மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை

0 comments
தஞ்சை வந்த மத்திய மந்திரி முனியப்பாவிடம் காமராஜர் தேசிய பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு புதிய விரைவு ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக விழுப்புரம் வரை உள்ள ரெயில் பாதையை மின்சாரமயமாக்க வேண்டும்.
 
திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து அரியலூர், தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பதிய ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
 
தஞ்சை ரெயில்வே நிலையத்தில் மூன்றாவது கவுண்டரை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
thanks to http://www.maalaimalar.com/2011/07/31132136/new-train-service-chennai-to-t.html
read more...
மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் பலி

0 comments
சிவகாசி, ஆக.6 (டிஎன்எஸ்) சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று (ஆக.5) ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸப்ர் வழக்குப் பதிவு செய்து ஆலையின் ஃபோர்மேன் செந்தில்குமாரைக் கைது செய்தனர்.

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் சுமார் 200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பிற்பகல் 2.30 மணி அளவில் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது மருந்துக் கலவை செய்யும் அறையின் வெளிப் பகுதியில் சிதறிக் கிடந்த மருந்தைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாகவும், அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது, ஓர் இடத்தில் சிறிய அளவில் தீப்பற்றியதாம். இதைப் பார்த்த 5 பெண் தொழிலாளர்கள் ஓர் அறையின் அருகே ஒதுங்கினார்களாம். அவர்கள் இருந்த இடத்துக்கும் தீ பரவியதால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி, 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் அப் பகுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

புதுக்கோட்டை சின்னாத் தேவர் மனைவி அங்கம்மாள் (50), அதே ஊரைச் சேர்ந்த முத்தையா மனைவி சண்முகத்தாய் (48), காடனேரி ஆவுடைத்தாய்(53), பிகாரைச் சேர்ந்த மம்தா (26), காடனேரி வீரம்மாள் (50), அம்மாபொண்ணு (40), வீரம்மாள் (50) ஆகியோர் உயிரிழந்தனர்.

 பலத்த காயமடைந்த முருகன் (45), உஷ்மா (20), முனியாண்டி (45), பத்மாவதி (50), பாண்டி (53) ஆகியோர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த அனைவரும் சிவகாசி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். சிவகாசி தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்தைத் தகவல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நஜ்மல் ஹோடா ஆகியோர் பார்வையிட்டனர். (டிஎன்எஸ்)http://aaraamthinai.com/news/newsitem.aspx?NEWSID=ca9ee0da-9d7f-4600-a9be-4657ce1abd33&CATEGORYNAME=TTN
read more...
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் பலிSocialTwist Tell-a-Friend

விவேக் சொல்லும் பசுமை கணக்கு -- Vivek Is the Green Maker

0 comments
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.

இதுவரை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்கும்
read more...
விவேக் சொல்லும் பசுமை கணக்கு -- Vivek Is the Green MakerSocialTwist Tell-a-Friend

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

0 comments
சென்னை, ஜூலை 30: அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பகுதிகளைத் திருத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சனிக்கிழமை அவர் கடிதம் எழுதியுள்ளார்.அணை பாதுகாப்பு மசோதா 2010-ன்படி குறிப்பிட்ட அணையானது அது அமைந்துள்ள மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்புக்குள் வரும் என துணைப் பிரிவு 26(1) கூறுகிறது. இந்த அம்சம் அப்படியே சட்டமாக நிறைவேற்றப்பட்டால், தமிழக பராமரிப்பில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளின் பாதுகாப்பு கேரள மாநில அரசிடம் போய்விடும் என்றும், அது தமிழக நலனுக்கு எதிராக அமையக்கூடும் என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த அம்சத்தைத் திருத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.முதல்வரின் கடித விவரம்:அணை பாதுகாப்பு மசோதா 2010 இப்போது நீர்வளத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் சில அம்சங்கள் தமிழக நலனுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.அணைகளின் ஆய்வு, அணையின் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் தகவல்கள் பகுப்பாய்வு, அணையின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்த விஷயங்கள், அந்த அணை அமைந்துள்ள மாநிலத்தின் அணை பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என மசோதாவின் துணைப் பிரிவு 26 (1) கூறுகிறது.அணை யாருக்கு சொந்தம் என குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் மேற்படி அமைப்புடன் இந்த விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் "அணை அமைந்துள்ள மாநிலம்' என்ற வார்த்தைகள், அந்த அணை அமைந்துள்ள எல்லை இருக்கும் மாநிலம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.பக்கத்து மாநில அரசால் சொந்தம் கொண்டாடி, பராமரிக்கப்பட்டு வரும் அணைகளைப் பொறுத்தவரை இந்த துணைப் பிரிவு பாதிப்பு ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரள எல்லைக்குள் இருந்தாலும், அவற்றை தமிழகம்தான் சொந்தம் கொண்டாடி, பராமரித்து வருகிறது.மேற்படி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழக நலன்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும். மேற்படி அணைகள் தமிழகத்துக்குச் சொந்தமானவை என்றாலும், அவை கேரள மாநில எல்லைக்குள் அமைந்திருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படும். அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, செயல்பாடு ஆகிய அம்சங்களில் நடைமுறையில் பல பிரச்னைகள் ஏற்படும். மேற்சொன்ன சிக்கல்களால், இந்த மசோதாவில் சில திருத்தங்களை முன்மொழிய விரும்புகிறோம்.அணைக்கு சொந்தம் கொண்டாடும் மற்றும் பராமரித்து, பணிகளைச் செயல்படுத்தி வரும் மாநிலங்களுக்கு ஆய்வு செய்ய, பாதுகாப்பு குறித்த தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பகுப்பாய்வு, பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றும்பொறுப்பு உண்டு என துணைப் பிரிவு 26 (1) திருத்தப்பட வேண்டும்.இதற்கேற்ப மற்ற துணை விதிகளையும் திருத்த வேண்டும். அத்துடன் துணைப் பிரிவு 26 (6) புதிதாக சேர்க்கப்பட வேண்டும்.""வேறு எந்த சட்டத்தின் வரம்பும் இல்லாமல், அணையைப் பராமரிக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக வனம் மற்றும் வனவிலங்கு காப்பக பகுதிகளுக்குள் செல்லும் உரிமை பெற்றவர்களாகிறார்கள்'' என்ற விதியைச் சேர்க்க வேண்டும்.தமிழக நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக, மேற்படி மசோதாவில் இந்த திருத்தங்கள் அல்லது மாற்றங்களைச் செய்ய உரிய அமைச்சகத்தை தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
thanks to http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=454113&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu
read more...
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்புSocialTwist Tell-a-Friend

‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்பு

0 comments
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நடந்த போராட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தி.மு.க. நட‌‌த்‌திய போராட்ட‌த்‌தி‌ன்போது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள அரசு பள்ளியை மூடுமாறு கூறியதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் அரசு பேரு‌ந்‌தி‌ல் வீடு திரும்பினர். வழியில் அந்த பேரு‌ந்து விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் விஜய் என்ற 12 வயது மாணவன் பலி ஆனான். 19 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக, கொரடாச்சேரி பெருமாளகரம் மேலத்தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொரடாச்சே‌‌ரி காவ‌ல்துறை‌யி‌ல் அ‌ளி‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், கொரடாச்சேரி ஒன்றிய செயலர் ஆர்.பாலச்சந்தர், மகாராஜன், விமல்ஆதித்தன், சங்கர், சுப்பிரமணியன், பிரபாகரன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் காரில் சென்ற, பூண்டி கே.கலைவாணனை, ஆலத்தம்பாடி என்ற இடத்தில் வழிமறித்து காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். பின்னர், ஒன்றிய செயலாளர் ஆர்.பாலச்சந்தர் உள்ளிட்ட மற்ற 6 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்திய தண்டனை சட்டம் 143 (சட்ட விரோதமாக செயல்படுதல்), 188 (மறியல் செய்தல்), 268 (பாதுகாக்கப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைதல்), 506/2 (பள்ளிக்கு செல்லும் மாணவர்களை மிரட்டுதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்ட 7 பேரும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த‌ப்ப‌ட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
thnks to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/31/1110731005_1.htm
read more...
‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்புSocialTwist Tell-a-Friend

நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்

0 comments
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஜூலை 21ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. சுமார் 300 படங்களில் நடித்த சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்பினால் பெரும்புகழ் பெற்றவர்.
தமிழ் வசனங்களை திறம்பட உச்சரிப்பதிலிருந்து, மானுட உணர்ச்சிகளின் பல்வேறு வடிவங்களை தனது முகபாவத்தின் மூலமும், உடல் அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்துவதில் பெயர்பெற்றவராகக் கருதப்பட்ட அவர், தமிழ்த் திரையுலகில் இன்றும் பெரிதும் மதிக்கப்படுவதாக திரை விமர்சகர்கள் கருதுகின்றனர். 
thanks to http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110721_sivajideathanniversary.shtml
read more...
நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்SocialTwist Tell-a-Friend

அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலை

0 comments
சீர்காழி:சீர்காழி அருகே, குடிபோதையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர்.சீர்காழி அருகே, தாண்டவன்குளம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி,45. விவசாயக் கூலித் தொழிலாளி. நேற்று காலை வீட்டில் இருந்த போது, அவரது தம்பி குமார் குடிபோதையில் வந்தார். தண்டபாணி தட்டிக் ‌கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த குமார், தண்டபாணியை கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து குமாரை @தடி வருகின்றனர்.
thaks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=283084
read more...
அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலைSocialTwist Tell-a-Friend

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை

0 comments
சென்னை: கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு திருச்சி நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதி்த்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (20). அவர் பிளஸ் டூ படிக்கையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ராமஜெயம்(26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இது பற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவர் பிளஸ் டூ முடித்த கையோடு அவரை திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவில் உள்ள தாத்தா பிச்சை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். சரண்யா தாத்தா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சரண்யாவைப் பின்தொடர்ந்து ராமஜெயமும் திருச்சிக்கு சென்றார். ஆனால் ராமஜெயம் தனக்கு தொல்லை கொடுப்பதை விரும்பாத சரண்யா இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

சரண்யாவின் பெற்றோர் ராமஜெயத்தை சென்னைக்கு வரவழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திருச்சிக்கு வந்து கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி சரண்யாவுக்கு போன் செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு வந்தால் இதுவரை எழுதிய காதல் கடிதங்களை ஒப்படைப்பதாகவும், காதல் உறவை முறித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி சரண்யா தனது சித்தியுடன் ராமஜெயத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். கடிதங்களை பையில் இருந்து எடுப்பது போன்று நடித்து தான் வைத்திருந்த ஆசிடை எடுத்து சரண்யா முகத்தில் ஊற்றினார் ராமஜெயம். இதில் சரண்யாவின் முகத்தின் ஒரு பகுதி, தலை, காது, கழுத்து, முதுகு வெந்துவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். மாயாண்டி முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த அவர் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் ராமஜெயத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/27/youth-gets-10-year-jail-pouring-acid-college-girl-face-aid0128.html
read more...
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறைSocialTwist Tell-a-Friend

சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்

0 comments
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

கடந்த 15 வருடமாக இந்த வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ரூ. 65 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து விட்டதாக கூறி ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நான்கு பேரும் ஜூலை 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தனி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதிலிருந்து தனக்கு விதி விலக்கு அளிக்குமாறும், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகத் தயார் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று தனி கோர்ட்டில் சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜரானார்கள்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/27/sasikala-appears-before-bangalore-spl-court-aid0091.html
read more...
சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்SocialTwist Tell-a-Friend

இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!

0 comments
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
டெல்லி: நாட்டின் 70 சதவிகித மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசித்து வருவதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை தில்லியில் வெளியிட்டார். இதன் விவரங்களை இந்தியாவின் பதிவாளர் ஜெனரலும்,மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான சி. சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 83.3 கோடி மக்கள் கிராமங்களில்தான் வசிக்கின்றனர். 37.7 கோடி மக்கள் மட்டுமே நகரங்களில் வசித்து வருகின்றனர். நாடு விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக, கிராமங்களைவிட, நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகரமயமாக்கம் 27.81 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 31.16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களில் குழந்தைப் பிறப்பு 9 கோடியாக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் அதிகளவு மக்கள் வசிப்பது உத்தரப் பிரதேசத்தில்சான்.

மும்பையில் 5 கோடி பேர்...

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில்தான் 5 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

நகர்புறங்களை விட, எழுத்தறிவுப் பெற்றோர் எண்ணிக்கை கிராமங்களில் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக உள்ளது. அதுபோன்று, பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்களை விட நகரம் மற்றும் கிராமங்களில் அதிகரித்துள்ளது.

கிராமங்களில் ஆண்கள், பெண்கள் எழுத்தறிவுப் பெற்றவர்களின் இடைவெளி 2001 ஆம் ஆண்டு 24.6 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 19.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், நகரங்களில் இது 13.4 சதவிகித்திலிருந்து 9.8 சதவிகிதமாக குறைந்துள்ளது, என்றார் அவர்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/16/70-percent-indians-living-rural-are-in-rural-areas-aid0136.html
read more...
இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!SocialTwist Tell-a-Friend

நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

0 comments
சென்னை: இலவச ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தில், ஏழை மக்களுக்கு தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவை முதல்வர் ஜெயலலிதா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. பாராட்டுகிறது. அரசு வழங்கும் கறவை மாடுகளான பசுக்கள் நாட்டுப் பசுக்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது நாட்டுப் பசுக்களின் பால் தரமுடையதாகவும், அதன் கோமூத்திரம், சாணம் இயற்கை விவசாயத்திற்குப் பெரிதும் உதவிகரமாகவும் இருக்கிறது. எனவே தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவைத் தமிழக அரசு அளிக்கவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசு, இத்திட்டம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பயனாளிகளைக் கிராமப் பஞ்சாயத்து மூலம் தேர்ந்தெடுக்க இருப்பது நல்ல முன்மாதிரியாகும். இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திட அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை நியமிக்க வேண்டும்.

பசுவை வைத்துப் பராமரிக்க உத்தரவாதம் வாங்க வேண்டும். இல்லையேல் கசாப்பிற்கு விற்போரும், இடைத்தரகர்களும் இதன் பலனைக் கொள்ளையடித்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவர்.

பசு மேய்வதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் காலகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல்வாதி கள், செல்வாக்குமிக்கோர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தால் அதனை மீட்டு பசு மேய்வதற்குப் புல், தீவனம் வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிராமத்து நீர் நிலைகளைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண் டும். பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் “கோபர் கேஸ்” திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராம மக்களின் எரிபொருள் தேவை பூர்த்தியாவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, இயற்கை உரம் தரமாகக் கிடைக்க வழி கிடைக்கும்.

மாவட்டந்தோறும் இருக்கும் கால்நடை மருத்துவமனைகளைச் சீர்படுத்தி, மேம்படுத்துவதுடன், ஒவ்வொரு நகரத்திலும் கால்நடை மருத்துவமனை நிறுவ வேண்டும். வாரத்தில் ஒருநாள் கிராமந்தோறும் கால்நடை மருத்துவ முகாம் நடத்தி நோய்வாய்ப்படும் கால்நடைகள், பசுக்கள் நோய் தீர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/13/give-country-cows-free-cattle-program-ramagopalan-aid0090.html
read more...
நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்பு

0 comments
சென்னை: அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த சாதனையையும் அதிமுக அரசு செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி வந்த செய்தி தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு நடந்த பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார் தா.பாண்டியன்.அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்தது. கூட்டணியில் விரிசலா என்ற பேச்சும் கிளம்பியது.

இந்த நிலையில் தா.பாண்டியன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜுலை 6-ம் தேதியன்று மனித நேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் நான் பேசும் போது, தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு மந்திரிகளை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டிப் பேசியதாக, சில ஏடுகளில் வந்துள்ள செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தேடித் தந்தனர்.

20 கிலோ அரிசியை குடும்ப அட்டை உள்ளோர்க்கு இலவசமாக வழங்கிய மாண்பு, தனியார் கேபிள் இணைப்புகளை அகற்றி, அரசு கேபிள் இணைப்புக்கு நடவடிக்கை எடுத்திருப்பது, சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள், சொத்துக்களை மீட்டுக் கொடுக்க தனிக் காவல்துறை பிரிவை ஏற்படுத்தியிருப்பது, டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டின் சீர்கேடு, நிதிநெருக்கடிகளை விளக்கிக் கூறி, உணர்த்தியதன் மூலம் ரூ.23,500 கோடி அளவிற்கான பணத்தை திட்டச் செலவிற்காக பெற்று வந்துள்ள சாதனை ஆகியவற்றை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாராட்டி வாழ்த்தியுள்ளது.

எனவே குற்றம் சாட்ட வேண்டிய குறை ஏதும் கூறப்படவில்லை. மாறாக, மாநில அரசு மீது கடந்த கால ஆட்சி சுமத்தி விட்டுப் போயுள்ள அநியாய ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்சுமை, நிர்வாகச் சீர்கேடு, ஆகியவற்றை சமாளிப்பதில் நாமும் ஒத்துழைக்க வேண்டியிருக்கிறது. நமது கடமை தேர்தலோடு முடிந்து விடவில்லை என்றே விளக்கி பேசினேன். மக்களுக்கு தெளிவு படுத்த இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என்று பாண்டியன் கூறியுள்ளார்.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/07/12/i-never-criticized-admk-govt-says-tha-pandian-aid0091.html
read more...
ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்புSocialTwist Tell-a-Friend

அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?

