மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை

தஞ்சை வந்த மத்திய மந்திரி முனியப்பாவிடம் காமராஜர் தேசிய பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு புதிய விரைவு ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக விழுப்புரம் வரை உள்ள ரெயில் பாதையை மின்சாரமயமாக்க வேண்டும்.
 
திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து அரியலூர், தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பதிய ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும்.
 
தஞ்சை ரெயில்வே நிலையத்தில் மூன்றாவது கவுண்டரை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
thanks to http://www.maalaimalar.com/2011/07/31132136/new-train-service-chennai-to-t.html
மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

No comments: