இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!

0 comments

நமது இரத்தத்தில் இரண்டு வகையான கொழுப்பு புரதங்கள் காணப்படுகின்றன.1.உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (HDL Colestral)2.தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (LDL Colestral)இதில் தாழ் அடர்த்தி லிப்போ லிப்போ புரோட்டீன் (LDL Colestral) அதிகரிக்கும் போது அவை இரத்த நாளங்களில் படிந்து இதய நோய் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.ஆனால் உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral)தேவையற்ற கொழுப்பை இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்திற்கு உகந்த உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் (HDL Colestral) மீன்களில் செழுமையாகக் காணப்படுகிறது.எனவே நமது அன்றாட உணவு வகைகளில் மீன்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா – 3 (OMEGA-3) எனப்படும் கொழுப்புப் பொருள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.சருமநோய் வராமல் தடுக்கிறது.முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு (Cardiac Arrest) வராமல் காக்கிறது.அப்ப எல்லோரும் நல்லா மீன் சாப்பிடுங்க!பின் குறிப்பு:மீனை எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.
read more...
இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!SocialTwist Tell-a-Friend

இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களே

0 comments

பழைய செய்தி தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள் {http://thevarnews.blogspot.com/2009/09/blog-post_25.html}
புதிய செய்தி ........
தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உ ண்மை

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.
(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)
உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.
நன்றி http://thirutamil.blogspot.com/2009/09/blog-post_30.html
read more...
இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களேSocialTwist Tell-a-Friend

இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்

0 comments

இலங்கையில் சமாதானம் வரவேண்டும் என நோர்வே அரசு பாடுபட்ட காலம் கடந்து, இப்போது இலங்கையின் நிலையான சொத்துக்கள் மீது முதலிடுவதற்காக கொழும்பை நோக்கி படையெடுகும் நிலைக்கு பல நிறுவனங்கள் வந்துள்ளன. இவற்றுள் முக்கியமாக L&T, Omaxe மற்றும் புரவங்கர திட்டங்கள் என்பன இலங்கையில் ஷொப்பிங் கொம்பிளக்ஸ், வீட்டுத் திட்டங்கள் மற்றும் பலவற்றில் முதலீடிட திட்டமிடுகின்றன. இலங்கையிலிருந்து புடில்லி வந்த தூதுக்குழுவினர் சுதந்திரமான சட்டதிட்டங்களுடன் தமது வியாபாரத்தை நடத்த இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் Omaxe மற்றும் பிற நிறுவன அதிகாரிகளுடன் சந்தித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளைக் கவருவதற்காக 20 மில்லியன் டொலர்கள் செலவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளிக்காக அமைக்கப்படவுள்ள நாட்டு மாளிகைகள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளவர்களையே குறிவைத்துள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீடுகளை எதிர்பார்த்திருக்கும் இலங்கை 2010 இற்கிடையில் 2 பில்லியன் டொலர்கள் முதலீட்டை இலக்காக வைத்துள்ளது. கொழும்பில் 51 மாடிகள் கொண்ட 15 லட்சம் சதுர அடியில் அமையும் வர்த்தக பூங்காவை அமைப்பதற்கான வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட L&T கிட்டத்தட்ட 150 மில்லியன் டொலர்களை முதலிட உள்லமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டடமே இலங்கையில் அதியுயர் கட்டடமாக வரவுள்ளது.ரியல் எஸ்டேட் துறையினரை இலங்கைக்கு அழைக்க உள்ள அரசு அவர்களின் முதலீட்டுக்கு கால் எல்லை எதனையும் விதிக்கவில்லை. அவர்கள் தாம் நினைத்த நேரத்தில் இலங்கையில் முதலிட்ட பணத்தை மீள எடுத்துச் செல்லலாம் எனக் கூறியுள்ளது. எனினும் அண்மைய பொருளாதார மந்தத்தால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள் மிகவும் விழிப்பாக உள்ளன.
read more...
இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்SocialTwist Tell-a-Friend

நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை

0 comments
ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை [அறுநூற்று தொண்ணூறு கோடி ரூபைகள் ]பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களாக உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது.
நன்றி http://parantan.com/pranthannews/worldnews.htm



read more...
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளைSocialTwist Tell-a-Friend

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்

0 comments

ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில்,
இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும். 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வுகளின்படி,
இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.
வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.
ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.
இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.
அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர்.இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.
ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி...1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது.
comment :------ this is just funny thing ...who dont know about the kumari continent...
read more...
தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்SocialTwist Tell-a-Friend

"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழா

0 comments

19.09.2009 சென்னையில் நடைப்பெற்ற அகில உலக தேவர் கூட்டமைப்பின்
"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழா சிறப்பாக நடைப்பெற்றது. நண்பரே இதனை விழா என்று சொல்லுவதை ஒரு மாபெரும் திருவிழா என்றே கூரலம். முகம் பார்த்து முகவரி அறியாமல் கூடிய ஒரு உணர்வுபுர்வமான அன்பு நிறைந்த நண்பர்கள் உதட்டு புன்னகை மட்டும் அல்லாமல் உள்ளபுர்வமான அன்பினை வெளிப்படுத்திய உண்மையான கூட்டம். நான் விரும்பிய முதல் கூட்டம் நம்மை விரும்பும் நண்பர்கள்..
read more...
"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழாSocialTwist Tell-a-Friend

YOU TUBE OFFICE PHOTO

0 comments
read more...
YOU TUBE OFFICE PHOTOSocialTwist Tell-a-Friend

தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !

2 comments


தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்க கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது
தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தென் மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்மாநில இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மாநிலங்களை பிரிப்பது தொடர்பாக 15 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், தென்தமிழகம் பிரிய வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் நிர்வாகத்தால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே துவங்கப்படுகின்றன.கடந்த சட்டசபை தேர்தலின் போது எடுக்கப் பட்ட வாக்காளர் கணக்கெடுப்பில் தென்மாவட்ட ஓட்டு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தனி மாநிலம் கிடைக்கும் பட்சத்தில் தான் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். தெற்கும் வாழவேண்டும் என்பதற்காக தான் இந்த இயக்கத்தை துவங்கி உள்ளோம். தென்தமிழகம் பிரிக்கக்கோரி, 25 விதமான போராட்டங்களை இந்த அமைப்பு சார்பில் நடத்த உள்ளோம் என்றார்.

thanks to http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3210-drsethuraman-then-tamilnadu
read more...
தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !SocialTwist Tell-a-Friend

புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகம் இந்து அமைப்புக்களால் முற்றுகை!

0 comments
ஈழத்தமிழர்களை சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதைக் கண்டித்து, புதுடில்லியில் அமைந்துள்ள அதன் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளன.
காவிக் கொடிகள் சகிதம் இன்று காலை (21.09.2009) புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரத்தை முற்றுகையிட்ட இருபத்திரண்டு இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு குவிந்த புதுடில்லி காவல்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துரைத்திருக்கும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த நாற்பது ஆண்டுகளில் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்திருக்கும் சிறீலங்கா அரசு, தற்பொழுது அவர்களை ஏதிலிகளாக்கி மேலும் கொடுமைப்படுத்துவதாகக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.அத்துடன், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபடுகின்ற பொழுதும், இதனைப் பொருட்படுத்தாது அதற்குத் துணைபோகும் செயற்பாடுகளிலேயே இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாகவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
thanks to http://www.pathivu.com/news/3550/54/.aspx
read more...
புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகம் இந்து அமைப்புக்களால் முற்றுகை!SocialTwist Tell-a-Friend

காலம் உருவாக்கிய உலகம் ---வீடியோ

0 comments
Time - ஆம். காலம்தான் உலகை உருவாக்கியது என்கிறார்கள்

இந்த காணொளியைத் தயாரித்தவர்கள்! உள்ளே சென்று பார்த்தால் எவளவு நிதர்சனம் என்பதுப் புரியும். நாம் தற்போது உட்கார்ந்து கணினியை இயக்கிக்கொண்டிருக்கும் இடம், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? எகிப்தில் உள்ள மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஸ்பிங்ஸ் எனப்படும் பிரம்மாண்டமான சிலை மனிதனால் மட்டும் படைக்கப்பட்டதா? Grand Canyon என்றழைக்கப்படும் பள்ளத்தாக்கு எப்படி உருவானது? அதை எல்லாம் விடுங்கள், நமது இந்தியா, உலக வரைபடத்தில் தற்போதுள்ள நிலை எவ்வாறு ஏற்பட்டது? எவரஸ்ட் சிகரம் எப்படி அவ்வளவு உயரமானது? சகாராப் பாலைவனத்தில் மான்களும், மீன்களும், முதலைகளும் ஒருக்காலத்தில் விளையாடியதா? இத்தனைக் கேள்விகளுக்கும் கீழுள்ள காணொளிகள் விடைத் தரும்.

அருமையான விவரங்கள் கொண்ட வீடியோ. பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களையும் வோட்டுகளையும் அளியுங்கள்.









read more...
காலம் உருவாக்கிய உலகம் ---வீடியோSocialTwist Tell-a-Friend

தமிழ் நாடு முதல்வர் மு .கருணாநிதி அவர்களின் குடும்பம் -ஒரு பார்வை

0 comments



read more...
தமிழ் நாடு முதல்வர் மு .கருணாநிதி அவர்களின் குடும்பம் -ஒரு பார்வைSocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்

0 comments
வன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார். அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

read more...
முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்SocialTwist Tell-a-Friend

விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?

0 comments

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

READ MORE...

read more...
விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?SocialTwist Tell-a-Friend

இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்

0 comments
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள் என இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவர் 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' எனும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார்.

நான்காவது ஈழப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை விளக்கி இருந்தார். வலிந்த தாக்குதலுக்கான ஆயுதங்களை சிறிலங்காவுக்கு தரமாட்டோம் என புதுடில்லி வெளிப்படையாகத் தெரிவித்து வந்தபோதும்

அத்தகைய ஆயுத தளபாடங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டன என அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'ரெடிஃப்' ஆங்கில இணையத்தளத்துக்காக ஊடகவியலாளர் பி.கிருஷ்ணகுமார் கண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

பிரபாகரன் எப்படி முடிவை எட்டினார் என மிகச் சரியாகச் சொல்ல முடியுமா?

READ MORE...


THANKS TO http://www.puthinam.com/full.php?2b34OOo4b34U6D734dabVoQea03Y4AAc4d3cSmA3e0dU0Mt1ce03f1eC2ccdecYm0e
read more...
இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்SocialTwist Tell-a-Friend

ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தி--எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன்

0 comments
இல‌ங்கை‌யி‌லத‌மி‌ழீழ‌ர்களு‌க்கஎ‌திராதா‌க்குத‌லி‌லம‌க்க‌ளி‌னபடுகொலைகளையு‌ம், த‌மி‌ழம‌க்க‌ளஅனுப‌வி‌த்இ‌ன்ன‌ல்களையு‌மஓ‌வியமாக வரைந்ஓ‌விய‌ரபுகழே‌ந்‌தியஅவரதஇ‌ல்ல‌த்‌தி‌லசெ‌ன்றச‌ந்‌தி‌‌த்தோ‌‌ம். இ‌னி அவருட‌ன்..

தமிழ்.வெப்துனியா.காம்: ‘உயிர் உறைந்த நிறங்கள்’ என்ற உங்களுடைய ஓவியக் கண்காட்சி எல்லா இடத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஈழப் பிரச்சனை தொடர்பாக, அங்கு நடந்து முடிந்த படுகொலை, ஈழத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் சேர்த்து ஒரு மிகப்பெரிய ஓவியப் படைப்பை வெளியிட்டு அதன் மூலம் அந்த மக்களினுடைய உணர்வை, இன்னும் சொல்லப் போனால் அந்த மக்களினுடைய துயரத்தை மிகப்பெரிய அளவிற்கு நீங்கள் வெளிக் கொண்டு வந்தீர்கள். இப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது அவர்களின் துயரமா? இல்லை அதையும் தாண்டி வேறு எதுவுமா?

READ MORE...

read more...
ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தி--எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன்SocialTwist Tell-a-Friend