1 comments


வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:43

ஆக்‌ஷன், மசாலா என்று தனது பழைய ஃபார்முலாவுக்குள் நுழைந்துவிட்டார் விக்ரம். அதற்கு காரணமும் இருக்கிறது. கண்ணுக்கு எதிரே தான் உயிரை கொடுத்து நடித்த’தெய்வதிருமகன்’ படத்தின் வியாபார சிக்கலை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறாரல்லவா? அதனால்தான் மேற்கண்ட அதிரடி முடிவு.

இருந்தாலும், ஆக்‌ஷன் மசாலாவுடன், மனதை அள்ளும் ஒரு பிளாஷ்பேக் பகுதி இருந்தால் அது தனக்கான டேஸ்ட்டையும் வெளிப்படுத்தும் என்ற எண்ணம் இருக்கிறது அவருக்குள். அதன்விளைவாக விக்ரம் ஒப்புக் கொண்ட கமர்ஷியல் தூக்கலான ’கரிகாலன்’ படத்தில்தான் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறதாம். இருபது முப்பது வருடங்களுக்கு முன்நடக்கிற கதை என்றால் பிளாஷ்பேக் எனலாம்.
இதுவோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு விக்ரம் எப்படியிருந்தார் என்பதை பற்றிய பின்னோட்ட கதை.

அதுதான் என்ன? வானுயர கோவில் கட்டியிருக்கும் ராஜராஜ சோழனின் பெருமையை இப்போதுள்ள அரசுகள் பாடுவதில் வியப்பில்லை. அப்படிப்பட்ட மன்னனின் சமாதி ஏன்  சாதாரண ஒருவனின் சமாதி போல அசிரத்தையோடு எழுப்பப்பட்டிருக்கிறது? அதையும் ஒரு கோவில் போல பிரமாண்டமாக எழுப்பியிருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லைஅப்போது வாழ்ந்த அரசும் மக்களும்? இப்படி எழுகிற கேள்விகளுக்கு விடைதான் இந்த பிளாஷ்பேக்.

மொத்தத்தில் இவர்கள் சொல்ல வருவது ராஜராஜன் நல்லவன் இல்லை என்பதுதான். இந்த பிளாஷ்பேக்கில் அவனை கெட்டவராக சித்தரிக்க உதவும் பாத்திரமாக நடிக்கிறாராம்விக்ரம்.

படம் வெளிவரும் போது யார் யாரெல்லாம் வேட்டியை மடித்துக் கொண்டு கோதாவில் இறங்கப் போகிறார்களோ?
thanks to http://www.tamilleader.in/cine/323-2011-06-24-08-40-01.html
read more...
அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?SocialTwist Tell-a-Friend

கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்

0 comments
மதுரை : மதுரை மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர், காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களை அடுத்து, கலெக்டர் சகாயம் அங்கு திடீர் விசிட் நடத்த முடிவெடுத்தார். நேற்று முன்தினம் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து குழுக்களையும் ஒரே நேரத்தில் விடுதிகளில் சோதனையிடும்படி உத்தரவிட்டார். இதையடுத்து செக்கானூரணி, உசிலம்பட்டி, நாட்டாமங்கலம், திருநகர், கருப்பாயூரணி உட்பட 24 விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல விடுதிகளில் அதிகளவு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மாணவர் வருகைப் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது, விடுதிகளில் வார்டன் தங்காதது, உணவு வழங்கியதற்கும், மாணவர் வருகைக்கும் சம்பந்தமே இல்லாதது என பல முறைகேடுகளை கண்டறிந்தனர். இதையடுத்து, விடுதி காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தும், 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=273816
read more...
கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்SocialTwist Tell-a-Friend

தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கை

0 comments
1. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உட்பிரிவு கள்ளர் இன குழுக்களை ஒன்றாக சேர்த்து ஒரே இனமாக அறிவித்து ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு, கல்வி, சலுகை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டுதல். [ஈநாட்டுக்கள்ளர்கள், கூத்தபார் கள்ளர்கள், பிறமலைக் கள்ளர்கள், தொண்டமான் கள்ளர்கள், கள்ளர் குல தொண்டைமான், அனைத்து செட்டில்மெண்ட் கள்ளர்கள்] அதாவது [சீர் மரபினர் சலுகை]


2. அனைத்து உட்பிரிவு கள்ளர்களும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு உட்பட்டவர்களே, அவர்களுக்கு ஒரே சலுகையான சீர்மரபினர் சலுகை வழங்க வேண்டுதல்.

3. இனவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து சலுகை வழங்க வேண்டுதல்.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கள்ளர் சங்கங்களுக்கு சொந்தமான பாராதீனம் செய்யப்பட்ட சொத்துக்களை அரசு கையகப்படுத்தி கள்ளர் இன நல வாரியம் அமைத்து தரவேண்டுகிறது.
5. தமிழக அரசு தேவரின அரசாணை எண்: 38/95ஐ ரத்து செய்ய ஆணைபிறப்பிக்க கேட்டுக் கொள்கிறது.
thansk to http://maraththamizhar.blogspot.com/2011/07/blog-post_11.html
read more...
தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)

0 comments
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும். விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள் என நடிகை ஹேமமாலினி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
ஸ்பெயினின் பம்ப்லோனா எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வருடாந்திர San Fermin வீர விளையாட்டு திருவிழா இது. உடனடியாக இதை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்பெயினின் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரிக்கும் கடிதம் ஒன்று எழுதலாமே!

ஐரோப்பாவின் கோடை திருவிழாக்களில் மிக பிரபலம் வாய்ந்ததாம் இந்த புல்ஸ் ரன்னிங் திருவிழா.



http://www.4tamilmedia.com/index.php/lifestyle/youtube-corner/5475-bull-run-at-san-fermin-festival-in-pamploma
read more...
ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)SocialTwist Tell-a-Friend

அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை

0 comments
ராக்கிங் கொடுமையால் பெரியார் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டனர்.


மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 5 பள்ளி மாணவர்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 5 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 5 பேரும் திருநகரில் உள்ள கள்ளர் அரசு விடுதியில் தங்கி படித்து வருவது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் மூத்த மாணவர்களின் கொடுமை தாங்காமல் விடுதியை விட்டு வெளியேறி விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து ரோந்து போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு திருநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். திருநகர் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு இருந்த வார்டனிடம் 5 மாணவர்களையும் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விடுதி வார்டனிடம் மாணவர்களை யாரும் ராக்கிங் செய்ய அனுமதிக்ககூடாது. அப்படி செய்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள். நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் இனி உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
thanks to http://tamilnadu.4tamilmedia.asia/index.php/chennai/1979-2011-07-08-16-27-47
read more...
அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமைSocialTwist Tell-a-Friend

'புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்' - இந்திய ஆய்வாளர்

0 comments
[ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 11:03 GMT ] [ தி.வண்ணமதி ] தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர் புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும்.

இவ்வாறு இந்திய ஊடகமான expressbuzz  இணையத்தளத்தில் Anuradha M Chenoy எழுதியு ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai;com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்ற கோரிக்கைப் பட்டியல் அடங்கிய அறிக்கையொன்றை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களளுக்கான பொறுப்புச்சொல்லும் நடைமுறையினைச் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்தப் போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு நாட்டின் வடபகுதியில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

இடைவிடாது தொடர்ந்த எறிகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களால் வட பகுதி வெறும் கற்குவியல்களாகியது. அடிப்படை மனிதாபிமான உதவிகள் கூட இந்த மக்களுக்கு மறுக்கப்பட்டது.

குறித்த இந்தக் கோரிக்கைகளைச் சிறிலங்கா அரசாங்கம் செவிமடுக்கத் தவறுமிடத்து சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத்தடை கொண்டுவரப்படவேண்டும் எனவும் ஜெயலலிதா இந்திய மத்திய அரசாங்கத்தினை வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை நடைமுறைப்படுத்தவேண்டுமெனில் சிறிலங்கா தொடர்பான தனது வெளியுறவுக்கொள்கையினை இந்தியா மாற்றியாகவேண்டும்.

இதுவிடயம் தொடர்பில் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடு மகிந்த அரசாங்கத்தினை நிச்சயம் உலுக்கியிருக்கும்.

எவ்வாறிருந்தும், பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை ஐ.நா. சபையால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்கூட, மகிந்த தனது இராணுவம் போரின் இறுதி நாட்களில் மேற்கொண்ட கொடூர நடவடிக்கைகளை மறுத்துவருகிறார்.

ஐ.நா. வெளியிட்ட அறிக்கைகளையும் தீர்மானத்தையும் அவர் எதிர்த்து வருகிறார். தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுப் பணிகள் திருப்திகரமாக அமையாதது மட்டுமன்றி அவர்களின் வீடுகளும் வாழ்வாதாரங்களும்கூட அவர்களிடம் மீளளிக்கப்படவில்லை.

போருக்குப் பின்னரான ஒழுங்கு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பிலான பேச்சுக்களுக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து ராஜபக்ச அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள தேசத்தை தனக்கு ஆதரவாக்கியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து இராணுவ கட்டுப்பாட்டையும் அதிகரித்த ராஜபக்ச: "இந்த நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இல்லை. போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா மக்களில் இரண்டு பிரிவினரே உள்ளனர். அதாவது தேசப்பற்றாளர்களும் துரோகிகளுமே அவர்கள்", என மே 2009ல் அறிவித்தார்.

சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சுதந்திரக் குரல்கள் மீதான அடக்குமுறையினால் மட்டும் சிறிலங்காவில் அமைதியைக் கொண்டுவர முடியாது. இது புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதுடன் சனநாயகத்தையும் பல்லினத்துவத்தையும் பாதிக்கிறது. இதனால் நீண்டகால பின்விளைவுகள் ஏற்படக்கூடும்.

ஜெயலலிதாவின் வார்த்தைகள் இந்தியாவின் வெளியுறவுக் கட்டமைப்புத் தொடர்பாக திருப்தியுற்றிருக்கும் ஜாம்பவான்களுக்கெல்லாம் குழப்பத்தைத் தரும்.

இந்தியா மற்றும் சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு International Crisis Group வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல, சிறிலங்காவில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நாடு இந்தியாவாகும். ஆனால் நிலையான அமைதியை நோக்கிச் செல்வதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஊக்கமளிப்பதில் அதன் கொள்கைகள் பலனளிக்கவில்லை.

ஏனெனில், இந்தியா கணிசமானளவு உதவியை வழங்கியபோதும், வடக்கு இராணுவமயப்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் என போதியளவு அழுத்தம் கொடுக்கவில்லை.

சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும், முழுமையாக புனர்வாழ்வளிக்கப்படவேண்டும், மறுக்கப்பட்ட சனநாயக, சுதந்திர உரிமைகள் மறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அவை மீண்டும் வழங்கப்படவேண்டும் என இந்தியா உரத்துக் கூறவில்லை.

மாறாக, இந்தியா பிராந்திய பூகோள அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டியதுடன் சிறிலங்கா ஆட்சியாளரிடமிருந்து அந்நியப்படுவதற்கு விரும்பவில்லை.

ராஜபக்ச அரசாங்கம் மீது அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு இந்தியா-சிறிலங்கா உறவில் கணிசமான விரிசலை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இரண்டாவது, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமையைப் பெறும் புதுடில்லியின் ஆசைக்குக் கொழும்பின் ஆதரவு அவசியமானது.

மூன்றாவது, இந்தியாவின் தடையற்ற வணிகத்திற்கு சிறிலங்கா திறந்திருக்கவேண்டும் என அது விரும்புகிறது.

நான்காவது, கடந்த காலங்களில் சிறிலங்காவில் இந்தியாவின் தலையீடு தந்த கசப்பான பாடங்களினால் மீண்டும் தேசிய ரீதியில் எதிர்ப்புத் தோன்றுமோ என அஞ்சுகிறது.

சிறிலங்கா போன்ற அயல்நாட்டுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் நலன்கள் தொடர்பான இத்தகைய தேவையற்ற அச்சத்தினை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டுமா?

தற்போதைய ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்கு எல்லாவற்றையும் இந்தியா செய்தாலும் ஏன் சிறிலங்கா சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தாமல் விடவேண்டும்?

பூகோள அரசியல் நலன்களுக்காக சிறுபான்மையினரின் உரிமைகள் போன்ற இந்தியா கடைப்பிடிக்கும் கருதுகோள்களையும் விழுமியங்களையும் கைவிடவேண்டுமா?

இராணுவமயப்படுத்தப்பட்ட, சர்வாதிகார ஆட்சி முறைமைகொண்ட சிறிலங்காவா அல்லது உறுதிப்பாடுடைய சனநாயக முறைமைகொண்ட சிறிலங்காவா இந்தியாவுக்கு நல்லது?

மேலும், இந்தியாவின் தமிழ் மக்களே கவலையுடனும் சிறிலங்காவில் தமிழ் மக்களின் நிலமை தொடர்பாக பொறுமையிழந்தும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக, இந்தியாவின் கணிப்பீடுகளில் இவை யதார்த்தமாக இடம்பெறவேண்டும்.

ஜெயலலிதாவின் வெற்றி மற்றும் அறிக்கைகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சிறுபான்மை சமூகம் தொடர்பான இந்தியாவின் கொள்கை செயற்படுநிலைக்கு மாறியுள்ளமை ஒரு சாதகமான விடயமே.

வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலொசகர் சிவ் சங்கர் மேனன் ஆகியோர் அவசர அவசரமாக யூனில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பொருத்தமான தருணத்தில் பயணத்தை மேற்கொண்டதுடன் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு, உண்மையான நல்லிணக்க முயற்சி, வேகமான நேர்மையான முறையில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துதல், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை மற்றும் இயல்புநிலையைத் தோற்றுவித்தல் ஆகியனபற்றி விவாதித்துள்ளனர்.

ஆனால் இந்திய வெளியுறவுச் செயலரின் அழுத்தங்களுக்குப் பின்னரும் கொழும்பு மனம்மாறுவதுபோல தெரியவில்லை. ஒரு பயணம் மற்றும் சில அறிக்கைகளைவிட மேலும் சில விடயங்களை இந்தியா செய்யவேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் சனவரி 2011ல் ஆரம்பித்த பேச்சுக்களுக்கான அதன் ஆதரவு திட்டமிட்ட நேர அட்டவணைக்குள் நடாத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டியுள்ளது.

இந்தப் பேச்சுக்களில் முக்கிய விடயமாக அதிகாரப்பகிர்வு மற்றும் இராணுவமயப்படுத்துதலை இல்லாது செய்தல் ஆகியன அமையவேண்டும்.

இந்தியா தனது உதவிகளையும் புனர்வாழ்வுத் திட்டங்களையும் கண்காணிப்பதுடன் வெளிப்படையான கண்காணிப்புப் பொறிமுறையொன்று இந்தத் திட்டங்களுக்கு ஏற்படுத்தப்படவேண்டும்.

உதவி எங்கு தேவையோ அங்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தனது உதவிகள் வடக்குக் கிழக்கு உள்ளூர் அரசாங்கத்தினூடாக தனது உதவிகள் வழங்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தவேண்டும்.

இந்தியாவின் மாநிலங்கள் அதாவது தமிழ்நாட்டுடன் தான் தொடர்புகளை வைத்திருக்கமாட்டேன். மாறாக இந்தியாவுடன் மட்டுமே தனது உறவுகள் என்பதே ராஜபக்ச அரசாங்கத்தின் பதிலாக இருந்தது.

ஆனால் சிறிலங்காவைப் போலன்றி மாநிலங்களால் ஆனதே இந்தியா என்பதை ராஜபக்ச விளங்கிக்கொள்ளவேண்டும்.

எவ்வளவு குறைபாடுகள் இருந்தபோதும் இந்தியாவின் சமஸ்டி முறைமை அதேபோல இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் பல்லினத்துவம் ஆகியனவே இந்திய சனநாயகத்தின் முதுகெலும்பாகும்.

எனவே, தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர் புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும்.

அத்துடன் மிகப் பெரிய வெற்றிக்குப் பின்னர் இதனை முன்னெடுப்பதைவிட இதனை முன்னெடுப்பதற்குச் சிறந்த நேரம் வேறெதுவாக இருக்க முடியும்?

சிறிலங்காவின் கவலைகளை அது நீக்குவதுடன் நாட்டினது அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த மக்களுடனான இடைத்தொடர்பைப் புதுப்பித்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பையும் வழங்கவேண்டும்.

"போரில், தீர்வு: தோல்வியில் எதிர்ப்பு: வெற்றியில் எதிரிமீது கருணை",என வின்சன்சேர்ச்சில் ஒரு தடவை கூறியிருந்தார். வரலாற்றில் நன்றாக உணரப்பட்டிருப்பதால், அவ்வாறான அறிவுரைகளைப் பின்பற்றுவது பயனுடையதாகும்.

சிறுபான்மையினரது உரிமைகளை வழங்குவதால் தான் சார்ந்த பெரும்பான்மைச் சமூகம் அச்சம்கொள்ளும் எந்தத் தேவையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அதிபர் ராஜபக்ச செயலாற்றுவரானால் அது அவர் சிறிலங்காவின் தேசியவாதப் போக்குக்காக மேலும் செயலாற்றுவதாகவே இருக்கும்.

நாட்டினது கொள்கைகள் மற்றும் அரச நிறுவனங்களையும் உள்வாங்கப்படுவதோடு அவை இந்த உண்மையினை விளங்கிக்கொண்டு செயலாற்றுமிடத்து வேகமான முன்னேற்றத்தினைக் காணமுடியும்.

தேரிய ரீதியிலான முட்டி மோதும் முனைப்புக்களிலும் சிறிலங்காவினது எதிர்க்கட்சியினர் ஈடுபடலாகாது. இதுபோன்ற சண்டைகள் சிறிலங்காவிற்கு ஏலவே பல துயரங்களைப் பெற்றுத்தந்துவிட்டது.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவினது கொள்கையாக, தென்னாசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல அனைத்துலக ரீதியில் இந்தியாவின் சட்டபூர்வ தன்மையினை மீள்நினைவுபடுத்தியமைக்காக புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்.

அதாவது, இந்தியாவினது சட்டபூர்வதன்மை பூகோள அரசியல் தந்திரோபாயங்களின்பால் அமைந்ததாக மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரும் சக்திகள் வெளிப்படுத்தும் மதிப்புகள் மற்றும் விதிமுறைகளின்பால் அமையவேண்டும்.

*Anuradha M Chenoy is director, Centre for Russian and Central Asian Studies, Jawaharlal Nehru University

thanks to http://www.puthinappalakai.com/view.php?20110708104235
read more...
'புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்' - இந்திய ஆய்வாளர்SocialTwist Tell-a-Friend

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி

0 comments
:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.

கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.

பத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், "பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270024
read more...
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சிSocialTwist Tell-a-Friend

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்

0 comments
 
 சியம் ரீப், ஜூலை 3: கம்போடியா நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பழங்காலக் கோவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.  11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக 1960-ம் ஆண்டு மூடப்பட்டது. பிரமிடு வடிவத்தில் அங்கூர் கோவில் என்றழைக்கப்படும் அக்கோவில் பிரான்ஸ் நாட்டு தொல்லியலாளர்களின் உதவியுடன் சுமார் 14 மில்லியன் டாலர் செலவில் புனரமைக்கப்பட்டது.  இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் மீண்டும் திறக்கப்படுவதையொட்டி கம்போடியாவில் அந்நாட்டு மன்னர் நரஉத்தமசிகாமணி மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் பிரான்கோசிஸ் ஃபில்லோன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரான்ஸ் பிரதமர், அங்கூர் கோவிலின் புனரமைப்பு தனித்துவம் வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது என்றார். கம்போடிய மன்னர் தனது நாட்டு மக்கள் சார்பாக பிரான்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.  1960-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அங்கூர் கோவில் புனரமைப்புப் பணிகள் 1970-ம் ஆண்டு கம்போடிய நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக தடைபட்டன. அப்போது புனரமைப்புப் பணிகளுக்குத் தேவையான ஆவணங்கள் அந்நாட்டு கம்யூனிஸ்ட்களால் அழிக்கப்பட்டன. பிறகு 1995-ம் ஆண்டு புனரமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
thanks to http://dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=441018&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=50%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
 
 
 
 
 
 
 
 
 
 
Solved puzzle reveals fabled Cambodian temple
SIEM REAP, Cambodia — It has taken half a century, but archaeologists in Cambodia have finally completed the renovation of an ancient Angkor temple described as the world's largest three dimensional puzzle.
The restoration of the 11th-century Baphuon ruin is the result of decades of painstaking work, hampered by tropical rains and civil war, to take apart hundreds of thousands of sandstone blocks and piece them back together again.
"When I first saw how devastated the monument was, I never thought we would be able to put it back together," said Cambodian restorer Ieng Te, who joined the project as a young student in 1960 and was tasked with numbering stones.
"I am so happy and excited that we were able to rebuild our historic temple," the now 66-year-old said as he oversaw the final construction activities at the site.
On a recent rainy morning workers were adding a final layer of paint to newly-installed wooden staircases at Baphuon, one of the country's biggest temples after Angkor Wat, the largest structure in the famed Angkor complex.
It is one of the last jobs to be done before the temple reopens to the public next week, finally revealing itself in full glory after spending decades in pieces.
Cambodian King Sihamoni and French Prime Minister Francois Fillon will be among the first to tour the impressive three-tier temple during an inauguration ceremony on July 3.
The story of the 10-million-euro ($14m) renovation began in the 1960s when a French-led team of archaeologists dismantled the pyramidal building because it was falling apart, largely due to its heavy, sand-filled core that was putting pressure on the thin walls.
The workers numbered some 300,000 of the sandstone blocks and laid them out in the surrounding jungle.
But efforts to rebuild the crumbling towers and lavishly ornamented facades abruptly came to a halt when Cambodia was convulsed by civil war in 1970.
The records to reassemble Baphuon, including the numbering system, were then destroyed by the hardline communist Khmer Rouge which took power in 1975.
In 1995, when the area in northwestern Cambodia was again safe to work in, the French government-funded project was restarted under the leadership of architect Pascal Royere from the Ecole francaise d'Extreme-Orient (EFEO).
"It has been said, probably rightly so, that it is the largest-ever 3D puzzle," Royere told AFP.
The team carefully measured and weighed each block and then relied on archive photos stored in Paris, drawings and the recollections of Cambodian workers to figure out where each part fits.
"We were facing a three-dimensional puzzle, a 300,000-piece puzzle to which we had lost the picture. And that was the main difficulty of this project," Royere said.
"There is no mortar that fills the cracks which means that each stone has its own place. You will not find two blocks that have the same dimensions."
The restoration of Baphuon, one of Angkor's oldest ruins, was completed in April and Royere said it was a moment of joy for the 250-strong, mainly Cambodian, team.
Finishing the "unique" undertaking was "a collective satisfaction because it was a complicated project," he said.
Built around 1060 by King Udayadityavarman II in honour of the Hindu god Shiva, Baphuon was the country's largest religious building at the time, 35 metres high (114 feet) and measuring 130 by 104 metres (426 x 340 feet).
In the 16th century, a 70-metre long reclining Buddha statue was built into a wall on the second level using stones from the top of the temple.
These two phases of construction, hundreds of years apart, further complicated the restoration, said Royere, and working during the rainy season proved another major challenge.
But those struggles are behind him now and as the Frenchman watched camera-toting tourists amble along the long elevated walkway that leads to the temple, he said he was confident the site would become a top attraction.
Located at the heart of the Angkor park, it "certainly promises to be a great success," he said.
Gazing up at Baphuon, first-time visitor to Cambodia Gayle Sienicki from Washington DC marvelled at the temple's long journey to recovery.
"It's just amazing, I mean truly amazing, that they could take these bits of stones and figure out how to put them all back together," she said. "I'm in awe. I think this is just the coolest thing."
thanks to http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jrbPvOVvNyeV0xjohqzBmQhNSYrA?docId=CNG.4c50d4e5f6d29eb93f5d23744d330c7f.3c1
read more...
50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்SocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!

0 comments
டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டிய காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாடுகள் முட்டி கடந்த 20 ஆண்டுகளில் 200 பேருக்கும் மேல் உயிர் இழந்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டின் போது இருவர் இறந்தனர். மேலும் 215 பேர் காயம் அடைந்தனர்.

மிருகவதை சட்டத்துக்கு எதிரானது...

இந்த விளையாட்டு, மிருகவதை சட்டத்துக்கு எதிரானது. மாடுகள் பாய்ந்து வரும் போது அதை பிடிக்கும் ஆர்வத்தில், வாலை பிடித்து இழுத்தல், கொம்பை பிடித்து அமுக்குதல் போன்றவை தவிர காளையை பல்வேறு முறைகளில் சித்ரவதைப்படுத்துகிறார்கள்.

இதனால் காளைகளுக்கு வலி மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, மனித உயிர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

சட்டப்படி குற்றம்

இந்த விளையாட்டில் பங்கு பெற காளைகளை, வாகனங்களில் அடைத்து, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது காளைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பது இல்லை. வாகன பயணத்தின்போது காளைகள் நெருக்கமாக அடைக்கப்படுவதால், அவற்றால் நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது மிருக வதை சட்டப்படி குற்றம்," என்று கூறியுள்ளார்
thansks to http://thatstamil.oneindia.in/news/2011/07/02/hema-malini-urges-ban-on-sport-jallikattu-aid0136.html
read more...
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!SocialTwist Tell-a-Friend

மின்னஞ்சலின் அடுத்த புரட்சி

0 comments


[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 04:33.29 மு.ப GMT ]
மின்னஞ்சலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது. அத‌ன் பெயர் ஷார்ட்மெயில்.டிவிட்டரும், பேஸ்புக்கும் மின்னஞ்சலுக்கான இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் மின்னஞ்சல் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிற‌து.
அதாவது பெயருக்கேற்ப இது மின்னஞ்சல் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது. ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீள‌மாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது. அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விடயத்தை சொல்லி விட வேண்டும்.
டிவிட்டரில் எப்படி அதிகப‌ட்சம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிற‌தோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத மின்னஞ்சல்களால் திணறிப்போகிறவர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதோடு மின்னஞ்சல் சுமை என்ப‌தும் இல்லாமல் போய்விடும்.
அது மட்டும் அல்ல மின்னஞ்சலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்ப‌டங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை. இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான்.
ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மின்னஞ்சல்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும். அதாவ‌து அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டு விடும். 500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.
மின்னஞ்சலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வ‌கிக்கவும் இது பேருதவியாக இருக்கும். எந்த மின்னஞ்சல் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம். தள்ளிப்போடுவதோ மின்னஞ்சல்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.
டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது. ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது ரகசியமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.
ரகசியமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும். பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். பதில் அனுப்பலாம். இப்படி மின்னஞ்சல் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.
பேஸ்புக் பயன்ப‌டுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் மின்னஞ்சலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிற‌து. ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்ப‌தால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.
ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது. டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்க‌ள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம். ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது. மின்னஞ்சலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.
இணையதள முகவரி
THANKS T O http://www.lankasritechnology.com/view.php?203dBnZndbc4cQCAA424ea0609F0e033TlOmOcddcdmOlTl220e9F906eae424yMQ64cbdbZnBdB02
read more...
மின்னஞ்சலின் அடுத்த புரட்சிSocialTwist Tell-a-Friend

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்

0 comments
 திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.  நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.  நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார். விவேக்
http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/actor-vivek-donates-10-lacks-tree-saplings-aid0091.html
read more...
தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்SocialTwist Tell-a-Friend

சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!

0 comments
சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதத்தில் உள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி வற்புறுத்தினார்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பாலாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் பெயரில் கேரக்டரை உருவாக்கி அவர் மது அருந்துவது போன்றும் நிர்வாணமாக ஓடவிட்டு அடிப்பது போலவும் காட்சிகள் வைத்திருப்பது அவதூறானது என்றும் ஜமீன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை பாலா கண்டுகொள்ளவே இல்லை.

இதையடுத்து அவன் இவன் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியின் தம்பி தாயப்பராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து சிங்கம் பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், "நான் ஆன்மீகத்தில் பற்று கொண்ட ஒரு துறவியாகி நீண்ட நாளாகிறது. எதைப் பற்றியும் கவலைப்படும் மனநிலையில் இல்லை. ஆனால் சிங்கம்பட்டி ஜமீனையும், காரையாறு கோவிலையும் களங்கப்படுத்தி இருப்பதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர். மதுரையில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்ல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவன் படத்திற்கு தடை விதிக்க கோரி எனது தம்பி தாயப்ப ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மகன் ராஜாவும் வழக்கு தொடர உள்ளார்," என்றார்.

தென் மாவட்ட மக்களின் குல தெய்வமான சொரிமுத்து அய்யனாரை களங்கப்படுத்திய நடிகர் ஆர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
thanks to http://thatstamil.oneindia.in/movies/news/2011/06/22-case-filed-ban-avan-ivan-movie-aid0136.html
read more...
சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!SocialTwist Tell-a-Friend

மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டி

0 comments
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:29
எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார்.

இனி அவரிடம் பேசியதிலிருந்து...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...?

‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின் கடன்களை அடைக்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இலவசமாகவே ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார்.

67 தேர்தலுக்குப் பிறகு தனது எம்.பி. பதவியை விட்டு அண்ணா விலகியதும், அந்த இடத்திற்கு மாறனை நியமிக்கும்படி கருணாநிதி நிர்ப்பந்தித்தார். அதன் காரணமாக அண்ணா மாறனுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.1990-ம் ஆண்டுவரைக்கும் மாறன் வெறும் எம்.பி.தான்.வி.பி.சிங் பதவியேற்ற போதுதான் மத்திய அமைச்சரானார்.அதன் பின்னர்தான் அவருடைய சொத்துக்கள் உயர ஆரம்பித்தது.ஸ்பெக்ட்ரம் ஊழலை தயாநிதிதான் வெளியே கொண்டு வந்தார். அவரே அதில் சிக்கிக் கொண்டார்.’’

அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுதானே டி.வி.யை ஆரம்பித்தார்கள்?

‘‘உண்மைதான். வி.பி.சிங் உதவியாலும், சில தொழிலதிபர்களின் உதவியாலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டில் சன் டி.வி.  ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜெயலலிதாதான் முதல்வராக இருந்தார்.அவர் நினைத்திருந்தால் டி.வி. தொடங்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும்.ஆனால்,அவர் அதைச் செய்யவில்லை.’’

தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்பியிருக்கும் சிவசங்கரன் ஆரம்ப காலங்களில் அவர்களுக்கு நெருக்கமாகத் தானே இருந்தார்?

‘‘90-களில் இருந்தே எனக்கு சிவசங்கரனைத் தெரியும். 91-ம் ஆண்டு அவர், ‘தான் ஒரு தொலைக்காட்சி தொடங்க இருப்பதாகவும், அதற்கு உதவ வேண்டும்’என்றும் கேட்டு என்னைச் சந்தித்தார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எதிரில் நூறு ஏக்கரில் தனக்கு இடம் இருப்பதாகவும், அங்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப் போவதாகவும் கூட தெரிவித்தார். இதற்கு அனுமதி கிடைக்க உதவி கேட்டார்.நான் அவரை அமைச்சர் செல்வகணபதியிடம் போகச் சொன்னேன்.

மறுநாளே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர் ராமசாமி உடையார் என்னைச் சந்தித்து, குறிப்பிட்ட நூறு ஏக்கர் இடம் தன்னுடையது என்றும், தன்னிடம் இருந்து முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன், முரசொலி மாறன் ஆகியோர் மிரட்டி பறித்து விட்டனர்’ எனவும் தெரிவித்தார்.

இந்த நிலத்திற்குப் பக்கத்தில் மாறனுக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. எனவே, நூறு ஏக்கர் நிலத்தையும் சேர்த்து வளைக்க வேண்டும் என்று மாறன் திட்டம் தீட்டினார். தன் பெயரில் வாங்கினால் பிரச்னை வரும் என்பதால் பினாமி பெயரில் நிலத்தை மிரட்டி வாங்கியிருக்கிறார்.இந்த இடத்திற்குதான் அனுமதி வாங்க சிவசங்கரன் என்னை அணுகியிருந்தார்.

அடுத்ததாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை சிவசங்கரன் வாங்கினார். இதற்கும் முழு உதவி செய்தது முரசொலி மாறன்தான்.இதனால் கோபமடைந்த நாடார் சமுதாய மக்கள், தி.மு.க.விற்கு எதிராக தெருவுக்கு வந்து போராடினார்கள். காமராஜர் பிறந்தநாளில் நடந்த பேரணியில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஸ்டாலின் மீது, பேரணியில் கலந்து கொண்டவர்கள் செருப்புகளை வீசினர். கோபமடைந்த கருணாநிதி, ரவுடிகளை வைத்து பேரணிக்குள் புகுந்து அடித்தார். அந்தப் பேரணி நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.’’

ஆனால், அந்த மக்களின் கோரிக்கைப்படி, மெர்க்கண்டைல் வங்கி மீண்டும் நாடார் சமுதாய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதே?

‘‘ஆமாம். வேறுவழியில்லாததால் மாறன் அறிவுறுத்தல்படி, சிவசங்கரன் 150 கோடி ரூபாய்க்கு வங்கியை விற்றுவிட்டார். நாடார் மக்களை திருப்திப்படுத்த சரத்குமாரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் கருணாநிதி. அதன்பின்தான் சிவசங்கரன் ஆர்.பி.ஜி., ஏர்செல் போன்ற நிறுவனங்களைத் தொடங்கினார்.’’

முரசொலி மாறனோடு நெருக்கமாக இருந்த சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராகத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன?

‘‘தேவேகவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய் என அடுத்தடுத்த பிரதமர்கள் காலத்தில் மாறன் தொடந்து மத்திய அமைச்சராகவே இருந்தார்.இந்த காலகட்டங்களில் தன் குடும்பத்தை மட்டுமே அவர் பெருமளவு விரிவுபடுத்தினார். அவர் குடும்பத்தில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் புதிதாக முளைத்தன.

2004-ம் ஆண்டு கிட்னி பாதிப்பால் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.மாறனின் தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சிவசங்கரனை கலாநிதிக்கும், தயாநிதிக்கும் பிடிக்காமல் போனது. தயாநிதி அமைச்சரானதும்,தன் ஏர்செல் நிறுவனத்தை விரிவுபடுத்த சிவசங்கரன் முடிவு செய்தார்.முறைப்படி இதற்காக விண்ணப்பங்களை அவர் அனுப்பிக் கொண்டே இருந்தார்.ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில்லை என்கிற முடிவோடு இருந்தார் தயாநிதி மாறன்.

இந்தப் போராட்டத்தில் சிவசங்கரனை தொழிலில் இருந்தே வெளியேற்ற நினைக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிம் என்கிற மலேஷிய நிறுவனத்துக்கு விற்கச் சொன்னார்கள். மிரட்டல் தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனத்தை விற்றார் சிவசங்கரன்.’’

மேக்ஸிம் நிறுவனத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் ஏர்செல்லை குறிப்பிட்ட நிறுவனத்திடம் விற்கச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?

‘‘ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய அனந்தகிருஷ்ணன் என் நண்பர்தான். இந்த வழக்கு தொடர்பாக அரசு விசாரணை கமிஷன் அமைத்த பிறகு, அனந்த கிருஷ்ணனையே அழைத்து வந்து உண்மையைப் பேச வைப்பேன். இதற்குப் பின்னணியில்ரி.ஞி. சகோதரர்களின் (கலாநிதி, தயாநிதி) பங்கு, எவ்வளவு பணம் பரிமாறப்பட்டது என எல்லா விவரங்களும் ஆதாரத்தோடு என்னிடம் இருக்கிறது.’’



இந்த காலகட்டங்களில் சிவசங்கரனை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

‘‘தயாநிதி மத்திய அமைச்சராக இருந்தபோது, 2005-ல் நான் டெல்லி சென்றிருந்தேன்.அங்கு ஹோட்டலில் சிவசங்கரனை தற்செயலாக சந்தித்தேன்.என் அறைக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. அது மாறனிடம் இருந்து வந்தது எனப் புரிந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பினார்.

தன் அப்பாவின் பணத்தை சிவசங்கரனிடம் இருந்து பறிக்கும் முயற்சியில்தான் அவருக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.சகோதரர்களின் நெருக்குதல் தாங்க முடியாமல் சிவசங்கரன் அமெரிக்கா போய்விட்டார்.அவர் மீதுள்ள கோபத்தை சிவசங்கரனின் ஸ்டெர்லிங் டவர்ஸ் நிறுவனத்தின் மீது காட்டியதில், ஊழியர்கள் ஆறுபேர் சிறைக்குப் போனார்கள்.’’

2ஜி வழக்கில் தயாநிதி மாறனுக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

‘‘இந்த அலைக்கற்றை ஊழலைத் தொடங்கி வைத்ததே தயாநிதிதான். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது,அவர் தலைகால் புரியாமல் ஆடினார். தமிழகத்தில் யாருக்கும் டி.வி.சேனல் தொடங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அவர்கள் நினைத்தால் ஒரு டி.வி.யை ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்கிற நிலைதான் இருந்தது.

2004-ம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோதே அலைக்கற்றை ஊழலில் அவர் பெருமளவு கொள்ளையடித்து விட்டார்.அந்தப் பணம்தான் 2009 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா ராஜினாமா செய்ததும், கபில்சிபல் அந்தத் துறை பொறுப்பை ஏற்கிறார். சிவராஜ்பட்டீல் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மூலம்தான் தயாநிதி மாறனின் வேடம் கலைகிறது. அலைக்கற்றை உரிமங்களை தன் விருப்பப்படி விற்பனை செய்யவும்,அதற்கான அதிகாரத்தை தான் ஒருவனே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு அவரது கனவைத் தகர்த்தது.

2 ஜி உரிமத்துக்காக பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாநிதிக்கு பெருமளவு முன்பணம் கொடுத்திருந்தன. அதை அவர்கள் புதிய அமைச்சர் ராசாவிடம் தெரிவித்தபோது, ‘தயாவிடம் கொடுத்ததை அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள். எனக்கு புதிதாக தரவேண்டும்’ என்று கூறுகிறார் ராசா. இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த தயாநிதி, தன்னிடம் இருந்த ஆவணங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட வைத்து, ராசாவை சிறைக்கு அனுப்பினார். இப்போது அந்த ஆவணங்களே தயாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.

அலைக்கற்றை வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் தயாவுக்கும் இடையே ஏராளமான தொழில் தொடர்புகள் உண்டு. அதில் ஒரு அம்சமாக சன் டி.வி.யின் பங்குகளை அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் வாங்கியது. இதனால் மார்க்கெட்டில் சன் டி.வி.யின் பங்குகளுக்கு விலை கூடியது.இந்த லாபத்தை தாங்களே அனுபவிக்க நினைத்த மாறன் சகோதரர்கள், அதற்கு முன்னரே சன் டி.வி.யில் கருணாநிதிக்கு இருந்த பங்குகளை பிரித்துக் கொடுத்தனர்.’’

2 ஜி ஊழலுக்கு முக்கிய காரணம் தயாநிதி மாறன் என்று கூறுகிறீர்கள். இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

‘‘தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு உதவியாளராக இருந்தவர்தான் ஆ.ராசாவுக்கும் உதவியாளராக இருந்தார். தயாநிதி மாறனின் பணம் நெதர்லாந்து நாட்டுக்குப் போய், அங்கிருந்து திரும்பி இந்தியாவுக்கு வந்த கதையெல்லாம் இப்போது மெல்ல மெல்ல வெளியே வருகிறது.

அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்புக்கு முழுக் காரணமும் தயாநிதி மாறன்தான்.அவர் அமைச்சரான பிறகு கலாநிதியுடன் சேர்ந்து தன் தொழிலை பெருமளவு விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 32 தொழில்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இவர்கள் வெளிநாடுகளிலும் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள்.

சுமங்கலி கேபிள் விஷன் மூலம் தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள். 2005-ல் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தபோது,தங்கள் தாத்தா மூலம் கவர்னரிடம் பேசவைத்து தீர்மானத்தையே முடக்கினார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பதால்,இந்த கேபிள் டி.வி. மசோதா தூசுதட்டப்படுகிறது. சன் டி.வி.யோ எம்.எஸ்.ஓ. என்ற தகுதிகளைக் கைப்பற்ற ரகசியமாக திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து பெரும் சூழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இதற்காக பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது.

எம்.எஸ்.ஓ.க்களைக் கைப்பற்ற சாக்ஸ் என்ற சக்ஸேனாவை களமிறக்கியுள்ளார்கள். இவரின் மோசடிகள் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்திய எந்த மோசடியை விசாரிக்கத் தொடங்கினாலும்,அதற்குள்ளிருந்து ஏராளமான மோசடிகள் வெளிவருகின்றன.கருணாநிதி குடும்பத்தினரின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவர்களின் அவலங்களை எல்லாம், மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் நாள் நெருங்கிவிட்டது’’ என்று மர்மமாக முடித்தார் நடராஜன்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்
THANKS TO http://savukku.net/pidithadu/965-2011-06-21-09-02-33.html
read more...
மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டிSocialTwist Tell-a-Friend

மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

0 comments
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

25 ஆண்டுகளாக திருட்டு

குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.

என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

யார் யார் சிக்குவார்கள் ?

புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

புரோக்கர்கள் ஓட்டம்

போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/06/14/tout-nurse-assistant-arrested-aid0090.html
read more...
மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!SocialTwist Tell-a-Friend

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments
புதன்கிழமை, 08 ஜூன் 2011 17:47
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன.


இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

 மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது.
 
இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.
 
இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது
THANSK TO http://savukku.net/home1/922-2011-06-08-12-17-57.html
read more...
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.SocialTwist Tell-a-Friend

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

0 comments
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.


ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்.
thanks http://www.yarl.com/forum3/index.php?showtopic=86729
read more...
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்து

0 comments
மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள்

தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவு போன்றது. அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராட்டி வாழ்த்துகின்றது.

கடந்த 13-05-2011 அன்று தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தாங்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும், அவர்களது அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தாங்கள் கூறியுள்ள கருத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உன்னிப்பாக அவதானித்துள்ளதுடன், அக்கருத்துக்களை யாம் வரவேற்கின்றோம்.

மேலும், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீதான இன அழிப்பு உச்சம் பெற்றிருந்த காலகட்டத்தில், அதனை மூடி மறைப்பதற்கு பல நாடுகளும், பல அரசியல் சக்திகளும் முயற்சி செய்து கொண்டிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்கள் நாதியற்றவர்களாக நின்றிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தமிழீழத் தமிழ் மக்களுக்கான ஆதரவுக் குரலாகவும், நீதியின் குரலாகவும் உங்கள் குரல் வெளிவந்திருந்தது.

