தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்தது

0 comments
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த ஒரு கலசம் உடைந்து சிதறி விட்டது.

பெரிய கோவில், பெருவுடையார் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் முகப்பு கோபுரமான கேரளாந்தகன் வாயிலைத் தாண்டி உள்ளே போனால், ராஜராஜன் வாயில் எனப்படும் கோபுரம் உள்ளது.

இந்த கோபுரத்தில் சுண்ணாம்பு, செங்கற்களால் ஆன 5 கலசங்கள் உள்ளன. ஒவ்வொரு கலசங்களும் சுமார் 4 அடி உயரம் கொண்டவை.

தஞ்சையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்றும் அந்த மழை நீடித்தது. மழை பெய்து கொண்டிருந்தாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் காணப்பட்டது.

மாலை 4.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் மழையில் நனையாமல் இருப்பதற்காக ராஜராஜன் கோபுரத்திற்கு கீழ் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியது. அந்த மின்னல் ராஜராஜன் கோபுரத்திற்கு மேல் வைக்கப்பட்டிருந்த கலசங்களில் 4-வது கலசத்தின் மீது விழுந்து, இதில் கலசம் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்தனர். இதனால் அங்கிருந்து ஓடினர்.

மின்னல் தாக்கிய அதிர்வின் காரணமாக கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டிருந்த அவசரகால அலாரம் ஒலித்தது. இதனால் பெரிய கோவில் பெரும் பரபரப்பானது.

தகவல் அறி்நததும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மாநில அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

மின்னல் தாக்கியதால் கோபுரத்திற்கு விரிசல் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
thanks t o http://thatstamil.oneindia.in/news/2010/11/29/tanjore-rajarajan-tower-big-temple-kalasam.html
read more...
தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது-கலசம் உடைந்ததுSocialTwist Tell-a-Friend

பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்

0 comments
முன்னாள் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரி முதல்வரான  பேராசிரியர் பி.விருத்தாசலம்  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும்  பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.

என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
நன்றி, வணக்கம்.

பேராசிரியர் பி.விருத்தாசலம் எழுதிய நூல்கள்
1. சான்றோர் சிந்தனைகள்
2. காவிரிக்கரை வேங்கடம்
3. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
4. கண்ணகி சிலம்பீந்த காரணம்
5. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
6. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
7. சிந்தனைச் சுடர்
read more...
பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்SocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன் மனைவி ஜாய் உடல்நலக்குறைவால் மரணம்

0 comments
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். சிறிது காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக தா.பாண்டியன் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

thanks to
http://thatstamil.oneindia.in/news/2010/11/17/cpi-secretary-tha-pandian-dies.html
read more...
தா.பாண்டியன் மனைவி ஜாய் உடல்நலக்குறைவால் மரணம்SocialTwist Tell-a-Friend

தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவு

0 comments

இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங் கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலை மைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன.
எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகி றார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்து நேரடி யாக எந்த அழுத்தங் களை யும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தனது பயணத்தில் தமிழ்த் தலைமைகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள அமைச்சர் கிருஷ்ணா இந்திய நிலைப் பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க உள்ளார். “அரசியல் தீர்வு ஒன்றுக்கு வெளியாரின் தலை யீட்டை எதிர்பார்ப்பதைவிட சொந்த அரசியல் சாணக்கியங்களைக் கடைப்பிடித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணப்பட வேண் டும்.’ இதுவே இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு. இதற்கு உதாரணமாக இந்திய வம்சாவளி மக்களுக்குக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு அமரர் தொண்டமான் கையாண்ட அரசியல் மூலோ பாயங்களை புதுடில்லி அரசபீடம் தமிழ்த் தலைமைகளுக்குச் சுட்டிக்காட்டி உள் ளது.
தனது இந்த நிலைப்பாட்டை இறுக்கமாகப் பேண முடிவு செய்துள்ளதால் அமைச்சர் கிருஷ்ணாவின் பயணத்தின் போது தீர்வு விடயம் குறித்து இலங்கை அரசுடன் அதிகம் பேசப்படாது என புது டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஒப் புக்கு மட்டும் பேச்சுமூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறப்படும். இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்துமாறு வலியுறுத்துவ தற்குப் பதிலாக, இந்தியா வழங்கும் உதவிக ளுக்கான பணிகளை விரைவுபடுத்து மாறே கிருஷ்ணாவின் பயணத்தின்போது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக் கப்படும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி யுள்ளவர்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்காக வீடமைப் புத் திட்டத்தை செயற்படுத்துவது, ரயில் பாதை புனரமைப்பது போன்ற உதவித் திட்டங்களை இலங்கையில் செயற் படுத்த இந்தியா முன்வந்துள்ளது. இத்திட் டங்களை விரைவுபடுத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது பய ணத்தில் இலங்கை அரசிடம் வலியு றுத்துவார்.
மக்களுக்கான மனிதாபிமான உதவி களை மையப்படுத்தி இந்தியா வழங்கி யுள்ள உதவிகளை இலங்கை அரசு சரி யான முறையில் பயன்படுத்த வேண் டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் இலங்கை அரசிடம் கோரவிருக்கின்றார். எது எப்படி இருப்பினும் இலங்கை யில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு இந்தியா தார் மீக ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்று புதுடில்லி அதிகாரிகள் தெரிவித் தனர்.

thanks to http://www.alaikal.com/news/?p=50066
read more...
தொண்டமான் வழியில் தீர்வு இந்தியாவின் இறுதி முடிவுSocialTwist Tell-a-Friend

கண்ணன் பெரியாழ்வார்.

0 comments
வண்ணச் செஞ்சிறு விரலனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சம் உண்ணப் பெற்றிலேன்’






thanks to http://www.masusila.com/2010/11/blog-post_05.html
read more...
கண்ணன் பெரியாழ்வார்.SocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend