

எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலமும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டன.
பண பலத்தைக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்பட்ட சூழ்நிலையில் சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. பிரபாகரன் உயிரோடு உள்ளார்: அமைதி பேச்சுவார்த்தைக்கு சென்ற சார்லஸ், நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலித்தலைவர்களை ராஜபக்சே அரசு நயவஞ்சமாக கொலை செய்து விட்டது.
இலங்கையில் போர் நிறுத்தம் என்ற விஷயத்தில் இந்திய அரசு கண்டிப்பாக இருந்திருந்தால் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பர். இனியாவது ஐ.நா., விரைந்து செயல்பட்டு இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்றி மறுவாழ்வுக்கு வழி வேண்டும். எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என்றார்.
நன்றி http://WWW.PATHIVU.COM
No comments:
Post a Comment