ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல்

0 comments


நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும்.
ஆனாலும் அபெக் எனப்படுகிற ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு காலநிலை மாற்றம் தொடர்பில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவுக்கு வந்திருக்கிறது.
20 நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றிய ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவுகளிலிருந்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் டென்மார்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தையொட்டியதாக இம்மாநாட்டில் காலநிலை மாற்ற உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2050 ஆம் ஆண்டுக்குள் பச்சை இல்ல வாயுக்களை குறைப்பது தொடர்பான இலக்கு சம்பந்தமாக உடன்படிக்கையொன்றை உருவாக்குதல் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவே அறியமுடிகிறது.
ஆனாலும் இது தொடர்பான முடிவினை 2010 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெறவுள்ள உலகளாவிய வாணிப பேச்சுவார்த்தைகளின் போது காணலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவில் பெரியளவில் முக்கியப்படுத்திச் சொல்லக் கூடிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையாயினும் உலக காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரியதாகவே கொள்ளப்படுகிறது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் அபிவிருத்தியடை ந்த நாடுகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இப்போதைய நிலையில் கடுமையானதொரு பிரச்சினையாகவேயுள்ளது.
பச்சை இல்ல வாயுக்களை 50 சதவீதத்தால் குறைப்பது தொடர்பான இலக்கு உலகளாவிய சமூகங்களைப் பொறுத்தவரை மிகவும் தேவையான ஒன்றாக இருக்கையில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக அது இருப்பதானது உலகில் ஏற்படப்போகும் வீணான தொல்லைகளுக்கு ஏதுவானதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை மையப்படுத்தி வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதற்கு ஆசியா பசுபிக் மாநாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமõ மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.
ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவ் மற்றும் ஒபாமா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் அடுத்து ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்திருந்த நாங்கள் எதிர்வரும் டிசெம்பரில் ஆயுத உடன்படிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்ற கருத்து மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் உள்ள தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி காலாவதியாகிறது. இதற்குப் பதிலாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் முகமாக மேற்படி இரு உலகத் தலைவர்களும் ஏற்கனவே பேச்சு நடத்தியிருக்கின்றனர். இருந்த போதும் அபெக் உச்சிமாநாட்டையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற வேளை பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் உறுதிமொழி அசைக்க முடியாதது என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ஆசியாவில் பாரிய பொருளாதாரமாக வளர்ந்துவரும் சீனாவுடன் நடைமுறை சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்புக் கொள்கையை அமெரிக்கா தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
பசுபிக்கிலுள்ள தமது அயல் நாடுகளை விட கிழக்கு ஆசிய நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வருகின்ற போதும் அமெரிக்கச் சந்தையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இந்நாடுகள் ஒபாமாவிடமிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கான சமிக்ஞைகளை எதிர்பார்த்திருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு விடுத்த அழைப்பிற்கு சீனத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
இதில் காலநிலை மாற்றம் தொடர்பில் அடுத்த மாதம் கொபன்ஹேகனில் நடைபெறவுள்ள மாநாட்டில் விரிவான உலகளாவிய உடன்படிக்கையொன்று எட்டப்படவேண்டியமை, வடகொரியாவின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் வடகொரியாவை மீண்டும் பங்குபற்ற வைப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பது போன்றன முக்கியப்பட்டிருக்கின்றன.ஒபாமாவுக்கும் சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோவுக்கும் இடையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மண்டபத்தில் இருமணிநேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உலக அரங்கில் சீனா தற்போது முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றனது. ஆனாலும் ஜப்பானுக்கு எதிரியான நாடாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றம் தொடக்கம் அணுவாயுதப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி வரை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய சவால்களுக்கான தீர்வை ஒரு நாட்டினால் மட்டும் எட்டமுடியாது என்ற உண்மை மாத்திரம் உண்மை என்ற நிலையில் அமெரிக்கா முக்கியப்படுத்தப்படுகின்ற நாடான சீனாவையும் இதில் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறது என்பதே முக்கியமானது.
இதே வேளை விடாப்பிடியாக இருக்கும் சீனாவின் திபெத் விவகாரத்தினைப்பற்றியும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதும் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள ஹூ ஜிந்தாவோ சமத்துவம், பரஸ்பரம், மரியாதை மற்றும் மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமென தெரிவித்திருக்கிறார்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ரீதியற்ற உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதே நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற போதும் அரசியல் மயப்படாத எந்தச் செயற்பாடும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
ஆசியப் பசுபிக் பிராந்திய பொருளாதார மாநாட்டிற்கு வந்த ஒபாமõ சீனாவுக்குச் செல்லவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

தேங்க்ஸ் TO http://tharakai.wordpress.com/2009/11/20/ஆசிய-பசுபிக்-பொருளாதார-à®®/

read more...
ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல்SocialTwist Tell-a-Friend

கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் விஞ்ஞானிகள் சோதனை

0 comments

சென்னை, நடுக்கடலில் நிற்கும் கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள், கடலோர காவல் படையினர் கப்பலை ஆய்வு செய்து வருகின்றனர். விசாகப்பட்டினம் வைஷாக் துறைமுகத்தில் இருந்து கிரானைட் கற்களுடன் ஒரு சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்தது. கப்பலை நிறுத்துவதற்கு பிளாட்பாரம் கிடைக்காததால் துறைமுகத்தில் இருந்து 1.6 நாட்டிகல் மைல் (3 கி.மீ) கடலில் கடந்த 2 நாட்களாக அந்த கப்பல் இருக்கிறது. இந்நிலையில் அந்த கப்பலில் கதிர் வீச்சு (ரேடியேஷன்) பொருட்கள் இருப்பதாக துறைமுக உயர் அதிகரிகளுக்கு தகவல் வந்தது. துறைமுக அதிகாரிகள் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து விஞ்ஞானிகள் இன்று காலை சென்னை துறைமுகம் வந்தனர். அதிகாரிகளுடன் கலந்து பேசி கப்பலை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அதன்பின் விஞ்ஞானிகள், கப்பல் படையினர், கடலோர காவல்படையினர் போன்ற அதிகாரிகளுடன் சேர்ந்து கப்பலை ஆய்வு செய்வதற்காக மற்றொரு கப்பல் மூலம் நடுகடலுக்கு சென்றனர். கப்பலை ஆய்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.
read more...
கப்பலில் கதிர் வீச்சு பொருட்கள் விஞ்ஞானிகள் சோதனைSocialTwist Tell-a-Friend

சென்னையில் பலத்த மழை; 24 மணி நேரம் நீடிக்கும்

0 comments
வங்கக்கடலில் கன்னியாகுமரிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதன் காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

நேற்று பகலில் ஓரளவு வெயில் இருந்த நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டியது,மீண்டும் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகளில் போக்குவரத்து ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

thanks to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0911/15/1091115005_1.htm
read more...
சென்னையில் பலத்த மழை; 24 மணி நேரம் நீடிக்கும்SocialTwist Tell-a-Friend
0 comments
டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு



அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.
இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.
இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.
ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறியhttp://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.
ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது

thanks to http://today-world-news-update.blogspot.com/2009/11/blog-post_14.html
read more...
SocialTwist Tell-a-Friend

4 ஆஸ்திரேலிய கல்லூரிகள் திடீர் மூடல் - இந்திய மாணவர்கள் பாதிப்பு

0 comments
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும் கல்லூரிகள் இவை. இக்கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்களிடம் உங்களுக்கு இனிமேல் வேலை இல்லை என்று கூறி கல்லூரிகளை மூடி விட்டனர். ஆனால் மாணவர்களிடமோ கல்லூரிகளை மூடி விட்ட தகவலைக் கூட கல்லூரி நிர்வாகம் அறிவிக்கவில்லை.கல்லூரிகளுக்கு வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் , அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபடி கூடியிருந்தனர்.மெல்போர்னைச் சேர்ந்த மாணவி ஜாஸ் சந்து கூறுகையில், கல்லூரியை மூடியது குறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் எங்களில் பலர் இறுதியாண்டுத் தேர்வை முடித்து பட்டத்தை வாங்கவிருந்தனர்.நாங்கள் நன்றாகப் படித்து வந்தோம். கட்டணங்களையும் முறையாக கட்டி வந்தோம். யாரும் எந்த கட்டணப் பாக்கியும் வைத்திருக்கவில்லை. இப்போது கல்லூரிகளை ஏன் மூடினார்கள் என்று தெரியவில்லை. எங்களது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரங்களில் இந்த கல்லூரிகளுக்கு 13 வளாகங்கள் உள்ளன.

thanks:http://thatstamil.oneindia.in/news/2009/11/07/world-4-australian-colleges-shut-shop.html
read more...
4 ஆஸ்திரேலிய கல்லூரிகள் திடீர் மூடல் - இந்திய மாணவர்கள் பாதிப்புSocialTwist Tell-a-Friend