"இலங்கையில் தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். நாம் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால் எப்படி இந்திரா காந்தி பாகிஸ்தானிடமிருந்து வங்காள தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தந்தாரோ அதைப் போலவே இலங்கையில் தனி ஈழம் அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்ரல்-மே 2009 இல் ஆரணி கோட்டை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து)

"இலங்கையில் இல்லாமல் ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் தனி ஈழம் அமைக்கட்டும்' என்று இலங்கை அரச உயரதிகாரி ஒருவர் கூறியது தொடர்பாக நீங்கள் பதிலளிக்கையில் "ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்களது அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன்'' அங்கே இப்பொழுது அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகின்றேன்.'' (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் திருப்பூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

"இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடிருக்கின்ற இலங்கைத் தமிழர்களை சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது! எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களில் கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் அடைத்து வைத்து எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் நாளடைவில் அவர்களையும் அழித்து விடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது. உண்மை நிலை இப்படி இருக்க இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஐனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்று பேசுவதெல்லாம் வீண்வேலை. அது வெறும் கண்துடைப்பு என்று தெரிகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை வழங்கும் எண்ணமே இலங்கை அரசுக்குக் கிடையாது. ஒரேயடியாக இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் ஒரே செயற்திட்டமாக உள்ளது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஐ வாழ்வு வாழவேண்டும். சிங்கள மக்களுக்குள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பதுதான். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தனி ஈழம்தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'' - (மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் ஏப்பிரல் - மே 2009 இல் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார ஊர்வலத்தில் ஆற்றிய உரையில் இருந்து)

- என்று நீங்கள் வெளியிட்ட கொள்கைப் பிரகடனம் யுத்தத்தினால் அழிந்து கொண்டிருந்த தமிழீழ மக்களுக்கு தாங்கள் காப்பாற்றப்படுவோம் என்ற பெரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


இலங்கையில் கடந்த மூன்று வருடங்களாக மட்டுமல்ல கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழீழ மக்களைப் பாதுகாப்பதற்கு, தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிப்பதே ஒரே வழியாகும்.

ஈழத் தமிழ் மக்களை இன அழிவில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாப்பதற்காக

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை அங்கீகரிக்கும் தீர்மானத்தினை

தமிழக சட்டசபையில் தாங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றோம்.

தாங்கள் சபதம் எடுத்தால் சாதித்துக் காட்டியே தீருவீர்கள் என்பது அனைத்துத் தமிழ் மக்களதும் உறுதியான நம்பிக்கையாகும். தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குத் தமிழக மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், தங்களுக்குள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனூடாக தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டும் வகையிலான தீர்மானத்தினை தமிழக சட்டசபையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்கும் புனிதமான பணியை மேற்கொள்வீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

தமிழீழ தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலம் தமிழீழ மக்களது நலன்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமல்ல, தமிழ் நாட்டினதும், இந்தியாவினதும் நலன்கள் பாதுகாக்கப்படுவதனையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்பது எமது உறுதியான நம்பிக்கை.

தமிழீழ மக்களை இன அழிப்பில் இருந்து நிரந்தரமாகப் பாதுகாக்க தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளுக்கும் பூரணமான ஆதரவினை வழங்கவும், இணைந்து செயற்படவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாராக உள்ளது என்பதனை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்காக உரிய தரப்புக்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அவ்வாறான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மூன்றாவது தடவையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ள தங்களுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு மதிப்பளித்து தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தவும், தங்களது வாக்குறுதிகளைக் காக்கவும் தாங்கள் உழைப்பீர்கள் எனவும் உறுதியாக நம்புகின்றோம். மீண்டும் ஒருதடவை தங்களை வாழத்தி விடைபெறுகின்றோம்.

நன்றி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (16-5-2011)

thanks to http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=10&fileName=Jun1-11&newsCount=5
read more...
ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்துSocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]
இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில், இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஐநாவை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு,
ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழர்களுக்கும் பல்வேறு பிணைப்புகள் உண்டு. இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற இலங்கை தொடக்கத்தில் இருந்தே அங்குள்ள ஈழத் தமிழர்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது. அவர்களுக்கான உரிமைகளை மறுத்ததோடு அவர்களை அழிக்கவும் செய்து வருகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி இருக்கின்ற இந்த சமயத்தில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டும்.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை அரசு நடத்திய சூதாட்டத்தில் தமிழர்கள் பலியாகி விட்டார்கள். இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இணைந்து நின்று குரல் கொடுத்து கொடுங்கோல் ஆட்சியை தனிமைப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

thanks to http://www.tamilwin.com/view.php?22a8299N320eDppGi04eecoQjj2ccbdZVLmucddd3cIBP4bbc4VjQQ6be44QGGp1d003eF922g02
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

0 comments
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும்
தீங்கிழைக்க மாட்டார்கள்!
பழ. நெடுமாறன் அறிக்கை
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
read more...
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கைSocialTwist Tell-a-Friend

ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்

0 comments


 சிதம்பரம்:

               மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது  மூவேந்தர் முன்னேற்றக்கழக .தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் பேசியது:-

            நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாம் கடுமையாக உழைத்தோம்.கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்டோம். எனக்காக கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்தனர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த தேர்தலில் நான் தோல்வி அடைந்ததால் தவறான பாதையில் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். நான் மட்டும் அல்ல, தி.மு.க.கூட்டணியிலும் 200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள். மக்களின் எண்ணம் மாறி விட்டது.ம க்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். தலை வணங்குவோம். இனி வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் செயல்பட வேண்டும்.

           நாங்கள் தவறான பாதையில் (கூட்டணி) செல்ல வில்லை. தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பா.ம.க. 3 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைவைத்து நாம் தவறான பாதையில் சென்று விட்டோம் என்று கூற முடியாது. நாம் தவறான முடிவும் எடுக்கவில்லை. தி.மு.க.தலைவர் கருணாநிதி நாம் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளார். அதன் அடிப்படையில் தான் நாம் தி.மு.க.கூட்டணியில் சேர்ந்து உள்ளோம். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.அ தனால் நாம் தோல்வி அடைந்து விட்டோம். விரைவில் எம்.பி.தேர்தல் வரப்போகிறது. அதற்கு நாம் ஓராண்டுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

            உள்ளாட்சி தேர்தலிலும் நாம் அதிக இடங்களில் போட்டியிட தயாராக வேண்டும். அடுத்த தேர்தலில் சரியான பாதையில் செல்ல வேண்டும். நமது கட்சி நிர்வாகிகள் யாருடைய அச்சுறுத்துதலுக்கும் பயப்பட தேவையில்லை .மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். அகமுடையார், கள்ளர், மறவர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர்ப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.இதையெல்லாம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா செய்து கொடுப்பாரா? அப்படி செய்து கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அனைத்தும் போராடுகிற நிலையில் நிலுவையில் உள்ளது.

            அடுத்த சட்டசபை தேர்தலில் நாம் கேட்கிற தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. விடம் இருந்து கிடைக்க வில்லையென்றால் நாம் நமக்கென்று 25 தொகுதிகளை இப்போதே தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். 25 தொகுதிகளில் நாம் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.அ தன்பிறகு நாம் கேட்காமலேயே நமக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். சிதம்பரம் தொகுதியில் எனக்கு அனைத்து சமூகத்தினரும் வாக்கு அளித்து உள்ளனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொன்ன வாக்குறுதிகளை 1 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்.ஆனால் பதவி ஏற்று 7 வாக்குறுதிகளை மட்டும் உடனடியாக நிறை வேற்றுவதாக கூறியுள்ளார். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, கான்கிரீட்வீட்டுக்கு கூடுதல் நிதி உதவி போன்ற நல்ல திட்டங்களை நிறை வேற்றவில்லை.ஆகவே நாம் விரைவில் இது போன்ற மக்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இவ்வாறு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் கூறினார்.

               கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் கேப்டன் நடராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், மாநில பொருளாளர் அபிராமம் கோவிந்தசாமி, மாநில இணை தலைவர் ஆறுமுக நாட்டார், இணை செயலாளர் ராஜா, முத்து, மறவன்நடராஜன், ஐரோப்பிய மாணவரணி தலைவர் கோகுல்வாண்டையார், மாவட்ட இளைஞரணி வேல்ராஜ், மதியழகன், மதுரை சுரேஷ், நாகவேல், ஜோதி மணி உள்பட தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

          சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தலைவர் ஸ்ரீதர்வாண்டையாருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஐ.நா.சபையின் அறிக்கையின்படி போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              பெட்ரோல் ,டீசல் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். காவிரி டெல்டா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையாருக்கு முழு அதிகாரம் அளிக்கிறது.

              அதன்படி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார், இளைஞர் அணி துணை தலைவர் சிற்றரசு, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இந்திரக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்துநீக்குவதற்கு முழு ஆதரவு அளிப்பது, சாதி வாரியாக கணக்கு எடுக்கும் பணிக்கு உத்தரவிட்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கட்சி புதிய மாநில பொதுச்செயலாளராக கேப்டன் நடராஜன், மாநில இணை தலைவராக ஆறுமுக நாட்டார், மாநில துணை தலைவராக ஒச்சாயி தேவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

thanks to http://cuddalore-news.blogspot.com/2011/05/blog-post_25.html
read more...
ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்SocialTwist Tell-a-Friend