெகு விரைவில், நாம ஒரு தனிப்பதிவுல பார்ப்போம். அப்போ, இந்தப் பதிவுல என்னத்த பார்க்கப் போறோம்?

உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய , அதை நேரடியாக பாதிக்கக் கூடிய “உறக்கம்” பத்தியும், உறக்கமின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள்(விளைவுகள்), மூளைபாதிப்பு, இவையனைத்தும் ஒரு சேர எப்படி நம் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடுகின்றன அப்படீங்கிறதப் பத்தியும்தான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப்போறோம்!

நம் ஆயுட்காலமும் உயிரியல் கடிகாரமும்!

சமீபத்துல, Aging அப்படீங்கிற மருத்துவ மாத இதழ்ல வெளியான, அமெரிக்காவின் ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ட்ரோசோஃபிலா அப்படீங்கிற பழபூச்சியில மேற்கொள்ளப்பட்ட ஆய்வுல, (நம்) அன்றாட விழிப்பு-உறக்க (Circadian rhythms) நேர அளவுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மரபனு, ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்தையும் (விரைவில் இறந்து போகும் அளவுக்கு) வெகுவா பாதிக்கிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

உயிரியல் கடிகாரம்/ உடலியக்க சுழற்ச்சி!



ஒரு உயிரினத்தின் உடலில், ஒவ்வொரு 24 மணி நேரமும் நிகழும், பல்வேறு விதமான உடலியக்க செயல்பாடுகளின் சுழற்ச்சியை உடலியக்க சுழற்ச்சி (Circadian rhythm) அல்லது உயிரியல் கடிகாரம் (Biological clock) என்றும் சொல்வதுண்டு! (பார்க்க படம்)

"மனித உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி" (படம்: Wikipedia)

மேலே இருக்குற படத்துல குறிப்பிட்டிருக்கிற விஷயங்களை (ஆங்கிலம்) பார்த்தோமுன்னா, அடிப்படையில உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி அப்படீங்கிறது என்னன்னு புரியும். சுருக்கமா சொல்லனும்னா, ஒரு நாளில் சூரிய ஒளியின் பாதிப்பினால், மனித உடலின் பல்வேறு பகுதியின் செயல்கள்/இயக்கங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன (நல்லவிதமாகவும்/தீயவிதமாகவும்) என்பதை காட்டும் ஒரு கடிகாரம்தான் இந்த உயிரியல் கடிகாரம்!

உதாரணத்துக்கு, ஒரு நாளில் நாம எப்போ தூங்குகிறோம்/எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து , நம் உடலின் பல்வேறு இயல்பான இயக்கங்களான, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், பல்வேறு என்சைம்/ஹார்மோன் சுரத்தல், கழிவுகளை வெளியேற்றும் தசைகளின் செயல்பாடு (சிறுநீரகம்), மூளை செயல்பாடு போன்றவை மாறுபடும். அதனால, நம்ம உயிரியல் கடிகாரத்தை நல்லபடியா வச்சிக்கலைன்னா, நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு!

உயிரியல் கடிகாரத்துக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய தெளிவான இந்த காணொளியையும் பாருங்க……

சரி இதுவரைக்கும் நாம, உயிரியல் கடிகாரம்னா என்ன, அது சரியாக பராமறிக்கப்படலைன்னா என்னவாகும் அப்படீங்கிறதையெல்லாம் பார்த்தோம். இனி (உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய) பதிவுச் செய்தியை விரிவா பார்ப்போம்.

அனுவிலிருந்து மரபனுவரை……

கடந்த 1950-ஆம் ஆண்டுவரை, உயிரியல் ஆய்வுகள் எல்லாம் “அனுக்கள்” அளவில் மட்டும்தான் சாத்தியப்பட்டது என்பது உயிரியல் துறை வரலாறு. அந்தத் தடையை தகர்த்தெறிந்து, “அனுவைப் பிளந்து” அதனுள்ளிருக்கும் “மரபனு” என்னும் மகத்துவத்தை டி.என்.ஏக்களாக அடையாளம் காட்டிய பெருமை, மூலக்கூறு அறிவியல் விஞ்ஞானிகள் திரு.ஜேம்ஸ் வாட்சன் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் க்ரிக் என்னும் இருவரையே சாரும்!

1950-களில் தொடங்கிய மரபனு ஆய்வுகள், படிப்படியாக வளர்ந்து பின் 1980-களிலிருந்து ஒரு அசுர வளர்ச்சியைக் கண்டு , இன்று மனிதன் தன் மரபனு அட்டையைப் பயன்படுத்தி, தன் மூலக்கூறுகளின் முழுமையான விவரங்களை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு அதிசயத்தக்க நிலையை அடைந்துள்ளது ஒரு உலக அதிசயமே என்றால் அது மிகையல்ல!

“கால” மரபனுவும் நம் ஆயுட்காலமும்!

இப்போ நமக்கு தெரியவேண்டியதெல்லாம், “கால” மரபனுன்னா என்ன, அதுக்கும் நம்ம ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? உயிரினங்கள் ஏன் மூப்படைகின்றன அப்படீங்கிற ஒரு அடிப்படைக் கேள்வியோட பழப்பூச்சியில தன் ஆய்வைத் தொடங்கின திரு. நட்ராஜ் கிருஷ்ணன், ஒரே வகையான உளைச்சல்/பாதிப்புகளை, இளமையானவர்கள் மிகுந்த சிரமமின்றி சமாளித்து விட, முதியவர்கள் சமாளிக்க முடியாமல் தங்கள் ஆயுட்காலத்தை குறைத்துக்கொள்கிறார்கள் அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார்!

பழப்பூச்சிகளில் (Drosophila) மேற்கொண்ட இந்த ஆய்வில், “கால மரபனு (Period gene)” என்ற, உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு மரபனுதான், ஒரு உயிரினத்தின், உளைச்சலை சமாளிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலத்துக்கு அடிப்படைக் காரணியாக உள்ளது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார் ஆய்வாளர் கிருஷ்ணன்!

இந்த கால மரபனுவானது, பரிணாமத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு உயிரினங்களிலும், மனிதனின் ஒவ்வொரு அனுவிலும் செயல்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மரபனுகளில் ஒன்றான கால மரபனுவின் செயல்பாடானது,

* போதிய உறக்கமின்மை
* வேறுபட்ட பணிக்காலம் (Day or night shift work)
* ஜெட் லாக் என சொல்லப்படும் உலக நேர மாற்றம்

போன்ற ஏதேனும் ஒரு செயலினால் பாதிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாம, திரிந்த/சேதமடைந்த கால மரபனுவினால், நடுவயது/வயதான உயிரினங்களின் ஆயுட்காலமானது 12 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துபோகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது! மொத்தத்தில், வயதாக வயதாக கால மரபனுவில் செயல்பாடு வெகுவாக குறைந்து, உயிரினங்களின் உளைச்சலை சமாளிக்கும் திறன் குறைந்து, நரம்புகள் சேதமடைந்து, அதன் விளைவாக ஆயுட்காலமும் வெகுவாக குறைந்துபோகிறது என்கிறது கிருஷ்ணன் அவர்களின் ஆய்வறிக்கை! என்ன கொடுமை சரவணன் இது?!

இந்தச் செய்தியின் ஆய்வறிக்கையை விரிவாகப் படிக்க இங்கு செல்லுங்கள்




Thanyou: http://padmahari.wordpress.com/2010/04/14/%
read more...
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?SocialTwist Tell-a-Friend