அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை

ராக்கிங் கொடுமையால் பெரியார் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டனர்.


மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 5 பள்ளி மாணவர்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 5 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 5 பேரும் திருநகரில் உள்ள கள்ளர் அரசு விடுதியில் தங்கி படித்து வருவது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில் மூத்த மாணவர்களின் கொடுமை தாங்காமல் விடுதியை விட்டு வெளியேறி விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து ரோந்து போலீசார் 5 மாணவர்களையும் மீட்டு திருநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். திருநகர் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு இருந்த வார்டனிடம் 5 மாணவர்களையும் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் விடுதி வார்டனிடம் மாணவர்களை யாரும் ராக்கிங் செய்ய அனுமதிக்ககூடாது. அப்படி செய்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் கொடுங்கள். நாங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் இனி உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றனர்.
thanks to http://tamilnadu.4tamilmedia.asia/index.php/chennai/1979-2011-07-08-16-27-47
அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமைSocialTwist Tell-a-Friend

No comments: