பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

0 comments
சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 400 கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன்படி புதிதாக 831 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்த்தப்பட்டது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே என்பதால் பல்வேறு தரப்பினரும் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்வு தேதி அறிவிப்பு:

தேர்வு தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் (இரண்டுமே பத்தாம் வகுப்பு தரம்).

இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to http://thatstamil.oneindia.in/news/2010/12/17/tnpsc-announced-vao-examination-date.html
read more...
பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்புSocialTwist Tell-a-Friend

மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?

0 comments
தி. நந்தகுமார்First Published : 10 Dec 2010 12:18:00 AM IST

கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'.
மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப் பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?
read more...
மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?SocialTwist Tell-a-Friend

தடையா‌ல் மண‌ல் ‌விலை உயராது: ந‌ல்லக‌ண்ணு

0 comments
செ‌ன்னை: தா‌‌மிரபர‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ல்ல உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை அம‌ல்படு‌த்த து‌ரித நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய க‌ட்டு‌ப்பா‌ட்டு குழு‌த் தலைவ‌ர் ந‌ல்லக‌ண்ணு, மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌வ‌ர், தா‌மிரபர‌ணி ஆ‌ற்‌றி‌ல் வரும‌் 5 ஆ‌ண்டுகளு‌க்கு மண‌ல் அ‌ள்ள உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை தா‌ம் வரவே‌ற்பதாக தெர‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ம் முழுவது‌ம் மண‌ல் அ‌ள்ளுவதை க‌ண்கா‌ணி‌க்க குழு அமை‌க்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதை சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ள அவ‌ர், அ‌ந்த உ‌த்தரவை அம‌ல்படு‌த்த அரசு ‌விரை‌ந்து நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். 

தா‌மிரப‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ள்ள‌ி வ‌ந்தவ‌ர்‌க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ல்லக‌ண்ணு வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஆ‌ற்‌றி‌ல் மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றிய அவ‌ர், ‌சிமெ‌ண்‌ட் ‌விலை இர‌ண்டு மட‌ங்கா‌கி இரு‌ப்பது ஏ‌ன் எ‌‌ன கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

அளவு‌க்கு அ‌திகமாக மண‌ல் அ‌ள்ள‌ப்படுவது கு‌றி‌த்து ம‌க்க‌ளிடமு‌ம் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்படு‌த்த‌ப்படுவது அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம் ந‌ல்லக‌ண்ணு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1012/04/1101204016_1.htm
read more...
தடையா‌ல் மண‌ல் ‌விலை உயராது: ந‌ல்லக‌ண்ணுSocialTwist Tell-a-Friend

தமிழ் மூலம் சீனம் பாடம்

0 comments
தமிழ் மூலம் சீனம் பாடம்

http://tamil.cri.cn/1/more/965/ZTmore965.htm
read more...
தமிழ் மூலம் சீனம் பாடம்SocialTwist Tell-a-Friend

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்தது

0 comments
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த ஒரு கலசம் உடைந்து சிதறி விட்டது.

பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முகப்பு கோபுரமான கேரளாந்தகன் வாயிலைத் தாண்டி உள்ளே போனால், ராஜராஜன் வாயில் எனப்படும் கோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தில் சுண்ணாம்பு, செங்கற்களால் ஆன 5 கலசங்கள் உள்ளன. ஒவ்வொரு கலசங்களும் சுமார் 4 அடி உயரம் கொண்டவை.

தஞ்சையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்றும் அந்த மழை நீடித்தது. மழை பெய்து கொண்டிருந்தாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் காணப்பட்டது.

மாலை 4.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் மழையில் நனையாமல் இருப்பதற்காக ராஜராஜன் கோபுரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியது. அந்த மின்னல் ராஜராஜன் கோபுரத்திற்கு மேல் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் 4-வது கலசத்தின் மீது விழுந்து, இதில் கலசம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். இதனால் அங்கிருந்து ஓடினர்.

மின்னல் தாக்கிய அதிர்வின் காரணமாக கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவசரகால அலாரம் ஒலித்தது. இதனால் பெரிய கோவில் பெரும் பரபரப்பானது.

தகவல் அறி்நததும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மின்னல் தாக்கியதால் கோபுரத்திற்கு விரிசல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
thanks t o http://thatstamil.oneindia.in/news/2010/11/29/tanjore-rajarajan-tower-big-temple-kalasam.html
read more...
தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்ததுSocialTwist Tell-a-Friend

பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்

0 comments
முன்னாள் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரி முதல்வரான  பேராசிரியர் பி.விருத்தாசலம்  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும்  பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.

என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
நன்றி, வணக்கம்.

பேராசிரியர் பி.விருத்தாசலம் எழுதிய நூல்கள்
1. சான்றோர் சிந்தனைகள்
2. காவிரிக்கரை வேங்கடம்
3. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
4. கண்ணகி சிலம்பீந்த காரணம்
5. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
6. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
7. சிந்தனைச் சுடர்
read more...
பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்SocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன் மனைவி ஜாய் உடல்நலக்குறைவால் மரணம்

0 comments
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக தா.பாண்டியன் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

thanks to
http://thatstamil.oneindia.in/news/2010/11/17/cpi-secretary-tha-pandian-dies.html
read more...
தா.பாண்டியன் மனைவி ஜாய் உடல்நலக்குறைவால் மரணம்SocialTwist Tell-a-Friend

தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவு

0 comments

இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங் கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலை மைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.
எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகி றார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்து நேரடி யாக எந்த அழுத்தங் களை யும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தனது பயணத்தில் தமிழ்த் தலைமைகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா இந்திய நிலைப் பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க உள்ளார். “அரசியல் தீர்வு ஒன்றுக்கு வெளியாரின் தலை யீட்டை எதிர்பார்ப்பதைவிட சொந்த அரசியல் சாணக்கியங்களைக் கடைப்பிடித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணப்பட வேண் டும்.’ இதுவே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு. இதற்கு உதாரணமாக இந்திய வம்சாவளி மக்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு அமரர் தொண்டமான் கையாண்ட அரசியல் மூலோ பாயங்களை புதுடில்லி அரசபீடம் தமிழ்த் தலைமைகளுக்குச் சுட்டிக்காட்டி உள் ளது.
தனது இந்த நிலைப்பாட்டை இறுக்கமாகப் பேண முடிவு செய்துள்ளதால் அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தின் போது தீர்வு விடயம் குறித்து இலங்கை அரசுடன் அதிகம் பேசப்படாது என புது டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒப் புக்கு மட்டும் பேச்சுமூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறப்படும். இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துமாறு வலியுறுத்துவ தற்குப் பதிலாக, இந்தியா வழங்கும் உதவிக ளுக்கான பணிகளை விரைவுபடுத்து மாறே கிருஷ்ணாவின் பயணத்தின்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக் கப்படும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி யுள்ளவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக வீடமைப் புத் திட்டத்தை செயற்படுத்துவது, ரயில் பாதை புனரமைப்பது போன்ற உதவித் திட்டங்களை இலங்கையில் செயற் படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இத்திட் டங்களை விரைவுபடுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது பய ணத்தில் இலங்கை அரசிடம் வலியு றுத்துவார்.
மக்களுக்கான மனிதாபிமான உதவி களை மையப்படுத்தி இந்தியா வழங்கி யுள்ள உதவிகளை இலங்கை அரசு சரி யான முறையில் பயன்படுத்த வேண் டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசிடம் கோரவிருக்கின்றார். எது எப்படி இருப்பினும் இலங்கை யில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா தார் மீக ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று புதுடில்லி அதிகாரிகள் தெரிவித் தனர்.

thanks to http://www.alaikal.com/news/?p=50066
read more...
தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவுSocialTwist Tell-a-Friend

கண்ணன் பெரியாழ்வார்.

0 comments
வண்ணச் செஞ்சிறு விரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சம் உண்ணப் பெற்றிலேன்’






thanks to http://www.masusila.com/2010/11/blog-post_05.html
read more...
கண்ணன் பெரியாழ்வார்.SocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

0 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend