பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்
read more...
குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி.!
இனவெறி தாக்குதல் காரணமாக, வரும் ஆண்டில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களின் வருகை குறையும் என்பதால், ஆஸ்ட்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது இந்த ஆண்டில் பல முறை இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.
விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது. thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/30/1091230089_1.htm
read more...
இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.
விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது. thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/30/1091230089_1.htm

'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'
மலேசியாவில் விரைவிலேயே இந்திய இனத்தவர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
read more...

வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!
திபெத்தியர்களால் வாழும் புத்தர் என்று போற்றப்படும் பெளத்த மதத் துறவியான ்பிர்பு ரின்போச்சே மீது ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தி, எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது சீன நீதிமன்றம்.
புத்தரின் 5வது அவதாரமாக திபெத்தியர்களால் கருதப்படும் ரின்போச்சேயை ‘புரன்கமா’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திபெத்தை சீனா கைப்பற்றிய 50வது ஆண்டையும், தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறிய நாளையும் நினைவுறுத்தி திபெத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ரின்போச்சேயை கைது செய்தது சீன அரசு.
read more...
புத்தரின் 5வது அவதாரமாக திபெத்தியர்களால் கருதப்படும் ரின்போச்சேயை ‘புரன்கமா’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திபெத்தை சீனா கைப்பற்றிய 50வது ஆண்டையும், தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறிய நாளையும் நினைவுறுத்தி திபெத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ரின்போச்சேயை கைது செய்தது சீன அரசு.

Subscribe to:
Posts (Atom)