விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்

0 comments
திருச்சி,செப்.29&
திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 5 குட்டி விமானங்கள் தயார்நிலையில் உள்ளன.

விமானம் ஓட்டும் பயிற்சி நிலையம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையட்டி பயணிகளின் வசதிக்காக திருச்சி விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய டெர்மினல் கட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி நிலையமும் தொடங்கப்பட இருக்கிறது. ‘வீகேயென் ஏவியேசன் அகாடமிÕ என்ற நிறுவனம் இந்த பயிற்சி நிலையத்தை தொடங்குகிறது. இதற்காக விமான நிலைய வளாகத்தில் பயிற்சி விமானங்கள் நிறுத்துவதற்கான கூடாரம் (செட்) கட்டப்பட்டு உள்ளது.

தயார் நிலையில் குட்டி விமானங்கள்
இந்த பயிற்சி நிலையத்திற்காக அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட 5 குட்டி விமானங்களும் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அவை நேற்று விமான நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்த விமானங்கள் ஒவ்வொன்றும் தலா 4 இருக்கைகள் உடையவை ஆகும்.

விஜயதசமி விழாவையட்டி இந்த குட்டி விமானங்களுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வீகேயென் ஏவியேசன் அகாடமியின் தலைவரும், தொழில் அதிபருமான வீகேயென் கண்ணப்பன் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சவுண்டையா, கே.என்.சேகரன் எம்.எல்.ஏ, தொழில் அதிபர் கே.என். ராமஜெயம், பஞ்சாயத்து தலைவர் குடமுருட்டி சேகர், தில்லை மனோகரன், கவுன்சிலர் கண்ணன், வீகேயென் பாண்டியன், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தர்மராஜ், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆணையர் நயினார் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பயிற்சி நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கேப்டன் வீகேயென் ராஜா வரவேற்றார்.
திருச்சி விமான நிலையத்தில் துவக்கப்படவுள்ள பிளையிங் கிளப்பில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று சிறிய ரக பயிற்சி விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பூஜை போடப்பட்டது.


வி.கே.என்., சிவில் ஏவியேசன் நிறுவனம் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் பிளையிங் கிளப் துவக்கப்பட உள்ளது. இதற்கு திருச்சி விமான நிலையத்தின் (பழைய விமான நிலையம்) வடகிழக்கு மூலையில் சிறிய பயிற்சி விமானங்கள் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பிளையிங் கிளப்பில் விமான பயிற்சி அளிக்க கலிஃபோர்னியாவிலிருந்து ஐந்து சிறிய ரக விமானங்கள் கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பின் சரக்கு வாகனத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடிப்படை பணிகள் முடிக்கப்பட்ட பின் முறைப்படி திருச்சி பிளையிங் கிளப் அக்டோபர் 21ம் தேதி தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.


இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு நேற்று பிளையிங் கிளப்பில் விமானங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு விஜயதசமி பூஜை நடந்தது. விழாவில், பிளையிங் கிளப் தலைவர் வி.கே.என்., கண்ணப்பன், இயக்குனர் ராஜா மற்றும் அமைச்சர் நேரு, விமான நிலைய கண்ட்ரோலர் தர்மராஜ், எஸ்.பி., கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிளையிங் கிளப் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


""பிளையிங் கிளப் அமைக்கப்படுவதன் மூலம் திருச்சியை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் �வட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிளையிங் கிளப் மூலம் விமான பயிற்சி பெற சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. திருச்சியிலேயே பயிற்சி எடுத்துக் கொண்டு சிறந்த விமானியாக முடியும்,'' என்றும் பிளையிங் கிளப் நிர்வாகிகள் கூறினர்.
thanks to http://www.trichyportal.com/forum/viewtopic.php?f=3&t=46&start=90
read more...
விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்SocialTwist Tell-a-Friend

லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலி

0 comments
லிபியா‌வி‌ல் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு த‌மிழர் பலியா‌கியு‌ள்ளா‌ர்.

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (40), ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் அசோக்குமார் (24) உள்பட சுமார் 30 பேர் லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர்.

அவர்கள் அங்குள்ள மின் கோபுரங்கள் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தின் கூடாரங்களில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்தனர்.

அப்போது கலவர கும்பல் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா சிக்கி உயிரிழந்தார்.

இ‌தி‌ல் படுகாய‌ம் அடை‌ந்த ஆலங்குளம் தாலுகா நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) அ‌ங்கு‌ள்ள மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்சை பெற்று வந்தார். நே‌ற்று அவ‌ர் சிகிச்சை பலனின்றி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

அசோக்குமார் இறந்த தகவல் நாகல்குளத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த களப்பாகுளம் முத்துக்குமார் தொட‌ர்‌ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இத‌னிடையே ‌லி‌பியா‌வி‌ல் உ‌ள்ள த‌ங்க‌ள் ‌பி‌ள்ளைகளை உடனடியாக ‌மீ‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பெ‌ற்றோ‌ர்க‌ள் ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளை கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.
THANKS TO http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1102/25/1110225004_1.htm
read more...
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலிSocialTwist Tell-a-Friend

இனிஇ இல்லை அண்ணையின் அன்னை

0 comments
கனடாவிலிருந்து பொன்.சிவகுமாரன்


பார்வதி... பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரானஇ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!


2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்துஇ 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த ராணுவம்இ அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங் கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னை யும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார் கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாகஇ இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள்இ இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் 'குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார். மூத்த மகன் மனோகரன்இ அடுத்த மகள் ஜெகதீஸ்வரிஇ இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூபி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகரனும் நான்கு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடஇ கைக்குழந்தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார். எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில்தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும்இ அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள். அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்!

பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் ராசம்மா. சிங்கள இனவாதைக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த ராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரைஇ சிங்கள இனவெறியன் ஒருவரால் சுட்டுக் கொல்லப் பட்டார். கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் ராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார்.பத்திரிகை யாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய பேட்டி யில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப் பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையேகுறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் சிங்கள ராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடிவந்தபோதுஇ ஏதும் அறியாத சிறுவன்தான் பிரபாகரன். ஆனால்இ 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும்இ பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும்இ பின்னர் அதை எடுத்துச் செல்வதையும் பார்வதி பார்த்தார். சின்னச்சோதிஇ நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும்இ பிரபாகரனைவிட மூத்த குட்டி மணியின் நட்பும் அன்னையை யோசிக்கவைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போய்இருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி. ''நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?'' என்று வேலுப்பிள்ளை கேட்டார்.



''நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்'' என்று சொல்லிவிட்டுப் போன பிரபாகரனை இருவரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வந்த போலீஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975-ல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம்கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாகஇ பெருமையாகக் கழித்தார். 2000-ம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன. இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கியதால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003-ல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக்கொண்டது. மக்களைப் பிரியா மன்னவனும்... மன்னனைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது!

புலியை வளர்த்த குயில் பறந்துவிட்டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!



Thanks
http://www.yarl.com/forum3/index.php?showtopic=82167
read more...
இனிஇ இல்லை அண்ணையின் அன்னைSocialTwist Tell-a-Friend

அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி

0 comments
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு சீட் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

அதில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரும் மேற்குவங்க மாநில விவசாயத்து துறை அமைச்சருமானர் நரேந்திரநாத் தே, ஜெயலலிதா ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது கட்சியின் தேசியச் செயலாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.

இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.

உசிலம்பட்டி தொகுதியில்...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பார்வர்டு பிளாக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சீட் மட்டும் தரப்பட்டதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சீட்டுக்காக ஒப்பந்தம் போடுவதா என்று கட்சியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாயாண்டி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒரு சீட் தருவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இக்கட்சியின் தலைவராக நடிகர் கார்த்திக் பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் பின்னர் அதிருப்திக்குள்ளாகி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கார்த்திக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
thanks to http://thatstamil.oneindia.in/news/2011/02/24/upset-over-seat-allocation-aifb-on-verge-of-split-aid0090.html
read more...
அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடிSocialTwist Tell-a-Friend

மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தை

0 comments
அண்மையில் வடமராட்சியில் தமிழக மீனவர்கள் பிடிகப்பட்டமையும் பின்னர் திமுக கனிமொழி உட்பட பலர் உடனடியாக ஆர்ப்பாட்டம்செய்து அரசியல் புழுதியை கிளப்பியதும் தெரிந்ததே. உண்மையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு திமுக அரசு மற்றும் யாழ் அரசியல் வாதி ஒருவரினாலும் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளார் மாதகல் பங்குதந்தை ஆனந்த குமார்.


எடுத்துக்காட்டாக நேற்று 50 ரோலர்களில் தமிழ் நாட்டு மீனவர்கள் மாதகல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்தனர். இவர்களை எமது மீனவர்கள் ஒன்றும் செய்ய கூடாது என நான் கூறியிருந்தேன் அதே நேரம் நான் அந்த இந்திய மீனவர்களை சந்தித்தேன் அவர்கள் கூறியது என்னவென்றால், தாம் திமுக தொண்டர்களால் கட்டாயபப்டுத்தப்பட்டு அனுப்பப்படுவதாக கூறினார்கள் தம்மை மன்னிக்குமாறும் கூறினார்கள் என அருட்தந்தை ஆனந்த குமார் கூறியுள்ளார்


Thnaks

http://www.nerudal.com/nerudal.26242.html
read more...
மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தைSocialTwist Tell-a-Friend

சாமியார் பிரேமானந்தா காலமானார்!

0 comments

THANKS TO http://www.inneram.com/2011022113690/premananda-died


 
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் C காலமானார்.

திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு 95ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பிரேமானந்தாவுக்குப் புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இரட்டை ஆயுள் தண்டனையையும் தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. கடலூர் சிறையில் 10 ஆன்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வந்தார்.

தண்டனை ரத்து செய்ய மேல் முறையீடு செய்தார். ஆனால் கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

கடந்த சில நாள்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பிரேமானந்தா, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று நண்பகல் அவரது உயிர் பிரிந்தது.
read more...
சாமியார் பிரேமானந்தா காலமானார்!SocialTwist Tell-a-Friend

தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்

0 comments
THANKS TO http://www.tamilwin.com/view.php?222CQjH3bcdT92qb4e0cIBB402dRpGsbdd0aGpX4202VLLSk2e4cC293ecbe5jQec2
[ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 02:56.08 AM GMT ]
நேற்று இயற்கை எய்திய பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தினர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.

பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்ட வேண்டாம். அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் பிரபாகரனின் பெயரைப் பாவிக்க வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். பிரபாகரன் பெயரைக் கொண்ட அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
அஞ்சலி சுவரொட்டிகளில் பிரபாகரன் பெயரைப் பாவிக்க வேண்டாம் எனவும், "வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள்" எனப் பாவிக்கும்படியும் இராணுவத்தினர் பணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
read more...
தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்SocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதி

0 comments
சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் தலைமையில் இயங்கி வரும், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில், அவரை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, நேரில் சந்தித்தனர். அப்போது அ.இ.மூ.மு.க., வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். எந்த தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும், என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=189966
read more...
அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதிSocialTwist Tell-a-Friend

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்

0 comments

வீரகேசரி இணையம் 2/11/2011 8:40:50 AM
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால், தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன் சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. _
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=81679
read more...
தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்SocialTwist Tell-a-Friend

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!

0 comments
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில் விதைத்துவிட்டன.

இனி அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து எகிப்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சரி அல்லது இப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கையே தொடர்ந்து ஆட்சி நடத்த முட்டுக் கொடுத்தாலும் சரி, அதிபராக இருப்பவரின் கழுத்தில் உழைக்கும் மக்களின் வெப்ப மூச்சு வீசிக் கொண்டே இருக்கும். அந்த வெப்பம், எப்போது வேண்டுமானாலும் தன் கழுத்தை நெறிக்கலாம் என்ற அச்சத்திலேயே அதிபர் ஆட்சி நடத்த வேண்டும்.

ஏனெனில் எகிப்தில் இன்றைய தினம் போராடுபவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை மட்டும் நடத்திவிட்டு செல்லக்கூடிய ‘இஸ்லாமியர்கள்’ அல்ல. இவ்வளவு வருடங்களும் அரபு உலகின் ஆளும் வர்க்கமும், அமெரிக்காவும் மதத்தை வைத்து ஏமாற்றி வந்த தந்திரங்கள் இப்போது பலிக்கவில்லை.

எகிப்தில் இன்று போராடுபவர்கள் தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லா பட்டதாரிகள், கல்லூரி படிக்கும் மாணவ – மாணவிகள். மொத்தத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான் எகிப்தில் 90% வாழ்கிறார்கள். இந்த வர்க்க உணர்வைத்தான் எகிப்து மக்களிடம் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்கள் எழுச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

எகிப்திய தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம் அணிதிரண்டு தங்கள் எதிர்கால பயணத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்திருப்பது நிச்சயம் அசாரணமான ஒன்று. இன்று ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம் என்பாதாக இருக்கும் எகிப்தின் போராட்டம் விரைவிலேயே இல்லை தாமதமாகவோ அடிப்படையான சமூக மாற்றத்தை நோக்கி சென்றாலும் செல்லலாம் என்ற உண்மை அமெரிக்காவை பிடித்து ஆட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டோடு கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று இறுமாந்திருந்தவர்களின் இதயம் இப்போதைய எகிப்தின் எழுச்சியால் பதட்டமடைந்திருக்கிறது.

இந்த உண்மையை சற்று தாமதமாக புரிந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. அதன் விளைவாக வெள்ளை மாளிகை முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைபேசிகள் ஓயாமல் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்பு கொண்டபடியே இருக்கின்றன. அந்தந்த நாட்டு அதிபர், மன்னர்களுடன் விடாமல் உரையாடிக் கொண்டிருக்கின்றன. யேமன், துருக்கி, ஜோர்டான், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து மக்கள் எழுச்சி ஏற்படலாம் என்ற அச்சம், அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்தில் காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுப்பதற்கான – தணிப்பதற்கான – நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.

இதன் ஊடாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எகிப்தை ஒட்டி தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துவிட்டன. ஜனநாயகத்துக்கு எதிராக, மக்கள் உணர்வுக்கு முரணாக, சர்வாதிகாரத்துக்கு மறைமுக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள். எகிப்து நிகழ்வுகளை ஏகாதிபத்தியங்கள் அணுகுவதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.



உண்மையில் எகிப்தின் மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) என்று பறைசாற்றத்தான் அமெரிக்கா விரும்பியது. ஜனவரி மாத நடுப்பகுதியில் வட ஆப்பிரிக்க தேசமும், எகிப்துக்கு அருகாமையில் இருக்கும் நாடுமான துனிசியாவில் மக்கள் கிளர்ந்து எழுவதற்கு முன்பே -

எகிப்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம் என்று அமெரிக்கா கணித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே எகிப்தின் நிலை சரியாக இல்லை. ரோமர்களின் காலத்தில் பண்டைய எகிப்து, ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியமாக விளங்கியது. அப்படிப்பட்ட உணவுக் களஞ்சியமாக எகிப்து இன்று இல்லை. உலகமயம், தாராளமயம் என மறுகாலனியாதிக்க கொள்கைகள் எகிப்தை நாசம் செய்துவிட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம், வேலையில்லா பிரச்னை, வருமானக் குறைவு, விலைபோகும் கல்வி என மக்களை வாட்டும் பிரச்னைகளே அரசாங்கத்தின் கருவூலத்தில் இன்று நிரம்பி வழிகின்றன.

அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. எகிப்து மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் மிக மோசமாக உள்ளன என்றும், நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிறது என்றும் அந்த விவரங்கள் முகத்தில் அறைகின்றன. அதாவது 8.5 கோடி மக்கள் வாழும் எகிப்தில் கிட்டத்தட்ட 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். அதேபோல் உலகளவில் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், காவல்நிலையத்தில் நடக்கும் படுகொலைகளும் அதிகமாக நடைபெறும் நாடுகளில் எகிப்தும் ஒன்று.

இதனையொட்டியே இணையதள சமூக வலைத்தளமான ‘ஃபேஸ் புக்’கில் ‘ஏப்ரல் 6 இயக்கம்’ தோன்றியது. எகிப்திலுள்ள El-Mahalla El-Kubra என்ற தொழில் நகரத்தில் உரிமை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2008ல் அகமத் மஹர் என்பவரால் இத்தளம் உருவாக்கப்பட்டது. படித்த, இணையதளம் பயன்படுத்தக் கூடிய எகிப்து இளைஞர்கள் மெல்ல மெல்ல இத்தளத்தில் சேர ஆரம்பித்தார்கள். டிவிட்டர் தளத்திலும் கால் பதித்தார்கள். ப்ளாக் என்னும் வலைத்தளங்களையும் தனித்தனியே உருவாக்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அரசாங்கத்துக்கு எதிரான தளமாக ‘ஏப்ரல் 6 இயக்கம்’ உருவாகியது. எந்தக் கட்சியையும் சார்ந்தவர்களாக இவர்கள் முன்னிறுத்திக் கொள்ளாதது இவர்களின் பலமாயிற்று. எல்லாக் கட்சிகளையும் பார்த்து மக்கள் சலித்திருந்தார்கள் என்பதுதான் இவர்களது கட்சி சார்பற்ற பலத்தின் அடிப்படை. அதே நேரம் இந்த இளைஞர்கள் முபாரக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தாண்டி வேறு காத்திரமான அரசியல், சமூக மாற்றத்தை கோரியவர்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது.

இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, ஃபேஸ் புக்கிலும், வலைத்தளங்களிலும் (ப்ளாக்) துடிப்புடன் இயங்கும் சில இளைஞர்களை தங்கள் செலவில், தங்கள் நாட்டுக்கு அழைத்து இணையதள தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தது. ஹிலாரி கிளிண்டன் போன்றவர்கள் கூட இவர்களுடன் சில மணி நேரங்களை செலவிட்டார். எகிப்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் இச்சந்திப்பின் ஹைலைட்டாக அமைந்தது. அதாவது, கம்யூனிசம் கூறுவது போன்ற அடிப்படை சமுகத்தை மாற்றும் புரட்சி சார்பாக இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. அரசு மாற்றமல்ல; ஆட்சி மாற்றமே தேவை என்பதான கருத்துக்கு அந்த இளைஞர்கள் குழு வந்ததும் – வர வைத்ததும் – எகிப்துக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.


ஹிலரி கிளின்டனுடன் எகிப்திய பிளாகர்கள்


முபாரக்கை ஆதரித்த அமெரிக்கா அவரை மாற்றுவதையும் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதில் பெரிய முரண்பாடு ஏதுமில்லை. முடிந்த வரை முபாரக், அவர் போய்விட்டால் தனக்கு விசுவாசியான அடுத்த நபர் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம் மற்றும் நடைமுறை. இதனால் உலகமெங்கும் உள்ள மக்கள் போராட்டங்களை காயடித்து அதை வெறுமனே ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டும் மாற்றுவதற்கு அமெரிக்கா எப்போதும் முயல்கிறது. இப்படித்தான் எகிப்தின் விவகாரத்திலும் அது தனது மூக்கை நுழைத்தது.

துனிசியாவில் மக்கள் எழுச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிகழ்ந்தது. இதனையடுத்து துனிசிய அதிபர், பென் அலி சவூதி அரேபியாவுக்கு ஓடிப் போனார். இந்த நிகழ்வு படித்த – குறிப்பாக இணையதள பயன்பாடுள்ள – எகிப்து மக்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

காரணம், கடந்த டிசம்பர் மாதம் காலித் சைத் என்னும் எகிப்திய இளைஞன் போலீஸ் வன்முறைக்கு பலியாகி இருந்தான். போலீசாரின் அத்துமீறல் குறித்த வீடியோவை இணையத்தில் அவன் வெளியிட்டதால், காவலர்களால் அவன் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால்தான் மரணமடைந்தான் என போலீஸ் கதைவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த எகிப்து இளைஞர்கள், ஜனவரி 25ம் தேதியை ஆர்ப்பாட்டத்துக்கான நாளாக ‘ஏப்ரல் 6 இயக்க’த்தின் தளமான ‘ஃபேஸ் புக்’கில் அறிவித்தார்கள். ஜனவரி 25ம் தேதியை போலீசுக்கு எதிரான நாளாக அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அன்றுதான் ஆண்டுதோறும் எகிப்தில் ‘போலீஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர, அன்று தேசிய விடுமுறையும் கூட.

எனவேதான் காவலர்களுக்கான நாளில், காவலர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தார்கள். இதற்கு மக்களிடம் பெருமளவு ஆதரவு கிடைத்தது. எதிர்க் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்க முடிவு செய்தன. ஆனால், ‘துனிசிய மாதிரி’யாக இல்லாமல், ஆட்சி மாற்றமாக இது நடைபெற வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப ‘மாற்றீட்டு பாராளுமன்றம்’ என்கிற ‘மக்கள் பாராளுமன்றத்தை’ முன்னிலைப்படுத்தினார்கள். அதாவது எதிர்க் கட்சிகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்கும் விதமாக அந்த அறிக்கை இருந்தது.



உஷாரான அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜனவரி 25 அன்று காவலர்களை எகிப்து முழுக்க, அனைத்து நகரங்களிலும் ஆயுதங்களுடன் நிறுத்தினார். எந்த காவலருக்கும் அன்று விடுமுறை தரப்படவில்லை. விடுமுறையில் இருந்தவர்களும் கட்டாயமாக பணிக்கு அழைக்கப்பட்டார்கள்.

விபரீதத்தை உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக செல்லாதபடியும், ஆட்சிக்கு எதிராக மட்டுமே இருக்கும்படியும் தனது இணையதள விசுவாசிகள் மூலம் பார்த்துக் கொண்டது.

ஒருவேளை மக்கள் எழுச்சி நூறு சதவிகிதம் இருந்தால், ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு நபரை ஆட்சியில் அமர்த்தலாம். அதன் மூலம் எகிப்து மக்களின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தி, மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) ஆக மாற்றலாம் என கணக்குப் போட்டது.

ஆனால், அது தப்புக் கணக்காகிவிட்டது. தனித்தனியாக மக்கள் சிதறி இருக்கும்வரைதான் ஏகாதிபத்தியம் வெற்றி பெறும். அதுவே மக்கள் திரளாக அவர்கள் ஒன்றிணைந்துவிட்டால், எப்படிப்பட்ட சூப்பர் பவர் ஏகாதிபத்தியமும் தவிடு பொடியாகிவிடும்.

இந்த புரட்சிக்கான விதையை நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்ட எகிப்து மக்கள், மீண்டும் அதையே நடைமுறையாக்கினார்கள். நகரம் முழுக்க காவலர்கள் ஆயுதங்களுடன் நிரம்பியிருந்தது அவர்களது கொந்தளிப்பை அதிகரித்தது. தனித்தனியாக இருக்கும்வரைதானே பயம்? ஒன்றாக சேர்ந்து சாலையில் இறங்கினால்…

இறங்கினார்கள். மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.

1977ல் நடந்த ரொட்டி எழுச்சிக்குப் பின், எகிப்தில் பேரணி நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை மக்கள் மீறினார்கள். விளைவு… 30 ஆண்டுகளாக எகிப்து கண்டிராத மக்கள் போராட்டத்தை – எழுச்சியை – அன்றைய தினம் கண்டது.

ஆம், எந்த காவலர்களை பார்த்து இத்தனை ஆண்டுகளாக பயந்து நடுங்கினார்களோ… அதே காவலர்கள் முன்பு தைரியமாக தடையை மீறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள். எந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவும் இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்நாளில் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அவர்கள் கண்ணால் பார்த்ததும் இல்லை; காதால் கேட்டதுமில்லை. அஹ்மத் அஷ்ரப் என்னும் 26 வயது வங்கி ஊழியர், ‘நாங்கள்தான் இப்போது சாலையை கட்டுப்படுத்துகிறோம். காவலர்கள் அல்ல…’ என்று பெருமிதத்துடன் அன்றைய தினம் குறித்து ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

எந்த மத அமைப்பும் அம்மக்களை வழி நடத்தவில்லை. தொழிலாளர்களும், வேலையில்லா பட்டதாரிகளும், அடித்தட்டு உழைக்கும் மக்களும்தான் இந்த எழுச்சியை வழிநடத்தி இருக்கிறார்கள்.

சுதந்திரத்தின் சுவையை மட்டுமல்ல, கூட்டிணைவின் மகிழ்ச்சியையும் அன்றைய தினம் எகிப்து மக்கள் யாரும் கற்றுத் தராமலேயே உணர்ந்தார்கள். காவலர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆங்காங்கே மக்கள் பலியானபோதும் ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நிறுத்தவும் இல்லை. சிதறி ஓடவும் இல்லை.

அலெக்சாந்திரியா நகரில் வயதான பெண்கள், வீட்டு பால்கனியில் நின்றபடி அழுகிய தக்காளிகளையும், கல்லையும் காவலர்கள் மீது வீசினார்கள். இப்படியாக ஜனவரி 25 ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த எகிப்து மக்களின் எழுச்சியாக உருவெடுத்தது.



வரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும் – அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பின் வாங்குகிறது என பதிவு செய்திருக்கிறது. அந்தப் பதிவு மீண்டும் எகிப்து வரலாற்றில் எழுதப்பட்டது.

அன்று மாலை அரசு தொலைக்காட்சி முன்பு தோன்றிய அதிபர் ஹோஸ்னி முபாரக், ஆட்சியிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க துணை அதிபராக ஓமர் சுலைமானை நியமிப்பதாகவும் அறிவித்ததுடன், தனது அமைச்சரவையை கலைப்பதாகவும், விரைவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் உரையாற்றினார். இது மக்களின் கோபத்தை அதிகரிக்கவே வழி வகுத்தது.

இரவு வீடு திரும்பியவர்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள். இது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது.

ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக்… என இணையத்திலுள்ள சகல வலைத்தளங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தை குறித்து விவாதித்தார்கள். 26 பக்க போராட்ட வழிமுறைகள் பிடிஎஃப் ஆக மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்கள். படித்தவர்கள் அதை தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபார்வர்ட் செய்தார்கள்.

அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தூதுவர் உடனடியாக விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இதன் மூலம், எகிப்தை உண்மையில் ஆள்பவர்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமானது. மத்திய கிழக்கு நாடுகளின் தளப் பிரதேசமாக எகிப்தை ‘நிர்வாகம்’ செய்து வரும் அமெரிக்கா, இந்த மக்கள் எழுச்சியால் கவலையடைந்தது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இராணுவ தளவாடங்களை அதிகளவு அமெரிக்கா விற்பது எகிப்துக்குத்தான். அந்நாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய், அமெரிக்காவின் வணிகத்துக்கு தேவை. அத்துடன் இஸ்ரேலினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் காசா பகுதி, சூயஸ் கால்வாயை ஒட்டியே இருக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் எகிப்தை இழக்க அமெரிக்கா தயாராக இல்லை.

அதேபோல் பாலஸ்தீனியர்களை அடக்கவும், அரபு நாடுகளை மிரட்டவும் இஸ்ரேலுக்கு தனது அண்டை நாடான எகிப்தின் துணை தேவை. எனவே எகிப்துடன் ஈருடல் ஓருயிர் என்ற நட்பையே இஸ்ரேல் கடைபிடித்து வருகிறது. இப்போது எகிப்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான், அப்பட்டமான சிஐஏ கைக்கூலி. எகிப்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி. மனித உரிமை மீறலுக்கும் அரசியல் படுகொலைகளுக்கும் காரணமானவர். இஸ்ரேலின் அனைத்து அராஜக – அடாவடித்தனங்களுக்கும் துணை போனவர்.

எனவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தங்கள் கையை விட்டு போகாமல் இருக்க, அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் விசுவாசியும், நீண்ட ஆண்டுகள் நண்பருமான ஹோஸ்னி முபாரக்கை கை கழுவ இப்போது தயாராகிவிட்டன. இதன் மூலம் புரட்சி ஏற்படாமல், வெறும் ஆட்சி மாற்றத்தின் மூலம் மக்களின் கோபத்தை தணிக்கலாம் என முடிவு செய்துவிட்டன. அமெரிக்க – இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊடகங்களுக்கு தரும் பேட்டியை நாள்தோறும் உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அதன் பலனாக இப்போது எகிப்தின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவருமான எல்பரதேய் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இவர், துனிசிய புரட்சி நடந்த ஈரம் காய்வதற்குள் ‘கார்டியன்’ இதழுக்கு, ‘எகிப்தும் ஒரு துனிசிய வகையிலான வெடிப்பை எதிர்நோக்கியிருக்கிறது’ என்று எச்சரித்தவர்தான். கூடவே ‘துனிசிய முன்மாதிரி போல் அல்லாமல், ஒழுங்கான முறையில் மாற்றம் வரும் என்று, தான் நம்புவதாகவும், இருக்கும் முறையில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையான வழிவகைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும்’ குறிப்பிட்டு, மக்கள் புரட்சியில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அமெரிக்காவுக்கு தான் விசுவாசமானவன்தான் என்பதையும் அறிவித்தவர்தான்.

இதுபோன்ற எடுபிடிக்காகவே காத்திருந்த அமெரிக்கா, எல்பரதேய்யை எகிப்துக்கு அனுப்பியது. நடக்கப் போவதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட ஹோஸ்னி முபாரக், உடனே அவரை வீட்டுக் காவலில் வைத்தார்.



இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை (28.01.2011) விடிந்தது. அன்றைய தொழுகை முடிந்ததும் அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி மக்கள், சாலையில் இறங்கி ஊர்வலம் போக ஆரம்பித்தார்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டார்கள். நகரங்களில் இருந்த ஆளுங்கட்சி அலுவலகம் தீக்கரையானது. அரசியல் கைதிகள், சிறைச்சாலையை கைப்பற்றி வெளியே வந்தார்கள்.

அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. குற்றவாளிகளை விடுதலை செய்து, மக்களின் உடமைகளை திருடச் சொன்னது. சீருடை அணிந்த காவலர்களில் சிலரும் இந்த வழிப்பறியில் – கொள்ளையில் இறங்கினார்கள். மக்கள் அவர்களை கைது செய்தார்கள். தங்களுக்குள்ளாகவே குழுவை அமைத்து தங்கள் உடமைகளை கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள்.

ஜனவரி 31ம் தேதி முடிய பொது மக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 150 பேர் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது அறிவிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. பலியானோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கக் கூடும். என்றாலும், இந்த எண்ணிக்கை எந்தவிதத்திலும் எகிப்து மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவில்லை. பலியானோரின் சடலத்தையே, உணர்வெழுச்சிக்கான ஆயுதமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். காயமடைந்தோரும், ரத்தம் வழிய வழிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நாள்தோறும் அலைகடலென திரண்டு வரும் மக்களை கட்டுப்படுத்த வழியின்றி பாதுகாப்புப் படை திகைத்து நிற்கிறது.

நேர்மையான பல காவலர்கள் மக்களுடன் இணைந்து இப்போது போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டிய இராணுவ வீரர்கள், அமைதி காக்கிறார்கள். மக்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக இராணுவம் அறிவித்திருப்பது முபாரக்குக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் பிரச்சினைக்குரிய ஒன்று.

ஆனால், முன்னாள் விமானப்படை அதிகாரியான ஹோஸ்னி முபாரக்கால் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தரைப்படை அமைதிகாத்தால் என்ன… விமானப்படையை அனுப்புகிறேன்… மக்கள் பயத்துடன் கலைந்து செல்வார்கள் என போர் விமானங்களை நகரங்களின் மீது பறக்க விட்டிருக்கிறார். முதலில் அதிர்ந்த மக்கள், பிறகு இந்த போர் விமானங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘முதலில் நாங்கள் பயந்தோம். ஆனால், இப்போது இசையை ரசிப்பது போல் போர் விமானங்களின் ஒலியை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்’ என்கிறார்கள்!

அரசின் சமூக – அரசியல் – ஆட்சி இயக்கமே இராணுவத்தின் பாதுகாப்பில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த அச்சு இன்று எகிப்தில் மாறியிருக்கிறது. இராணுவ தளவாடங்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் தயாரானதாக இருக்கலாம். ஆனால், இராணுவ வீரர்கள் எகிப்தின் அடித்தட்டு, நடுத்தர மக்கள்தானே? எகிப்தின் மக்கள் எழுச்சியால் ஈர்க்கப்பட்ட இராணுவ வீரர்கள் – இதுநாள் வரை அரசின் துருப்பாக இருந்தவர்கள் – வர்க்க அடிப்படையில் மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மக்களுடன் இராணுவம் தொடர்பு கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு புரட்சி வலிமை பெறும் என்பது விதி. அந்த விதி, எகிப்தில் இப்போது மையம் கொண்டிருக்கிறது. கிடைத்த உணவை மக்களுடன் இணைந்து இராணுவ வீரர்களும், காவலர்களும் பகிர்ந்து உண்ணும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

இதோ வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த எல்பரதேய், ஏதோ தான்தான் இந்த மக்கள் எழுச்சியை வழிநடத்துவது போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எகிப்து மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், பலருக்கு இவர் யார் என்றே தெரியவில்!



எகிப்தின் இன்றைய மக்கள் எழுச்சியை யாரும், எந்தக் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. எனவே மக்கள் மெல்ல சோர்வடைந்து பின்வாங்கி விடுவார்கள் என்று நம்பிய ஹோஸ்னி முபாரக், இப்போது மூக்குடைந்திருக்கிறார். நாள்தோறும் முந்தைய நாளின் தீவிரத்தை விட அதிக வலிமையுடன் அனைத்து நகர தெருக்களிலும் மக்கள் இறங்கி போராடுகிறார்கள். தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹீர் சதுக்கத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தனைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தொடர் போராட்டத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் சமைக்க பொருட்களில்லை. உணவு விடுதிகள் திறக்கப்படவேயில்லை. ஆயினும் கிடைத்ததை பகிர்ந்துக் கொண்டு சோர்வடையாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

இராணுவம் தன்னை கைவிட்ட நிலையில், இப்போது ஹோஸ்னி முபாரக், தனது ஆதரவாளர்களை போராடும் மக்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நிறுத்தியிருக்கிறார். உண்மையில் இந்த ஆதரவாளர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் காவலர்கள்தான். முபாரக்கின் விசுவாசிகள்தான். சிவிலியன் உடையில் சாலையில் நடமாடும் இந்த அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும், மக்கள் திரளுக்கும் இடையில் பிப்ரவரி மாத தொடக்கம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் பலர் காயமுற்றனர். சிலர் பலியாகினர். அருகிலுள்ள மசூதியை மருத்துவமனையாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எகிப்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புரட்சியை உயர்த்திப் பிடித்திருக்கும் மக்கள் திரளுக்கும் – எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் மோதலும் உயிர்ச்சேதமும் இனிவரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். ஆனால், அதிபரின் இந்தச் செயலே மக்கள் புரட்சியை மேலும் செழுமைப்படுத்தும். அரசின் குண்டாந்தடிகள்தானே புரட்சியை வலிமையாக்குகின்றன?

1905ல், ரஷ்யாவில் புரட்சி நடந்ததும் அப்போது மன்னராக இருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ், அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு என்னவெல்லாம் தேனொழுக மக்களிடம் பேசினாரோ அதையே இப்போது ஹோஸ்னி முபாரக் எதிரொலிக்கிறார். ‘இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துவேன். என்னை நம்புங்கள்…’ என்ற அதிபரின் இரண்டாவது உரையும் உழைக்கும் மக்களை சமாதானப்படுத்தவில்லை. மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தை ஓரளவு அதிபரின் இந்த இரண்டாவது உரை ஊசலாட வைத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும் நடுத்தர வர்க்கம் இன்னமும் களத்திலிருந்து பின்வாங்கவில்லை.

மாக்கியவெல்லி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ‘மக்களிடம் அன்பை பொழிவது அரசாங்கத்தின் வேலையல்ல. பயத்தை உண்டாக்குவதே எந்தவொரு அரசாங்கம் நிலவவும் அடிப்படை…’ என்று. இதுநாள்வரை ஹோஸ்னி முபாரக்கும் பயம் காட்டித்தான் வந்தார். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அவரை பயமுறுத்தி வருகிறார்கள்!

‘மன்னிக்கவும் முபாரக். உன்னை நாங்கள் நம்பவில்லை. உடனே அதிபர் பதவியை விட்டு விலகு. உனக்காக விமானம் காத்திருக்கிறது…’ என ஒரே குரலில் கோஷமிடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமெரிக்க இராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. ஹோஸ்னி முபாரக், பதவி விலகி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைய வேண்டியதுதான் பாக்கி. அடுத்த நொடியே எகிப்தை தன் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துவிடும். ஏனெனில் அரசு மாற்றத்தை அது விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே அது விரும்புகிறது. அதனாலேயே எல்பரதேய்யை ஆதரிக்கிறது. அதேநேரம் இப்போது துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் முபாரக்குக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இன்னொரு நாசர், இன்னொரு கோமேனி அரபு நாடுகளில் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

என்ன சவூதி அரேபியாவில் ஹோஸ்னி முபாரக் தஞ்சமடைந்தால், துனிசிய முன்னாள் அதிபர் பென் அலியுடன் தேநீர் அருந்தியபடி ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துக் கொண்டு மாலைப் பொழுதை கழிக்கலாம். இல்லாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை. எஞ்சிய வாழ்நாளை மனமுவந்து அவர் கழிக்கும்படி அமெரிக்கா ஏற்பாடு செய்து தந்துவிடும்.

ஆனால், எகிப்து?

இந்தக் கேள்விதான் உலகம் முழுக்க தொக்கி நிற்கிறது. முக்கியமாக ‘இஸ்லாம் சகோதரத்துவ கட்சி’ இன்னமும் செல்வாக்குடன் எகிப்தில் இருக்கிறது. எல்பரதேய் போலவே இக்கட்சியும் ‘துனிசிய மாதிரி’ புரட்சியை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. எகிப்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஹோஸ்னி முபாரக்தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஜனவரி 25 அன்று ஆரம்பித்து இன்று வரை தொடரும் மக்கள் எழுச்சியில் – புரட்சியில் – அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எதிரொலிக்கவேயில்லை. ஆளுங் கட்சி அலுவலகத்தை தீக்கரையாக்கிய மக்கள், அமெரிக்க தூதரகத்துக்கு ஒரு சின்ன கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை. சிறந்த அதிபர் என உலக வங்கி ஹோஸ்னி முபாரக்குக்கு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது. அந்தளவுக்கு மறுகாலனியாதிக்க கொள்கைகளை முழு மூச்சுடன் அவர் எகிப்தில் அமல்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேலையில்லா திண்டாட்டமும், தொழிலாளர்களின் வேலை பறிப்பும், ஏழ்மையும், உயர் கல்வி கட்டண உயர்வும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் நிகழ்ந்தன.

ஹோஸ்னி முபாரக் போய் எல்பரதேய் அல்லது வேறு யார் அதிபரானாலும் இதேநிலைதான் தொடரும். பஞ்சமும் பசியும் ஒழிய வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தீர்வாகாது. நிலவும் அரசமைப்பு மாற வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு புரட்சிகர கம்யூனிச கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.

திரள்வார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதானே மக்கள் திரளின் வலிமையை, இராணுவத்தை எதிர்க்கும் பலத்தை, வர்க்க உணர்வின் எழுச்சியை, ஒவ்வொரு எகிப்தியனும் உணர்ந்திருக்கிறான்? இந்த உணர்வு நிச்சயம் அரசமைப்பு மாற்றத்துக்கு வருங்காலத்தில் வழிவகுக்கும். இன்று கருநிலையில் இருக்கும் புரட்சி நாளை செயல் வடிவம் பெறும்.

சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த நாசர் ஆண்ட மண்ணல்லவா எகிப்து? ஸ்டாலினை நேசித்த நாசர் பிறந்த பூமி, இன்று ஒவ்வொருவரையும் புரட்சியாளனாக உருவாக்கியிருக்கிறது.

நேற்று துனிசியா. இன்று எகிப்து. நாளை? அல்ஜீரியா, யேமன், ஜோர்டான் என அடுத்தடுத்து பல நாடுகள், நாட்டு மக்கள், எழுச்சிக்காக – புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். துனிசிய நடைமுறை எகிப்தின் வர்க்க அணி சேர்க்கைக்கு வழிவகுத்தது. எகிப்தின் நடைமுறை நாளை பிற நாடுகளில் நடைபெறப் போகும் மக்கள் எழுச்சியில் எதிரொலிக்கப் போகிறது.

முதல் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியங்கள், ஒன்றுபட்ட அரபு நாடுகளை துண்டாடி, பெயரளவுக்கு சுதந்திரம் கொடுத்து தங்களுக்குள் பங்கீடு செய்து கொண்டன. அதற்கு தோதாக சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும் ஆட்சியில் அமர்த்தி பாதுகாத்தன. அதன்மூலம் தங்களுக்கான சுரண்டல் காலனியாக மாற்றின. மறுகாலனியாதிக்கத்தை அறிமுகப்படுத்தி நாட்டின் வளத்தை உறிஞ்சின. ஏகாதிபத்தியங்கள் செய்த அந்தப் பங்கீட்டை – மறுகாலனியாதிக்கத்தை – இப்போது மக்கள் ஒன்றுதிரண்டு புரட்சிக்கான கருநிலையில் மறுவார்ப்பு செய்து வருகிறார்கள்.

‘நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக் காட்டியுள்ளபடி, அரபு நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தலைமைக்காக மீண்டும் எகிப்தையே இன்று எதிர்நோக்கியிருக்கின்றன.

மக்கள் திரளின் மீது நம்பிக்கைக் கொண்டு சோர்ந்து போகாமல் தீரமுடன் களத்தில் நிற்கும் ஒவ்வொரு எகிப்தியனுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.

_______________________________________________

- அறிவுச்செல்வன்

http://www.vinavu.co...11/02/07/egypt/

Thanks
http://www.yarl.com/forum3/index.php?showtopic=81589
read more...
அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!SocialTwist Tell-a-Friend

தட்கல் டிக்கெட்டுக்கு புகைப்பட சான்று அவசியம்: 11-ம் தேதி முதல் அமல்

0 comments
டெல்லி: தட்கல் முறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க இனி தட்கல் டிக்கெட்டில் பயணிப்பவர்கள் புகைப்பட அடையாளச் சன்றுடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் 11- ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் கீழ் வரும் அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் அசலை பயணத்தின்பபோது காட்ட வேண்டும். அடையாள அட்டையை காட்டத் தவறினால், அவர்கள் டிக்கெட் எடுக்காத பயணிகளாக கருதப்பட்டு அதற்குரிய அபராதம் செலுத்த வேண்டும்.

1. வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. வருமான வரித் துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண் (பேன் கார்டு)
4. ஓட்டுனர் உரிமம்
5. மத்திய/மாநில அரசுகள் வழங்கும் புகைப்பட அடையாள அட்டை
6. பள்ளி/கல்லூரிகளால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை
7. புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புக்
8. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கடன் அட்டைகள்

தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் மொத்தமாக வாங்கிவிடுவதால் தேவைப்படும்போது பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதைத் தடுக்கத் தான் இந்த நடவடிக்கை .

அதேசமயம், தட்கல் டிக்கெட் எடுக்கையில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியதில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

thaks to http://thatstamil.oneindia.in/news/2011/02/01/id-card-required-tatkal-ticket-aid0091.html
read more...
தட்கல் டிக்கெட்டுக்கு புகைப்பட சான்று அவசியம்: 11-ம் தேதி முதல் அமல்SocialTwist Tell-a-Friend