பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

0 comments
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 400 கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன்படி புதிதாக 831 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்த்தப்பட்டது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே என்பதால் பல்வேறு தரப்பினரும் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்வு தேதி அறிவிப்பு:

தேர்வு தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் (இரண்டுமே பத்தாம் வகுப்பு தரம்).

இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to http://thatstamil.oneindia.in/news/2010/12/17/tnpsc-announced-vao-examination-date.html
read more...
பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்புSocialTwist Tell-a-Friend

மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?

0 comments
தி. நந்தகுமார்First Published : 10 Dec 2010 12:18:00 AM IST

கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'.
மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப் பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?
read more...
மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?SocialTwist Tell-a-Friend

தடையா‌ல் மண‌ல் ‌விலை உயராது: ந‌ல்லக‌ண்ணு

0 comments
செ‌ன்னை: தா‌‌மிரபர‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ல்ல உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை அம‌ல்படு‌த்த து‌ரித நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய க‌ட்டு‌ப்பா‌ட்டு குழு‌த் தலைவ‌ர் ந‌ல்லக‌ண்ணு, மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌வ‌ர், தா‌மிரபர‌ணி ஆ‌ற்‌றி‌ல் வரும‌் 5 ஆ‌ண்டுகளு‌க்கு மண‌ல் அ‌ள்ள உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை தா‌ம் வரவே‌ற்பதாக தெர‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ம் முழுவது‌ம் மண‌ல் அ‌ள்ளுவதை க‌ண்கா‌ணி‌க்க குழு அமை‌க்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதை சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ள அவ‌ர், அ‌ந்த உ‌த்தரவை அம‌ல்படு‌த்த அரசு ‌விரை‌ந்து நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். 

தா‌மிரப‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ள்ள‌ி வ‌ந்தவ‌ர்‌க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ல்லக‌ண்ணு வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஆ‌ற்‌றி‌ல் மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றிய அவ‌ர், ‌சிமெ‌ண்‌ட் ‌விலை இர‌ண்டு மட‌ங்கா‌கி இரு‌ப்பது ஏ‌ன் எ‌‌ன கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

அளவு‌க்கு அ‌திகமாக மண‌ல் அ‌ள்ள‌ப்படுவது கு‌றி‌த்து ம‌க்க‌ளிடமு‌ம் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்படு‌த்த‌ப்படுவது அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம் ந‌ல்லக‌ண்ணு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/04/1101204016_1.htm
read more...
தடையா‌ல் மண‌ல் ‌விலை உயராது: ந‌ல்லக‌ண்ணுSocialTwist Tell-a-Friend

தமிழ் மூலம் சீனம் பாடம்

0 comments
தமிழ் மூலம் சீனம் பாடம்

http://tamil.cri.cn/1/more/965/ZTmore965.htm
read more...
தமிழ் மூலம் சீனம் பாடம்SocialTwist Tell-a-Friend