0 comments
சர்வதேச சமூகத்தின் சதி

அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட பதினேழு நாடுகள்
இதற்காகக் கோரிக்கை விடுத்திருந்தன. read more...

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
கம்னியூசியம், இஸ்லாம் மனிதாபிமானம் ?

சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும்,
சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர்.

read more...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

--இந்தியா ---வெளிஉறவு கொள்கை -----ஓர் ஆய்வு

மோகன் கந்தசாமி

இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. read more...

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
இதுவன்றோ பாதுகாப்பு வளையம் -முனைவர் மு.இளங்கோவன்
பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டின் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னர்களும் தங்களுக்குள் பூசல் ஏற்பட்டுப் போர் நடைபெற்ற சூழலில் குடிமக்களை வருத்தாமல் போர் செய்துள்ளமையை நம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் பாடல் தமிழர்களின் அறவுணர்வு மீறாப் போரியல் பற்றி விளக்குகிறது.

மக்களை எதிரியாக நினைத்துக் கரிக்கட்டைகளாக்கும் இன்றைய கொடும் நெஞ்சத்தினர்க்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைகிறது.நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்ற மன்னரைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது கீழ்வரும் பாடல்.

' ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

ஆக்களையும்(பசுக்களையும்), ஆவினது இயல்புடைய பார்ப்பனர்களையும், மகளிரையும்,நோயுற்றவரையும் பாதுகாக்கும் நோக்கிலும்,தென்திசைக்கண் வாழும் இறந்தவர்களான முன்னோர்களுக்கு இறுதிக்கடமைகள் செய்யும் புதல்வர்களைப் பெறாதவர்களைக் காக்கும் நோக்கிலும் எங்கள் அரசன் போர் செய்ய வருகின்றான்.அவன் அம்பு பாயாத வண்ணம் அனைவரும் பாதுகாபான இடங்களுக்குச் செல்வீர்களாக! என்று அறப்பண்புடன் நடந்துகொள்ளும் அரசன் படைகளை உடையவன்.

மறப்பண்பு (வீரம்) நிறைந்தவன்.யானைமேல் கொடிகள் அசையும் வகையில் யானை மேல் ஏறிச்செல்லும் இயல்புடையவன்.அவன் பெயர் குடுமி என்பதாகும் அவன் பஃறுளியாற்றின் மணலின் எண்ணிக்கையவிட அதிகமான ஆண்டுகள் வாழட்டும் என்று புலவர் வாழ்த்தினார்.

இவ்வாறு போரிடும் ஆற்றல் இல்லாத எளிய மக்களைப், பாதுகாத்த பண்டையநாள் அரசர்களை நினைக்கும்பொழுது அவர்களின் கருணையுள்ளம் நமக்குப் புலப்படுகிறது. அறிவியல் தொழில் நுட்பங்களால் நாம் முன்னேறியுள்ளதாகக் கூறிக்கொண்டாலும் "வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரியும்" நிலை மாறவில்லை.

(மேலும் விவரமாக அறிய விழைபவர்களுக்கு ஔவை.துரைசாமியாரின் சிறு விளக்கத்தையும் அளிக்கிறேன்.கழகப்பதிப்பு)


(இனி, இப் பாட்டின்கண் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி,
அறத்தாறு நுவலும் பூட்கையும் யானைமேற் கொடி காட்டிய
சிவிகையமைத்து இவர்ந்து வரும் பெருமிதமும் உடையன் என்றும்,
இவனுடைய முன்னோனாகிய பாண்டியன் நெடியோனென்பான்
பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்தே முந்நீர் விழா ஆற்றினான்
என்றும், அவ்வியாற்று மணலினும் பல வாண்டுகள் இப் பாண்டியன்
முதுகுடுமி வாழ்வானாக என்றும் வாழ்த்துகின்றார்.)

(ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் - ஆவும்
ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும்; பெண்டிரும் - மகளிரும்;
பிணியுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து; தென்புல
வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோராகிய
நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக்
கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் -
பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்;எம் அம்பு கடி விடுதும்-
எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம்; நும் அரண்
சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று;
அறத்தாறு நுவலும் பூட்கை - அறநெறியைச் சொல்லும்
மேற்கோளினையும்; மறத்தின் - அதற்கேற்ற மறத்தினையுமுடைய;
கொல் களிற்று மீமிசைக் கொடி - கொல் யானை மேலே
எடுக்கப்பட்ட கொடிகள்; விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை
நிழற்செய்யும்; எங்கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய
குடுமி வாழ்வானாக; தம் கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப்
பசும்பொன் -சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை;
வயிரியர்க்கு ஈத்த - கூத்தர்க்கு வழங்கிய; முந்நீர் விழவின்
நெடியோன் -முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய
நெடியோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் பஃறுளி மணலினும் பல -
நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்
எ-று. )
நன்றி: முனைவர் மு.இளங்கோவன்
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.

எம்.கே.பத்ரகுமார் இந்திய வெளிநாட்டுச் சேவைகளில் இராஜ தந்திரியாகப் பணியாற்றியவர். இலங்கையில் அரசியற் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19 அன்று மரணமானார். சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டாலும் அந்தச் சம்பவங்களின் காட்சிகள் எம்மை விட்டு அகலாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அச்சம்பவங்களினால் நாங்கள் பெருமளவிற்கு இயல்பற்ற நிலையை உணர்வதோடு அமைதியாக இருக்கவும் முடியாதவர்களாக உள்ளோம். ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. எங்கள் கைகளில் இரத்தம் இருப்பதை நாங்கள் பின்னர் உணர்ந்தோம். எங்கள் கைகளில் மட்டுமல்ல, எங்கள் முழு உடலிலும், எமக்குள்ளே ஆழமாகவும் இரத்தம்.

"பிரபாகரனின் இரத்தம். இல்லை, இது பிரபாகரனின் இரத்தம் மட்டுமல்ல, 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்களினதும் இரத்தம். கடந்த கால் நூற்றாண்டு காலமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத வன்முறையால் சிதைவுற்றுப் போன இலங்கைத் தமிழ் மக்களுடைய இரத்தம். "
"சகிப்புத் தன்மையை எங்களுடைய 5 ஆயிரமாண்டுகால வரலாறு எமக்குத் தந்தது. எங்களுக்கான நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு எங்களுடைய பிரபஞ்ச மதம் எங்களுக்கு ஒரு ஈடிணையற்ற ஞானத்தை வழங்கியிருந்தது."

"இன்னொரு தசாப்தத்திற்குப் பிறகு இந்திய உப கண்ட வரலாற்றில் தமிழ்ப் பிரச்சினையென்பது வெறும் பழங்கதையாகிவிடும். சிங்களவர்கள் இந்தியர்களின் மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். எங்களுடைய உயர் குடியினரும், அவர்களுடைய உயர் குடியினரும் ஒரே விடயங்களையே பேசுவார்கள். அவர்கள் இருவரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். கோல்ப் விளையாடுவார்கள். குளிர்ந்த பியர் அருந்துவார்கள். அவர்கள் நன்றாக இருக்க நாங்கள் வாழ்த்துவோம்.
அப்போதும் எங்கள் கைகளில் இரத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
அது எப்போதுமே எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.
இரத்தக்கறைகள் கழுவப்படப் போவதில்லை. "

இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமானார் என்பதனை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையாளர் எம்.கே.பத்ரகுமாரால் எழுதப்பட்டது. இவர் இந்தியாவின் ராஜதந்திர சேவையில் நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை தொடர்பான செயலாளராகவும் புதுடெல்லியில் பணியாற்றி உள்ளார்.

நன்றி தமிழ் சகி நியூஸ்



<<கட்டுரயை முழுமையாக படிக்க >>

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
மரணத்தை வென்ற மாவீரன்:-கை.அறிவழகன்.
[Friday, 2009-05-22 15:59:54]

இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????
இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம், உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விழைவிக்கவில்லை.

அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.

பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே……

உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை, அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன, தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.

எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம், களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.

சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு, உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.

இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.

உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசிய போதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது, மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல, மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு, அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.

மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு, மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.

எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே. எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம், சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.

மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே, உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல, அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.

மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம், ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம், தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

- கை.அறிவழகன்

THANKS TO WWW.SEITHY.COM
read more...
SocialTwist Tell-a-Friend
1 comments
பிரபாகரன் தொடர்பாக "பத்மநாதனின் அறிக்கை நம்பகத்தன்மையற்றது": பழ.நெடுமாறன் அறிக்கை
பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு
:விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது.
ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களும்,போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர்.மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள். சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.


நன்றி தமிழ்செய்தி
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
பாதுகாப்பு வலயம் --- இலங்கை

போருக்கு - முன்னும் ---பின்னும்
புத்தம் சரணம் ......புத்தம் சரணம் ......
என்றவரிடம்
சரணம் என நின்ற மக்களை
லட்சம் , ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் , முதியவர் என அனைவரையும்
கொன்று குவித்த பின்
வாழ்ந்த இடம் சுடுகாடாக...........

உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு,
உணவு கேட்ட மக்களுக்கு,
போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு
.................
மரணம்
ஆம் மரணத்தை
பரிசாக தந்தன சர்வதேச நாடுகள்





பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது ...


கொன்று குவித்த பின்




எழும்பும் சதையும் கூட மிதம் இன்றி அழிக்கப்பட்டது.


தங்களால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற அவமானமும் குற்ற உணர்ச்சியும் ஏராளமான தமிழக இளைஞர்களை கசக்கிப் பிழிகிறது







read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

வன்னி - கடைசி நிமிடம் -நடந்தது என்ன ?---

ப.நடேசன் உட்பட பலர் கொல்லப்பட்டது எப்படி ?

இங்கு அழுத்தவும்

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல்திகதி: 09.05.2009 // தமிழீழம்- பூங்குழலிஎன் அன்பான உறவுகளே,உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன்.

1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "கற்பழிப்பு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின் மூலையில் வரக் கூடிய கொலை, கற்பழிப்பு செய்திகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வந்தது அந்த காலக்கட்டத்தில்தான்.
மடலினை படிக்க
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

கடந்து செல்ல வேண்டிய தருணமும் சொல்ல வேண்டிய செய்தியும்... GTN ற்காக டி.அருள் எழிலன்:

சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள்.

பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மறைக்க சிங்கள அரசு தமிழ் மக்களை உளவியல் ரீதியாக தாக்கியழிக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இயலாமையால் அழுகிறார்கல். தமிழககமோ இறுக்கமான மொனத்தில் உறைந்திருக்கிறது. பெருந்தொகையான மக்கள் கூட்டம் காணாமல் போனது தொடர்பாக கேள்விகளை எழுப்ப வேண்டிய வட இந்திய அங்கில ஊடகங்களோ ஈழப் போரின் முடிவாக இதைக் கொண்டாடி மகிழ்கின்றன.நன்றி :http://www.yarl.கம

மேலும்]படிக்க

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

Tamils Allege Rapes In Government CampsSKYNEWS

Tamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports.

http://news.sky.com/skynews/Home/video/Sri-Lanka-Tamil-refugees-tell-of-rape-and-kinappings-in-camps/Video/200905315285812?lpos=video_Article_Related_Content_Region_1&lid=VIDEO_15285812_Sri_Lanka%3A_Tamil_refugees_tell_of_rape_and_kinappings_in_camps

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
பிரபாகரன் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் - நல்லகண்ணு



எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலமும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டன.

பண பலத்தைக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்பட்ட சூழ்நிலையில் சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. பிரபாகரன் உயிரோடு உள்ளார்: அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற சார்லஸ், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலித்தலைவர்களை ராஜபக்சே அரசு நயவஞ்சமாக கொலை செய்து விட்டது.

இலங்கையில் போர் நிறுத்தம் என்ற விஷயத்தில் இந்திய அரசு கண்டிப்பாக இருந்திருந்தால் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பர். இனியாவது ஐ.நா., விரைந்து செயல்பட்டு இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்றி மறுவாழ்வுக்கு வழி வேண்டும். எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என்றார்.

நன்றி http://WWW.PATHIVU.COM

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது (நன்றி - பானு -ஆஸ்திரேலியா )


நக்கீரன் செய்திகளை படிக்க கிளிக்


K http://nilavupattu.blogspot.com/2009/05/blog-post_4447.ஹ்த்ம்ல்

அன்றே தலைவர் பதில் சொல்லி விட்டார்



read more...
SocialTwist Tell-a-Friend

நகைசுவை நாடகம்

0 comments
நகைசுவை நாடகம் ஆட்டு கூட்டம்
பொழுதுபோக்கு



நாணயக்காரவும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாதவர் .
பிரபாகரன் உள்ளிட்டோரின் சடலங்கள் முல்லைத்தீவில் அடக்கம் செய்யப்படும்வீரகேசரி நாளேடு 5/21/2009 9:41:44 AM - புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் சடலங்களை முல்லைத்தீவு பகுதியில் அடக்கம் செய்யவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மோதல்களின்போது உயிரிழக்கின்ற புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து வந்தோம் என்றும் எனினும் அந்த அமைப்பு தற்போது புலிகளின் சடலங்களைப் பொறுப்பேற்காததால் அவர்களின் சடலங்களை இராணுவம் அடக்கம் செய்யவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்

நன்றி http://www.yarl.com/forum3/index.php?showtopic=58946

read more...
நகைசுவை நாடகம்SocialTwist Tell-a-Friend
1 comments
பிளாஸ்ரிக் சேர்ஜரி பிரபாகரன் மாண்டார்; தேசிய தலைவருக்கு உயிராபத்து இல்லை


இந்திய படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.


பிரபாவின் இறந்த உடல் - சில சந்தேகங்கள்

//உண்மை முகம்.//





பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சோடிக்கப்பட்ட முகம்.//
கடந்த 3 நாட்களில் மட்டும் பலமுறை, பலவிதங்களில் பிரபாகரனை கொலைL செய்திகளை வெளியிட்டது சிறீலங்கா மற்றும் இந்திய ஊடகங்கள். அவை எவற்றிலும் உண்மையில்லை.


பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிய போது சுட்டுக்கொன்றதாக பொய்யை சொன்னது. 2 நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக சொன்னார்கள். அடுத்தது டிஎன்ஏ பரிசோதனை நடப்பதாக நேற்று சொன்னார்கள்.


இன்று செய்தியில் நந்திக்கடலில் கொன்றதாகவும், இன்று உடல் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்காக ஒரு படம், ஒரு ஒளிக்காட்சி!


2 நாட்களுக்கு முன்னர் இறப்புக்குள்ளான உடல்கள் எப்படியிருக்கும் பார்த்திருக்கிறீர்களா? படங்களில் இருக்கும் முகம் அப்படி 2 நாளான உடல் மாதிரியா இருக்கிறது?



பிரபாகரனின் 2008 மாவீரர் உரை படங்களை விடவும் இந்த படத்தில் இருக்கும் முகம் இளமையாக இருப்பது தெரியவில்லையா?நேற்று டி.என்.ஏ பரிசோதனை செய்த உடலை, இன்று கண்டுபிடித்தார்கள்?எந்த 'டி.என்.ஏ.மாதிரிகளை' வைத்து பிரபாகரன் என்று டி.என்.ஏயை உறுதிப்படுத்தினார்கள்?சார்லஸ் ஆன்றனி என்று வந்த படமும் இன்னொரு போராளியுடையது. பிரபாகரன் பற்றி வெளியாகிற இப்போதைய படங்களும், செய்திகளும் பொய்.


நண்பர்களே, தொழில்நுட்ப உலகின் யுத்தம் உளவியலை பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. பலியாகிவிடாதீர்கள். தமிழர்களின் ஈழத்திற்காக போராட களத்தில் வருவான் பிரபாகரன். இப்போதைக்கு பாதுகாப்பான தளத்தில் தனது முக்கிய தளபதிகளுடன் அவர் இருப்பதை நம்புங்கள்.


சிறீலங்கா செய்துள்ள போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைக்கவும், அழிக்கவும் உளவு அமைப்புகளும், அரசுகளும் நடத்துகிற நாடகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு நீதி பெற கவனம் செலுத்துங்கள்


"சிங்களவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. இலங்கையில் DNA test செய்வதற்கான வசதிகள் இல்லையாம். இவ்வளவு விரைவாக எப்படி DNA test எடுக்கப்பட்டது என்று மண்டையை போட்டு உடைக்கிறார்கள்"

THANKS:WWW.YARL.COM

MAYA"S SAID

THE BODY IS ENTIERLY DIFFERENT FROM THE FACE.......

I THINK THIS IS HIGH TECH SYNTHETIC MASK..




read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
தேவர் தலைமையில் தமிழர் கடவுள் முருகனுக்கு பால் குளியல்


தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.மகிழ்ச்சி
19.5.2009 காலை ஆறு மணிக்கு திரு சுபாஷ் போஸ் தேவர் தலைமையில் திருப்பூரில் பிரபாகரன் நீண்ட நாள் வாழ வேண்டும் என வேண்டிகொண்டு தமிழர் கடவுள் முருகனுக்கு பால் குளியல் நடத்தப்பட்டது.

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு

"புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க விரும்புகிறோம்."

"அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் "NATIONAL POST" மக்களின் போராட்டங்களை முன்வைத்து ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது. அது தமிழர்கள் தமது போராட்டங்களில் புலிகளின் கொடியையும் அதன் தலைவரினது படங்களையும் வைத்திருப்பதைப் பார்த்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்களை நடத்துவது போல் தெரியவில்லை, மாறாக தடைசெய்யபப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகளைக் காப்பாற்றவதற்கே இந்த போராட்டங்கள் நடத்தப்படுவதாக சந்தேகம் வெளியிட்டிருந்தது."


DEVAR NEWS
read more...
SocialTwist Tell-a-Friend

PRABAKARAN DEAD ?

0 comments
LTTE FOUNDER PRABAKARAN DEAD ?
சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள்


அன்பான தமிழ மக்களே! விசமிகளின் பொய்ப் பரப்புரையை நம்பவேண்டாம்.ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர்.

தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும் அவரது உடலம் கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பல பொய்யான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.


இந்திய அரசிற்குச் சார்பான ஒரு சில ஊடகங்கள் இச்செய்தியை மிகைப்படுத்தி எழுதுவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்களும் தெரிவிக்கின்றன.


ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இன்னும் போர்ப்பிரதேசங்களில் உள்ளனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதே சிங்கள அரசின் திட்டம். வன்னித் தகவல்களின் படி இதுவரை 25000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தொடர்ந்தும் கடும் சமர் நடந்து வருவதாகவும் தெரியவருகின்றது.


மேலும் இலங்கைத் தமிழர் பாதுகதப்பு இயக்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டள்ளதாவது:மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.


மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலத்தை மறைப்பதற்காகவே இலங்கை இனவெறி அரசு இப்படியான பொய்யான செய்திகளைப் பரப்பிவருகின்றது. இப்படியான பொய்ப் பரப்புரைகளை தயவுசெய்து யாரும் நம்பவேண்டாம். மக்களைக்காப்பாற்ற தலைவரின் நேரடி வழிகாட்டலின் கீழ் அனைத்து முன்னணித் தளபதிகளும் களத்தில் நின்று முனைப்புடன் போராடி வருகின்றனர்.


சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அனைத்துலகமும் ஐநாவும் முன்வர வேண்டும் என அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.சிறீலங்கா அரசு புலம்பெயர் மக்களின் போராட்டங்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.குறிப்பாக பொய்யான செய்திகளை அனைத்துலக ஊடகங்களுக்கு வழங்கி,அதனூடாக பெரும் இனப்படுகொலையினை வன்னியில் மேற்கொண்டு வருகின்றது.சிறீலங்கா அரசு ஆதாரம் ஒன்றும் இல்லாத செய்திகளையே வெளியிட்டு வருகின்றது.


இதனை நீங்கள் நம்பாது, ஆதாரமான செய்திகள் வரும் வரை காத்திருக்கவும்.தமிழ்மக்களை குழப்பும் முயற்சியில் சிறீலங்கா அரசு முயற்சி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது


thanks:
http://www.tamilseythi.com/tamilar/Events/note-2009-05-htmlhttp://www.tamilseythi.com/tamileelam/parappurai_170509.html





read more...
PRABAKARAN DEAD ?SocialTwist Tell-a-Friend
0 comments

தமிழக தேர்தல் முடிவுகள்;இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல்![பிரித்தானிய நேரம் : May 16th, 2009 at 18:21]
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனம் மீது வந்த சிறிய கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.இதில் பாரதிராஜாவின் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது.

இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர் மீதான தாக்குதல்களை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(நன்றி:TNN)

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments



read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச்சு

read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
அனில் அம்பானி 'கொலை முயற்சி'வழக்கில்
புது திருப்பமாக ஏர் வொர்க்ஸ் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயர் பால்ராஜ் தேவர் மற்றும் உதய் வாரேகர். இந்த இருவரும் ஏர் வொர்க்ஸின் தொழில்நுட்ப உதவியாளர்கள்அம்பானியின் ஹெலிகாப்டரில் சிறு சிறு கூழாங்கற்களைக் கொட்டியதில் இந்த இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதா மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனத்திலிருந்து நேற்று நீக்கப்பட்ட விஜய் பட்னாகர் என்பவரையும் விசாரித்துள்ளது போலீஸ். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட பரத் போர்ஜ் சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே நிறுவனத்தின் மேலும் இரு ஊழியர்கள் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருவாரங்களுக்கு முன் அனில் அம்பானி வழக்கமாகப் பயணிக்கும் ஹெலிகாப்டர், வழக்கமான பணிகளுக்காக ஏர்வொர்க்ஸ் நிறுவன வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரை இயக்க முற்படும்போது, அதன் பெட்ரோல் டேங்கில் கூழாங்கற்கள் மற்றும் மணல் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகிறது போலீஸ்.
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

த‌மிழக‌த்து‌க்கு சோ‌னியா வரு‌ம் நா‌ள் து‌க்க நா‌ள் : பாரதிராஜா

இலங்கை பிரச்சனையில் மவுனம் சாதித்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு ஓட்டு கேட்டு வரும்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று கூ‌றிய இய‌க்குன‌ர் பாரதிராஜா, சோனியா த‌மிழக‌த்து‌க்கு வரும்நாள் துக்க நாள் எ‌ன்று ஆவேசமாக பே‌சினா‌ர்.திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது என்று பிரசாரம் செய்யவது என்று இந்த இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி நேற்‌றிரவு ஈரோடு ம‌க்களவை‌த் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக பிரசார கூட்டம் நடத்தப்பட்டது.

ஈரோடு பெரியார் நகரில் நடந்த கூட்டத்துக்கு இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசுகை‌யி‌ல், டெல்லி அரசு எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. பத்மஸ்ரீ பாரதிராஜாவா? தமிழன் பாரதிராஜாவா? என்ற கேள்வி வந்தபோது, தமிழன் பாரதிராஜா என்கிற பெருமை மட்டும் போதும் என்று முடிவு செய்தேன். தமிழன் என்பதற்கு இணையான வேறு பட்டமே கிடையாது.பாரதிராஜா யார் என்று வயலார் ரவிக்கு தெரியுமா? என்கிறார் இளங்கோவன். அவருக்கு தெரியுமா? நானும் வயலார் ரவியும் 25 ஆண்டுகால நண்பர்கள் என்று.முத்துக்குமாரை தெரியாது என்கிறார். முத்துக்குமாரை தெரியாமல் தமிழன் இருக்கலாமா? அவருக்கு ஓடுவது தமிழ் ரத்தமா?.

தனி ஈழம் என்று யார் குரல் கொடுத்தாலும் அவர்களை வாழ்த்துகிறோம். துரோகிகளை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். நல்லவர்களை தேடிக்கொள்ளுங்கள்.16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இப்போது புரட்சியை தொடங்கி இருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் தேர்தலில் அது பிரளயமாக மாறவேண்டும்.ஓட்டு கேட்க சோனியா வரக்கூடாது. அப்படி அவர் 6ஆ‌ம் தேதி சென்னைக்கு வந்தால் மிக பலத்த எதிர்ப்பு காட்ட வேண்டும். தாய்மார்களே பொதுமக்களே நீங்கள் உங்கள் வீடுகளில் கறுப்பு துணியை கட்டுங்கள். சிறு கறுப்பு துணியை அணிந்து கொள்ளுங்கள். யாராவது கேட்டால் சோனியா வரும்நாள் எங்கள் துக்க நாள் என்று கூறுங்கள் எ‌ன்று பாரதிராஜா பேசினார்.

கூட்டத்தில் இயக்குனர்க‌ள் சீமான், ஆர்.சுந்தரராஜன், கவுதமன், ஆர்.கே.செல்வமணி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக 'சீனாவின் முற்றுகையில் இந்தியா' என்ற புத்தகத்தை இயக்குனர் பாராதிராஜா வெளியிட்டார்.

http://tamil.webdunia.com/

read more...
SocialTwist Tell-a-Friend